""சாய்பல்லவி மட்டும் இல்லைன்னா இந்த "கரு' படமே உருவாகி யிருக்காது. அப்படி ஒரு பெர்ஃபாமென்சில் அசத்தியிருக்காரு'' என ரொம்பவே, பல்லவி பாடுகிறார் டைரக்டர் ஏ.எல். விஜய்.
இப்படியெல்லாமாடா டைட்டில் வப்பாய்ங்கன்னு யோசிக்கிற அளவுக்கு "ஏண்டா தலைல எண்ணெய் வக்கல'- அப்படின்னு ஒருபடம் வந்துச்சு. ஏண்டா படத்துல கதை வைக்கலன்னு கேக்குற அளவுக்கு விமர்சனமும் வந்துச்சு. அதுல ஹீரோயினா நடிச்ச சஞ்சிதா ஷெட்டி, வெங்கட் பிரபுவின் "பார்ட்டி' முடிச்சுட்டு, "பல்லுபடாம பாத்துக்க'-ன்னு ஏடாகூட படத்துல கமிட் ஆகியிருக்காராம்.
வெளிநாட்டுக் காதலருடன் (இவுகளுக்கெல்லாம் எப்படித்தான் ஃபாரின்காரய்ங்க சிக்குறாய்ங்களோ) ஜாலிலியாக ரவுண்ட் அடித்த இலிலியானாவுக்கு இந்தியில் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், ""தமிழ், தெலுங்கு டைரக்டர்களிடம் நல்ல கதை இருந்தா சொல்லுங்க'' என பிரஸ் பீப்புள்மூலம் தூதுவிடுறாராம்.
அழகான குடும்பத் தலைவி யாகவும் ரேடியோ ஜாக்கியாகவும் வித்யாபாலன் இந்தியில் நடித்த படம் "தும்ஹாரி சுலு.' இதன் தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவை டைரக்ட் பண்ணுகிறார் ராதாமோகன். இதே ராதாமோகனின் "மொழி'-யை தனது சைகை பாஷையால் பேசவைத்தவர் ஜோதிகா. ரீமேக்தான் என்றாலும் இது ஜோதிகாவின் சினிமா லைஃபில் முக்கியப் படமாக இருக்கும் என்கிறார் ராதாமோகன்.
ஆர்யாவுடன் "கஜினிகாந்த்', கார்த்தியுடன் "கடைக்குட்டிச் சிங்கம்' என பிஸியாக இருக்கும் சாயிஷா சைகல், எப்படியாவது விஜய்க்கு ஜோடி போட்டே ஆகணும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கிறார்.
டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் "டிராபிக் ராமசாமி' படத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி, அம்பிகா, கஸ்தூரி, ரோகிணி, ஆர்.கே. சுரேஷ், மனோபாலா என நட்சத்திரப் பட்டாளமே இருக்க, இப்போது இந்தப் பட்டாளத்துடன் "நாம் தமிழர்' அண்ணன் சீமானும், காங்கிரஸ் குஷ்புவும் இணைந்திருக்கிறார் கள். ஜோடியாக அல்ல; தனித் தனியாகத்தான்.
நீண்ட நெடுங் காலத்துக்குப்பிறகு நாகார்ஜுனாவும் டைரக்டர் ராம்கோபால் வர்மாவும் "ஆபீசர்' படம்மூலம் கைகோர்க்கிறார்கள். அதிரடி க்ரைம் போலீசாக நாகார்ஜுனா கலக்கியிருக்கும் இப்படம் இப்போதைக்கு இந்தி, தெலுங்கில் வருகிறது. இதன் ரிசல்ட்டைப் பார்த்து விட்டு, தமிழில் வந்தாலும் வரும்.
""மணிரத்னம்ஜியின் "காற்று வெளியிடை'-யில் நடித்தேன். இப்ப மீண்டும் அவரின் "செக்கச் சிவந்த வானம்' படத்திலும் இருக்கிறேன். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்'' என அதிகமாகவே மணி புராணம் பாடுகிறார் அதிதிராவ் ஹைத்ரி.
அஜீத்- டைரக்டர் சிவா நான்காவது முறையாக இணையும் "விசுவாசம்' படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நான்கு பிரம்மாண்ட செட்டுகள் போடும் பணிகள் நிறைவடைந்து ஏப்ரலிலில் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலிலி செலுத்தப்பட்டது. சூர்யா- விஜய் போன்ற பெரிய ஹீரோக்களையே சுத்தலிலில் விடும் டைரக்டர் கௌதம்மேனன், அருண்விஜய்யை மட்டும் விட்டுவைப்பாரா என்ன? ஒரு வெயிட் பார்ட்டியை அமுக்கி, சில கோடிகளை இறக்கி, அருண்விஜய்யை ஹீரோவாக்கி, இரண்டு நாள் ஷூட்டிங்கும் நடத்தினார் கௌதம். அத்தோடு சரி, படத்தை இழுத்து மூடிவிட்டார். எப்படியும் கூப்பிடுவாருன்னு நம்பிக்கெட்டார் அருண்விஜய். எப்பங்க படத்தை எடுப்பீங்கன்னு ஏங்கிக்கிடக்கிறார் கள் பணம் போட்ட பார்ட்டிகள்.
அறிவழகன் டைரக்ஷனில் நயன்தாரா நடிப்பதற்குப் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், லைக்கா கம்பெனியின் "கோலமாவு கோகிலா'-வில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு நயனுக்கு சம்பளம் கொடுத்துள்ளதாம் லைக்கா. காதலர் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாகச் சுற்றினாலும் சம்பாதிப்பதிலும் கெட்டிக்காரியாக இருக்கிறார் நயன்தாரா.
அந்தக் காலத்து ஹீரோயின் ஸ்ரீப்ரியா டைரக்ஷனில் அந்தக் காலத்தில் வந்த "நீயா?' செமஹிட். இந்தக் காலத்தில் "நீயா-2' தயாராகிறது. இதில் பாம்புப் பெண்ணாக கலக்க வரும் வரலட்சுமி, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் படத்திலும் வில்லிலியாக கலக்கப் போறாராம்.
வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "வடசென்னை'-யின் முதல் பாகம் முழுவதுமாக முடிந்து போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறார் டைரக்டர் சமுத்திரக்கனி.
"த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா'-வுக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ஷனில் காதல், காமெடி படத்தில் நடித்துவரும் ஜீ.வி. பிரகாஷுக்கு ஜோடிபோடுகிறார் அமைரா தஸ்தூர். முழுக்க முழுக்க 3-டி கேமராவில் படம் எடுப்பதால், படத்துக்கு டைட்டிலும் 3-டி தானாம்.
மூன்று வருஷம் கழித்து ஹீரோவாக நடிக்கவருகிறார் டைரக்டர் சேரன்.
"ஜெயம்' ரவி நடித்த "மழை'-யை இயக்கிய ராஜ்குமார்தான் சேரன் படத்தை இயக்குகிறார். ஹீரோயின் செலக்ஷன் நடந்து வருகிறது.
பாலா டைரக்ஷனில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் "வர்மா' ஷூட்டிங் நேபாளத்தில் செம ஸ்பீடாகப் போய்க்கொண்டிருக்கிறது. துருதுரு இளைஞனான துருவ்வை நீளமான தலைமுடி, நீண்டு வளர்ந்த தாடி என ஆளையே மாற்றிவிட்டார் பாலா.
கையில் வரிசையாக ஏழெட்டுப் படங்கள் வைத்திருந்தாலும் தனது கட்சியான தி.மு.க.வின் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் கவனம் செலுத்திவருகிறார் இமான் அண்ணாச்சி. இந்த மாதம் முழுவதும் மு.க.ஸ்டாலிலின் பிறந்தநாள் வாழ்த்தரங்கம், கருத்தரங்கங்களில் இமான் அண்ணாச்சி செம பிஸி.
பொன்ராம் டைரக்ஷனில் "சீமராஜா'-வில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக "இன்று நேற்று நாளை' படத்தை டைரக்ட் பண்ணிய ரவிக்குமார் டைரக்ஷனில் நடிக்கிறார். வேற்றுக் கிரகவாசிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் கதையான இப்படத்தில் விஞ்ஞானியாக வேஷம் கட்டுகிறாராம் சிவகார்த்திகேயன். சிவாவுக்கு ஜோடி ராகுல் பிரீத்சிங், தயாரிப்பு 24 பிரேம்ஸ் ஆர்.டி. ராஜா.
அஜீத்- டைரக்டர் சிவா நான்காவது முறையாக இணையும் "விசுவாசம்' படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நான்கு பிரம்மாண்ட செட்டுகள் போடும் பணிகள் நிறைவடைந்து ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது.
சூர்யா- விஜய் போன்ற பெரிய ஹீரோக்களையே சுத்தலில் விடும் டைரக்டர் கௌதம்மேனன், அருண்விஜய்யை மட்டும் விட்டுவைப்பாரா என்ன? ஒரு வெயிட் பார்ட்டியை அமுக்கி, சில கோடிகளை இறக்கி, அருண்விஜய்யை ஹீரோவாக்கி, இரண்டு நாள் ஷூட்டிங்கும் நடத்தினார் கௌதம். அத்தோடு சரி, படத்தை இழுத்து மூடிவிட்டார். எப்படியும் கூப்பிடுவாருன்னு நம்பிக்கெட்டார் அருண்விஜய். எப்பங்க படத்தை எடுப்பீங்கன்னு ஏங்கிக்கிடக்கிறார் கள் பணம் போட்ட பார்ட்டிகள்.
அறிவழகன் டைரக்ஷனில் நயன்தாரா நடிப்பதற்குப் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், லைக்கா கம்பெனியின் "கோலமாவு கோகிலா'-வில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு நயனுக்கு சம்பளம் கொடுத்துள்ளதாம் லைக்கா. காதலர் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாகச் சுற்றினாலும் சம்பாதிப்பதிலும் கெட்டிக்காரியாக இருக்கிறார் நயன்தாரா.
அந்தக் காலத்து ஹீரோயின் ஸ்ரீப்ரியா டைரக்ஷனில் அந்தக் காலத்தில் வந்த "நீயா?' செமஹிட். இந்தக் காலத்தில் "நீயா-2' தயாராகிறது. இதில் பாம்புப் பெண்ணாக கலக்க வரும் வரலட்சுமி, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் படத்திலும் வில்லிலியாக கலக்கப் போறாராம்.
வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "வடசென்னை'-யின் முதல் பாகம் முழுவதுமாக முடிந்து போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறார் டைரக்டர் சமுத்திரக்கனி.
"த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா'-வுக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ஷனில் காதல், காமெடி படத்தில் நடித்துவரும் ஜீ.வி. பிரகாஷுக்கு ஜோடிபோடுகிறார் அமைரா தஸ்தூர். முழுக்க முழுக்க 3-டி கேமராவில் படம் எடுப்பதால், படத்துக்கு டைட்டிலும் 3-டி தானாம்.
மூன்று வருஷம் கழித்து ஹீரோவாக நடிக்கவருகிறார் டைரக்டர் சேரன்.
"ஜெயம்' ரவி நடித்த "மழை'-யை இயக்கிய ராஜ்குமார்தான் சேரன் படத்தை இயக்குகிறார். ஹீரோயின் செலக்ஷன் நடந்து வருகிறது.
பாலா டைரக்ஷனில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் "வர்மா' ஷூட்டிங் நேபாளத்தில் செம ஸ்பீடாகப் போய்க்கொண்டிருக்கிறது. துருதுரு இளைஞனான துருவ்வை நீளமான தலைமுடி, நீண்டு வளர்ந்த தாடி என ஆளையே மாற்றிவிட்டார் பாலா.
கையில் வரிசையாக ஏழெட்டுப் படங்கள் வைத்திருந்தாலும் தனது கட்சியான தி.மு.க.வின் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் கவனம் செலுத்திவருகிறார் இமான் அண்ணாச்சி. இந்த மாதம் முழுவதும் மு.க.ஸ்டாலிலின் பிறந்தநாள் வாழ்த்தரங்கம், கருத்தரங்கங்களில் இமான் அண்ணாச்சி செம பிஸி.
பொன்ராம் டைரக்ஷனில் "சீமராஜா'-வில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக "இன்று நேற்று நாளை' படத்தை டைரக்ட் பண்ணிய ரவிக்குமார் டைரக்ஷனில் நடிக்கிறார். வேற்றுக் கிரகவாசிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் கதையான இப்படத்தில் விஞ்ஞானியாக வேஷம் கட்டுகிறாராம் சிவகார்த்திகேயன். சிவாவுக்கு ஜோடி ராகுல் பிரீத்சிங், தயாரிப்பு 24 பிரேம்ஸ் ஆர்.டி. ராஜா.