பிரம்மாண்ட பட்ஜெட்டில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் "டிக்கிலோனா' படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறதாம். நயன்தாராவின் மேனேஜரான கே.ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸும், சோல்ஜர் ஃபேக்ட்ரி சினிசும் இணைந்து தயாரிக்கிறார்கள். சந்தானத்திற்கு ஜோடிகளாக "நட்பே துணை' ஹீரோயின் அனகா, "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' ஹீரோயின் ஷிரின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆனந்தராஜ், சித்ரா லட்சுமணன், முனிஸ்காந்த், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந் திரன் என நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையில் அருண் ராஜா காமராஜ், சரவெடி சரண் பாடல்கள் எழுத, திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணிபுரிகிறார். கார்த்திக் யோகிதான் படத்தின் டைரக்டர்.

bb

vvவிஜய் சேதுபதியின் "சங்கத்தமிழன்' செம ஊத்தலானதால் தயாரிப்பாளருக்கு ஒன்பது கோடி ரூபாய் நஷ்டமாம். படத்தின் டைரக்டர் விஜய் சந்தர், தாறுமாறாக பட்ஜெட்டை ஏற்றியதால், ரொம்பவே நொந்துவிட்ட தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, இனிமேல் சினிமா தயாரிக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம். படத்தை வாங்கி வெளியிட்ட லிப்ரா சந்திரசேகரும் ரொம்பவே சங்கடத்தில் இருக்காராம். இந்தப் படம் ஓடினால், விஜய் சந்தரின் டைரக்ஷனில் நடிக்கும் முடிவில் இருந்த விஜய், இப்போது "நோ' சொல்லிவிட்டதால், ""அய்யோ போச்சே...!'' என புலம்பிக் கொண்டிருக்கார் விஜய் சந்தர்.

Advertisment

ஜெய்-அதுல்யா ரவி ஜோடி போடும், இன்னும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங், சென்னையிலுள்ள குப்பங்களிலும், கூவம் ஆற்று ஓரங்களிலும் நடந்துவருகிறது. தமிழ்ச்செல்வன் என்ற புதுமுக இயக்குநர் டைரக்ட் பண்ணி வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் "தர்பார்' படத்தின் பேட்ஜ் ஒர்க்கிற்காக இ.வி.பி. ஸ்டூடியோவில் ஜெய்ப்பூர் செட் போட்டு வேலைகள் நடந்துவருகிறதாம். "தர்பாரி'ன் இன்னொரு ஹாட் மேட்டர் என்னன்னா... படத்தின் வியாபாரத்தை இன்னும் முடிக்காமல் இருக்காராம் தயாரிப்பாளர் சுபாஷ் கரண். காரணம், "2.0'-வினால் கொஞ்சம் கையைக் கடித்ததால், "தர்பார்' படத்தின் தமிழகத் தியேட்டர் ரைட்சை 140 கோடிக்கு விற்றால்தான் கட்டுபடியாகும் என்பதால் வெயிட் பண்ணுகிறாராம் சுபாஷ் கரண். சன் டி.வி.யும், ஐசரி கணேஷும் படத்தை வாங்க வெயிட்டிங்காம்.

bb

Advertisment

ரி டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் படத்திற்கு "யானை' என்ற டைட்டில் வைத்துள்ளனர். படத்தின் ஹீரோயின் சான்ஸைக் கைப்பற்ற ரகுல் ப்ரீத்சிங், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் களத்தில் குதித்துள்ளனராம்.

dd

ரா. பார்த்திபனின் "கதை- திரைக்கதை- வசனம்' படத்தில் நடித்த சந்தோஷ் இப்போது "இரும்பு மனிதன்' என்ற படத்தில் நடித்துவருகி றார். காமெடியில் கஞ்சா கருப்பு கலக்கியிருக்காராம். இப்படத்திற்காகத் தொடர்ந்து 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள கஞ்சா கருப்புவின் மார்க் கெட் இப்போது சூடுபிடித்துள்ளதாம். காரணம், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர் களின் நிலைமை அறிந்து, அவர்கள் கொடுக்கும் சம்ப ளத்தை மனமுவந்து வாங்கிக் கொள்கிறா ராம். இதனால், கஞ்சா கருப்புவின் கைகளில் இப்போது ஏழெட்டுப் படங்கள் இருக்காம்.

சசிகுமார் நடிக்கும் "எம்.ஜி.ஆர். மகன்' படத்தின் ஷூட்டிங் தேனியில் நடந்தபோது, அங் குள்ள பெரிய லாட்ஜில் தங்கியிருந்தது படக்குழு. ஷூட்டிங் முடியும் நாளன்று வாடகை செட்டில் பண்ணாததால், படக்குழுவினரின் லக்கேஜுகளை மொத்த மாக ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டனராம் லாட்ஜ் ஊழியர்கள். அவரவர் தங்கள் கைக்காசைப் போட்டு, வாடகைப் பணத்தைக் கொடுத்து லக்கேஜுகளை மீட்டிருக்கிறார்கள்.

புதுமுக டைரக்டர் தேவராஜ் டைரக்ஷனில் "உருச்சிதை' என்ற படம் ஈரோடு மாவட் டம், பவானியில் ஒரே ஷெட்யூலில் நடந்து முடிந்துள்ளது. கொத்தனார்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை என்பதால், கட்டு மானப் பணியில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஷூட்டிங்கை முடித்துள்ளார் டைரக்டர். ஹீரோ- ஹீரோயின்களாக புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் கொத்தனராக கவிஞர் ஜெயங்கொண்டான் நடிக்கிறார். ஒளிப்பதிவு மகிபாலன்.

bb

"ஒத்த செருப்பு' படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து, முற்றிலும் பெண்களே நடிக்கும் பேய்ப் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம் ரா. பார்த்திபன்.

"மலையன்', "வேல்முருகன் போர்வெல்' படங்களை டைரக்ட் பண்ணிய எம். கோபி, இப்போது சமுத்திரகனியை ஹீரோவாக போட்டு, படம் டைரக்ட் பண்ணும் முயற்சிகளில் இறங்கி யிருக்காராம்.

bb

ல வருடங்களுக்கு முன்பு தனுஷை வைத்து "தேவதையைக் கண்டேன்' படத்தை டைரக்ட் பண்ணிய பூபதி பாண்டியன், இப்போது மீண்டும் தனுஷை வைத்து டைரக்ட் பண்ணும் முடிவுடன் இரு கதைகளை ரெடிபண்ணி வைத்துள்ளாராம்.

பெரிய காமெடி நடிகர்களுடன் சின்ன கேரக்டரில் நடிக்கும் கிளி மூக்கு ராமச்சந்திரனுக்கும் சொந்தப் படம் எடுக்க ஆசை வந்து, குறைந்த பட்ஜெட்டில் "போடுங்கம்மா ஓட்டு' என்ற படத்திற்கு சமீபத்தில் பூஜை போட்டுள்ளார். டைரக்டரும் அரசியல்வாதியுமான வா. கௌதமன், இந்தப் படத்திலும் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்

கார்த்தியின் "கைதி' படத்திற்கு சென்னை வளசர வாக்கத்தில் உள்ள டி.ஆர். கார்டனில் வீடு செட் போட்டார்கள். படம் ரிலீசாகி இத்தனை நாட்களாகியும் அந்த வீடு செட்டைப் பிரிக்காததால், அந்த செட்டை மற்ற படங்களின் ஷூட்டிங்கிற்காக தினமும் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறாராம் டி.ஆர்.

aj

"தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகா ஆனந்தும் நெருங்கிய தோழிகள். ஷுட்டிங் இல்லாத நாட்களில் இருவரும் செம ஜாலியாக அரட்டை அடிப்பதோடு, பெரிய மால்களுக்கு ஹேப்பியாக ஷாப்பிங் போவார்களாம். இரண்டுபேரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்து விட்டார்கள். ஏன் என ஐஸ்வர்யா தத்தாவிடம் கேட்டால். ""நடிப்பில் ஏற்படும் போட்டி, நிஜமாகிவிட்டால் சங்கடம்... அதான்'' என்கிறாராம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்ஷிகாவை ஜோடியாகப் போட்டு "கிட்னா' என்ற படத்தை ஆரம்பித்தார் சமுத்திரகனி. அதன்பின் அந்தப் படத்தின் கதி என்னவென தெரியாததால், ரொம்பவே ஃபீலிங்கில் இருக்காராம் தன்ஷிகா. ஆனாலும், வாரந் தோறும் ஃப்ரஷ்ஷாக போட்டோ ஷூட் நடத்தி, தனது பி.ஆர்.ஓ. ப்ரியா மூலம் ரிலீஸ் பண்ணிவருகிறார் தன்ஷிகா.

இதேபோல் வாரந்தோறும் ஃப்ரஷ் போட்டோக்களை ப்ரியா ஆனந்தும் ரிலீஸ் பண்ணி வருகிறார்