""நடிப்பு என்றால் என்னவென்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அதெல்லாம் முற்றிலும் தவறாகி விட்டது. ஒரு நாள் காலைமுதல் மாலைவரை அவர் நினைத்தமாதிரி நடிப்பு வரவில்லை. "நாளை பார்க்கலாம்' என்று கூறிவிட்டார். அன்றிரவு எனக்கு நடிப்பு வரவில்லை.

bb

மருத்துவராகவே இருந்துவிடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே டேக்கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல் என் அம்மா உங்களிடம் பேசினார்களா என்று செல்வராகவனிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை, ""நான் கேட்டது கிடைத்துவிட்டது.'' என்று கூறினார்.

Advertisment

"என்.ஜி.கே.' படத்தில் நடித்தது பற்றியும், டைரக்டர் செல்வராகவனைப் பற்றியும் இப்படி புளகாங்கிதப் படுகிறார் சாய்பல்லவி.

""செல்வராகவன் மற்ற இயக் குநர்களிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக்கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார்.

படப்பிடிப்பு தளத்தில் யாரும், யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்கவேண்டும், இப்படி நடக்கவேண்டுமென்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

Advertisment

அதேபோல், 3 நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார்.

நடிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எடிட்டிங் செய்யும்போது காட்சி தெளிவாக வருவதற்கு, ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது. 3 நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும். முகத்தில் மட்டுமல்ல, உடலிலிலும் அந்த கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார். செல்வராகவன் ""இப்படிச் சொல்வது "என்.ஜி.கே.'வின் இன்னொரு ஹீரோயினான ரகுல் ப்ரீத் சிங்தான்.

ஹாலிவுட்டின் டாப்-3 கான்களோடு ஜோடிபோட்டு, பாக்ஸ் ஆபீஸிலும் ஹிட் கொடுத்தவர் நடிகை அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அதன் பிறகும் சில வெற்றிப்படங் களில் நடித்தார். ஏன் அடிக்கடி வெள்ளித்திரையில் காண முடியவில்லை என்று அவரிடம் கேட்டதற்கு, ""ஒரு நடிகையாக நான் நல்லதொரு இடத்தை அடைந்து விட்டேன் என்றே நம்பு கிறேன். அதனால், கடமைக்கு படங் களை நடித்து வைக்க விரும்ப வில்லை. என்னை சோதிக்கும், திறமைக்கு தீனிபோடும் கதைகள் வரும்போது, நானும் திரையில் வருவேன்'' என்று கூறிவிட்டார். அனுஷ்கா சர்மா.

gg

டிகை கத்ரீனா கைஃப், பாலிவுட்டின் டாப் ஹீரோயின். டாப் ஹீரோக்களில் ஒருவரான ரன்பீர் கபூருடன் ரொம்பகாலம் டேட்டிங் சென்றுகொண்டிருந்தார். திடீரென்று 2016-ல் அவர்கள் பிரேக் கப் செய்துவிட்டதாக செய்தி வெளி யானது. இதைப்பற்றி கத்ரீனா வெளியில் வாய் திறக்கவில்லை. ரன்பீரோ இன்னொரு டாப் ஹீரோயினான அலியா பாட்டுடன் டேட்டிங் கிளம்பிவிட்டார். தற்போது ரன்பீர் உடனான பிரேக்கப் குறித்து வாய்திறந்திருக்கும் கத்ரீனா, ""அது மிகக் கொடூர மானது. உலகமே இடிந்து போனதைப் போன்ற உணர் வைத் தந்தது. வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்'' என தன் வருத் தத்தை விளக்கி இருக்கிறார்.

"தோனி' படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமான திஷா படானி, "பாகி-2' பட ஹிட்டின்மூலம் வேற லெவலுக்கு போய்விட்டார். டைகர் ஷ்ராஃப்பு டன் டேட்டிங்கும் சென்று கொண்டிருக்கிறார். இதற்குமுன், டிவி நடிகர் பர்த் சம்தானை ஒரு வருடமாகக் காதலித்தாராம். ஆனால், "பிக் பாஸ்' புகழ் விகாஷ் குப்தாவுடன் பர்த் சம்தான் ரகசிய டேட்டிங் டூர் சென்றது தெரிந்துபோனதால், அவரை திஷா பிரேக்கப் செய்திருக்கிறார். இந்த விஷயமே இப்போதான் டைகருக்குத் தெரியுமென்று பாலிவுட் வட்டாரம் கிசுகிசுத்தாலும், ரெண்டுபேரும் சிக்கென்று ஒட்டியே திரிகின்றனர்.

kk

பாலிவுட் பிரபலம் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே, "ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்-2' படத்தின்மூலம் பாலிவுட் திரையுலகிற்கு வந்திருக்கிறார். படத்தில் டைகர் ஷ்ராஃப், தாரா சுதாரியா ஆகியோர் நடிக்க, ரிலீஸாகி சக்கைப்போடு போடுகிறது. சித்தார்த் மல்கோத்ரா, அலியா பாட் போன்றவர்களை அறிமுகப்படுத்திய படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் நல்ல வரவேற்பு. இந்தப் படத்தில் டைகருடனான லிப்-லாக் சீன் பற்றிப் பேசியிருக்கும் அனன்யா, ""இதற்குமுன் யாருக்கும் நான் இதழ் முத்தம் கொடுத்ததில்லை; புதிய அனுபவம். டைகர் இந்த உலகின் மிகச்சிறந்த முத்தக்காரராக இருப்பார் என்று நினைக்கிறேன்'' என வெட்கத்தோடு சொல்லியிருக்கிறார்.

ப்பாவாக சத்யராஜ், மகளாக ஜோதிகா, மகனாக கார்த்தி நடித்துவரும் படத்தை டைரக்ட் பண்ணிவருகிறார் "பாபநாசம்' புகழ் ஜீது ஜோசப். கார்த்தியின் நிஜவாழ்க்கை யில் அண்ணியான ஜோதிகா இப்படத் தில் அக்காவாக வருகிறார். ஊட்டி யில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு, சமீபத்தில் அந்த செட்டில் கல்யாண சீன் ஒன்றை ஷூட் பண்ணினாராம் ஜீது ஜோசப்.

"தமிழ்ப்படம்', "தமிழ்ப்படம்-2' படங்களின் டைரக்டர் சி.எஸ். அமுதன், அடுத்ததாக விஜய் ஆண்டனியை வைத்து படம் டைரக்ட் பண்ணுகிறார். விஜய் ஆண்டனி இப்போது நடித்துவரும் மூன்று படங்கள் முடிந்ததும், அமுதன் படத்தில் நடிக்கிறார். இனிமேல் சொந்தமாக படங்களைத் தயாரிப்ப தில்லை என்ற முடிவுக்கும் வந்துள் ளாராம் விஜய் ஆண்டனி.

தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர்- நடிகை ஜீவிதா தம்பதிகளின் மகள் ஷிவானி, விஷ்ணு விஷால் தயாரித்த "கவரிமான் பரம்பரை'படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் பட ரிலீசுக்குப்பின் தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற நம்பிக்கையில் இருந் தார் ஷிவானி. ஆனால் மனைவியை விவாகரத்து செய்தது உட்பட, பல குடும்ப பிரச்சினைகளால் முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் "கவரிமான் பரம்பரை' படத்தை டிராப் பண்ணிவிட்டாராம் விஷ்ணு விஷால். படம் கைவிடப்பட்டதால் ஒன்றரைக்கோடி அவுட்.

tt

""என்னோட தங்கச்சி படிப்புக்காக மும்பையில சில வருஷங்கள் இருந்துட்டேன். அதனால தமிழ் சினிமாவுல கேப் விழுந்துருச்சு. இப்ப தங்கச்சி படிப்பு முடிஞ்சுட்ட தால மீண்டும் நடிப்புக் களத்தில் குதிக்கப் போறேன்'' என ஸ்டேட் மெண்ட்விட்டு, ஃப்ரஷ்ஷாக போட்டோக்களையும் ரிலீஸ் பண்ணினார் "கருவாப்பயா' பாட்டு புகழ் கார்த்திகா. ""தங்கச்சி படிப்புங்கிறதெல்லாம் சூப்பர் கப்சா. கார்த்திகாவுக்கு கல்யாண மாகி ஆண் குழந்தையும் இருக்கு. பையனுக்கு இப்ப ஏழு வயசாகுது. கணவரோட வருமானமும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பையனும் வளந் துட்டதால மீண்டும் சினிமாவுக்கு வந்துட்டாரு'' என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.