போன வருஷம் தீபாவளிக்கு ரிலீசான "சர்கார்' படத்தில் விஜயுடன் ஜோடிபோட்டார் கீர்த்தி சுரேஷ். அதன்பின் தமிழிலும் சரி, தெலுங்கு, மலையாளத்திலும் சரி, கீர்த்தி சுரேஷுக்கு எந்தப் படமும் கமிட் ஆகவில்லை. ஹிந்திக்குப் போவதாக சமீபத்தில் பேச்சு அடி பட்டது. ஆனால் அங்கே சல்மான்கான் பிடியில் சிக்கி, அசின் பட்டபாட்டைக் கேள்விப்பட்டதும் கீர்த்தி சுரேஷுக்கு கிறுகிறுப்பு வந்துவிட்டதாம். ஆனாலும் அஜய்தேவ்கானுடன் ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார்.

kkk

தமிழிலும் தெலுங்கிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருந்த போதுதான், தெலுங்கில் நடித்த "மகாநடி' படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருது கிடைத்தது. தேசியவிருது கிடைத்த நல்ல நேரம், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் "த்ரில்லர்' படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். ஈஸ்வர் கார்த்திக் என்னும் புதுமுக இயக்குநர்தான் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை டைரக்ட் பண்ணுகிறார். முத்தையா டைரக்ஷனில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

reshma

Advertisment

லையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் சில படங்களிலும், ராதிகாவின் "வாணி ராணி' உட்பட சில டி.வி. சீரியல்களிலும் நடித்திருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்தப் பார்ட்டிக்கு பூர்வீகம் தெலுங்கு என்றாலும், பிறந்தது என்னவோ சென்னையில்தான். எழில் டைரக்ஷனில் ரிலீசான "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் சூரிக்கு ஜோடி போட்ட புஷ்பா கேரக்டர் என்றால், ரேஷ்மாவை ஏகப்பட்டபேருக்குத் தெரியும். சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் சார்பில் வழங்கும் விருது விழாவிற்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம தூக்கலாக வந்து, சிலருக்கு விருதும் வழங்கினார் ரேஷ்மா. 40 வயதான ரேஷ்மாவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கிறார்களாம். அநேகமாக அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிப ருக்கு ரேஷ்மாவின் மாப்பிள்ளையாகும் லக்கி சான்ஸ் கிடைக்கலாம்.

சினிமாக்களின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டுவிழா உட்பட எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிலும் தலைகாட்டாதவர் கவிஞர் சினேகன். சினிமா எடுத்த வகையில் சிலரை நம்பி பல லட்சங்களை இழந்து கடனாளியானவர். மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தே ஆகவேண்டும் என்ற கணக்குடன், இப்போது எல்லா சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆஜராகிவிடுகிறார் சினேகன்.

லைஞர் டி.வி.யில் ஞாயிற்றுக்கிழமைதோறும் "நெஞ்சே எழு' நிகழ்ச்சியை நடத்திவருகிறார் கவிஞர் பா. விஜய். இந்த டி.வி. நிகழ்ச்சியின் ஷூட்டிங் பிஸிக்கிடையிலும், சினிமா பாடல்கள் எழுதுவதிலும் கவனம் செலுத்தும் பா. விஜய், ஒரு பாடலுக்கு, படத்தின் தயாரிப்பு நிறுவனம், டைரக்டரைப் பொருத்து 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வாங்குகிறாராம்.

Advertisment

aa

"நேர்கொண்ட பார்வை' வசூல்ரீதியாக ஓஹோ என இல்லாவிட்டாலும் ஓ.கே. ரகம்தான். "வீரம்', "வேதாளம்', "விஸ்வாசம்' என மாஸ் ஹீரோவாக நடித்தாலும், தனது கேரியரில் மிக முக்கியமான படமாக "நேர் கொண்ட பார்வை'-யை நெஞ்சம் நிறைய சந்தோஷத்துடன் நினைக்கி றார் அஜீத். "நேர் கொண்ட பார்வை'-யைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியும் அஜீத்துக்குப் போன் போட்டு, ""பென்டாஸ்டிக்'' என்று பாராட்டியுள்ளார். அடுத்ததாக அஜீத் நடிக்கவுள்ள அதிரடி படத்தையும் "நே.கொ.பா.' எச். வினோத்தான் டைரக்ட் பண்ணுகிறார், போனி கபூர்தான் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் 40 நாட்கள் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளதாம். போனிகபூரின் செல்வாக்கால், தீபிகா படுகோன் அல்லது அனுஷ்கா சர்மா ஆகிய இருவரில் ஒருவர் அஜீத்திற்கு ஜோடியாகலாம்.

கஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, 22-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டது "கென்னடி கிளப்'. காரணம் படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணியிருக்கும் சுசீந்திரனின் இதற்கு முந்தைய மூன்று படங்கள் ஓடாததால், விநியோகஸ்தர்கள் மத்தியில் "கென்னடி கிளப்'-பிற்கு வரவேற்பு இல்லை.

kenndyclub

தமிழகம் முழுவதும் மொத்தமே மூன்று ஏரியாக்கள்தான் "கென்னடி கிளப்' பிஸ்னஸ் ஆனதால், அப்செட்டான சுசீந்திரன், பல விநியோகஸ்தர்களை தாஜா பண்ணி, 22-ஆம் தேதி ரிலீஸ் பண்ணி இருக்கார்.

bb

"கென்னடி கிளப்' பிஸ்னஸ் ஆவதில் பிசுபிசுப்பு ஏற்பட்டது ஹீரோ சசிகுமாரையும் ரொம்பவே அப்செட்டாக்கியுள்ளது. எஸ்.ஆர். பிரபாகரன் டைரக்ஷனில் சசிகுமார்- மடோனா செபஸ்டின் ஜோடி போட்ட "கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்தும் பிஸ்னஸ் ஆவது பெரும் பிரச்சினையாக இருக்கிறதாம். இதேபோல் டி.டி. ராஜா தயாரிப்பில் சசிகுமார்- நிக்கி கல்ராணி காம்பினேஷனில் "ராஜவம்சம்' படமும் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இதற்கடுத்து என்.வி. நிர்மல்குமார் டைரக்ஷனில் சரத்குமார்- சசிகுமார் இணைந்திருக் கும் "நா நா' படத்தின் ஷூட்டிங் கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டி ருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரிப் பில் ஒரு படத்திலும் நடிக்கிறார். "கென்னடி கிளப்' படத்திற்கு வந்த பிஸ்னஸ் சிக்கல்போல, வரிசை கட்டி நிற்கும் தனது படங்களுக்கும் வந்துவிடுவோ என்ற "அப்செட்' மனநிலைதான் சசிகுமாரை வாட்டி வதைக்கிறதாம்.

bb

காமெடி சூரியும் வெற்றிமாறன் டைரக்ஷனில் கதாநாயகனாகி விட்டார். ஹீரோவான சந்தோஷமோ என்னமோ, தனது தம்பிக்கு சொந்தமாக வீடு வாங்கிக்கொடுத்து, அவரையே தனது மேனேஜராக்கி விட்டாராம் சூரி.

aaf

சுந்தர்.சி.யின் "வின்னர்' படத்திற்குப்பின் தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தார் கிரண். பல வருட கேப்பிற்குப்பின் அதே சுந்தர்.சி. டைரக்ஷனில் விஷால் நடித்த "ஆம்பள'-யில் கமிட் ஆனார். மறுபடியும் தமிழ் சினிமாவில் கேப் விழுந்துவிட்டதால், தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டர்களுக்கு ஃபோன் போட்டு, ""ஏதாவது சான்ஸ் இருந்தா கொடுங்க... கிளாமர் தூக்கலா இருந்தாலும் ஓ.கே.'' என்கிறாராம் கிரண்.

katt

கார்த்தி நடித்து, பாண்டிராஜ் டைரக்ட் பண்ணிய "கடைக்குட்டி சிங்கம்' சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த "கடைக்குட்டி சிங்க'த்தின் செகண்ட் பார்ட்தான், இப்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து, பாண்டிராஜ் டைரக்ட் பண்ணி, ஷூட்டிங் முடிவடையும் நிலையில் இருக்கும் "நம்ம வீட்டுப் பிள்ளை' என்கி றார்கள் கோடம் பாக்கத்தில்.