எஸ்.ஏ. சந்திரசேகரின் "கேப்மாரி' செம ஊத்து ஊத்தியதால் அப்செட்டில் இருக்கும் ஜெய், "பிரேக்கிங் நியூஸ்' படம் தன்னை கைதூக்கிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இருந்தாலும் சினிமாவை இனிமேல் முழுசா நம்பமுடியாது என்ற முடிவுடன் வெப்சீரிஸில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஒரு வெப்சீரியலுக்கு 30 நாட்கள் கால்ஷீட் கொடுக்கும் ஜெய்யின் குணாதிசயத்திற்கு ஏற்ப கோல்டன் பீச், கோவளம் பீச் ஏரியாக்களின் ஷூட்டிங் நடந்துவருகிறது.
"ஒத்த செருப்பு'-விற்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, "இரவின் நிழல்' என்ற படத்தை ஆரம்பித்திருக்கிறார் ரா. பார்த்திபன். இந்தப் பட வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே "நடுகவுண்டர்' என்ற காமெடி கதையையும் ரெடி பண்ணிவிட்டாராம் ரா. பார்த் திபன். இந்த காமெடிக்கதையில் கலக்கப்போவது யாருன்னா... சாட்சாத் ரா. பார்த்திபனும் வைகைப்புயல் வடிவேலும்தான். பிப்ரவரி கடைசியில் "நடுகவுண்டர்' ஷூட்டிங் ஆரம்பம்.
ஒரு வருடத்திற்குமுன்பு டைரக்டர் அமீரை ஹீரோவாக போட்டு. "பேரன்பு கொண்ட பெரியோர்களே' என்ற படத்தை ஆரம்பித்தார் தயாரிப்பாளர் ஆதம் பாவா. ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடந்த அந்தப் படத்தைத்தான் இப்போது தூசி தட்டி "நாற்காலி' யாக்கியுள்ளார் ஆதம் பாவா. இப்படத்தை வி.இசட். துரை டைரக்ட் பண்ணிவருகிறார். "மாமனிதன்' படத்தில் நடித்த பாதிப்பேருக்கு சம்பளம் செட்டில் செய்யப்படாததால், படத்தையே கிடப்பில் போட்டுவிட்டாராம் சீனு ராமசாமி. ஞானக்கிறுக்கனாக இப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ரொம்பவே அப்செட்டில் உள்ளாராம்.
குணச்சித்திர கேரக்டர்களில் ஜொலிக்கும் சரண்யா பொன்வண்ணன், சென்னை புறநகரான குன் றத்தூரில் மூன்று ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை வாங்கியுள்ளார். தனது இரு மகள்களுக்காக உடற்பயிற்சிக் கூடத்தையும் அந்தப் பண்ணை வீட்டில் உருவாக்கியுள்ளார் சரண்யா. காமெடி செந்திலின் நண்பர்கள், தங்களது வீட்டு விசேஷங்களுக்கு அவரை அழைத்தால் எந்தவித எதிர் பார்ப்பும் இல்லாமல் மனசு நிறைய மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கிறார்.
இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப் பாகிக்கொண்டிருக்கும் "ராசாத்தி' சீரியல் ஷூட்டிங்கிலும் பிஸியாக உள்ளார் செந்தில். நீண்டநாட்களுக் குப்பிறகு "காளிதாஸ்' படம் தன்னை கைதூக்கி விட்டதால் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளார் பரத். இந்த மகிழ்ச்சியைப் புத்தாண்டு தினத்தன்று, தனது வீட்டின் அருகே உள்ள நாகாத்தம்மன் கோவிலில் 108 தேங் காய் உடைத்துக் கொண்டாடியுள்ளார்.
டைரக்டர் கே.எஸ். ரவிக்குமாரின் ஆரம்பகாலப் படங்களில் ஆஸ்தான வசனகர்த் தாவாக, இணை இயக்குநராக இருந்தவர் ஈரோடு சௌந்தர். இவர் இப்போது டைரக்ட் பண்ணிவரும் "உள்ளேன் ஐயா' படத்தில், குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துள்ளார் ரவிக்குமார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை 60 நாட்களில் முடித்து அசத்தியிருக்கும் ரவிக்குமாருக்கு சம்பளம் பத்து கோடி ரூபாயாம். சமூக சேவைகளில் அதிக நாட்டமும் ஆர்வமும் உள்ளவர் நடிகர் ஆரி. இந்தப் புத்தாண்டிலிருந்து தனது பெயரை ஆரி அருஜுனா என பெயரை மாற்றியுள்ளார். இனிமேல் தன்னைப் பற்றிய செய்திகளோ, புகைப்படங்களோ வரும்போது ஆரி அருஜுனா எனக் குறிப்பிடுமாறு பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 நாட்கள், தினசரி 6 மணி நேரம் மட்டுமே ஷூட்டிங் நடத்தி, "370' என்ற படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணியுள்ளார் பாபு கணேஷ். ஹீரோவாக ரிஷிகாந்த், ஹீரோயினாக மெகாலி மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன், கராத்தே கோபால் ஆகியோர் நடித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பச்சைக் கிளி மெஹ்ரின் பிர்சடா பெரும் பாலும் தெலுங்குப் படங்களில் தான் கவனம் செலுத்திவந் தார். தெலுங்கில் விஜய் தேவரஹொண்டாவுடன் நடித்த "நோட்டா' எக்குத் தப்பாக ஹிட் அடித்ததால், வாய்ப்புகள் வரிசைகட்டி வந்தன. தமிழில் சுசீந்திரனின் "நெஞ்சில் துணிவிருந்தால்' படம்மூலம் என்ட்ரியானார். அந்தப் படம் ரிலீசாச்சு, ஆனா ஆகல என்ற கதைதான். இனிமேல் தமிழில் காலூன்ற வேண்டுமென்ற முடிவுடன் ஃப்ரஷ் ஃபோட்டோ ஷூட் நடத்தி தனது பி.ஆர்.ஓ.மூலம் இன்டஸ்ட்ரியில் உலாவ விட்டுள்ளார் மெஹ்ரின். சமீபத்தில் ரிலீசான "நான் அவளை சந்தித்த போது' படத்தின் ரிசல்ட் நெகடிவ்வாக போய்விட்டதால் அப்செட்டில் இருந்தார் சாந்தினி தமிழரசன். ஆனால் இப்போது முடிவடையும் கண்டிஷனில் இருக்கும் ராதா மோகனின் "பொம்மை' படம்மூலம் மார்க்கெட்டை கெட்டியாகப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கார் சாந்தினி. எஸ்.ஜே. சூர்யா-ப்ரியா பவானி சங்கர் ஜோடிபோடும் இந்த "பொம்மை'-யில் ராதா மோகனின் ஸ்பெஷல் ட்ரீட்ஸ் உள்ளதாம்.
சினிமாவில் ஹீரோயினுக்கு தோழியாக, விவேக், சந்தானத் திற்கு ஜோடியாக பளிச்சென வருபவர் நீலிமா ராணி. சினிமா ஒரு பக்கம் என்றாலும் டி.வி. சீரியல்களில் நடிப்பதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனது கணவர் இசையின் உதவி யுடன் சீரியல் தயாரிப்பிலும் இறங்கி யுள்ள நீலிமா, "எனது இந்த வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணம் ராதிகா மேடம்தான்' என அடிக்கடி சொல்வார்.
"தர்பார்' ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் கமல் குறித்து சர்ச்சையாகப் பேசி, ரஜினியின் அதிருப்திக்குள்ளா னார் ராகவா லாரன்ஸ். அந்த விழா நடந்து முடிந்த சில நாட்கள் கழித்து கமலை நேரடியாக சந்தித்து விளக்கம் சொன்ன, ராகவா ஜன. 2-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் இருந்த ரஜினியை சந்தித்துள் ளார். "எனக்காக கொஞ்ச நேரம் ஒதுக் கிய தலைவருக்கு நன்றி. குருவே சரணம்' என ட்விட்டரில் போட்டு, ரஜினி யுடன் எடுத்த போட் டோவையும் போட்டுள்ளார்.