நீண்ட காலத்துக்குப்பிறகு எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்த படம் "மான்ஸ்டர்'. ஒரு எலியுடனான ஹிரோவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், ஹீரோயினாக நடித்திருந்தார் ப்ரியா பவானிசங்கர். "அபியும் நானும்', "மொழி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில், இதே ஜோடி மீண்டும் இணைந்துவிட்டது. "எஸ்.ஜே. சூர்யாவோடு நடிக்க பயப்பட்டேன்' என ப்ரெஸ்மீட்டில் சொன்ன ப்ரியா, குறுகிய காலத்திலேயே மீண்டும் அவரோடு ஜோடிபோடுகிறார்.
விஜய் 64 பட அறிவிப்பு வெளியானதுமே, பலரையும் ஆச்சரியப்படுத்திய செய்தி- அந்தப் படத்தின் வில்லன் விஜய்சேதிபதி என்பது தான். இதற்கு என்னதான் காரணம் என்று கேள்விகள் வலம் வந்தன. படத்தின் கதை முழுவதையும் கேட்டுக் கொண்ட விஜய்சேதிபதி, முழுக்கதை அடங்கிய புத்தகத்தையும் வாங்கிப் படித்த பிறகே, ஓ.கே. சொன்னாராம். படத்தின் கதை, அதில் அவரது கேரக்டருக்கான ஸ்பேஸ் என எல்லாவற்றையும் பார்த்து அவரே ஆச்சர்யப்பட்டுதான் சம்மதித்தாராம்.
""திருமணமான நடிகைகள் என்றாலே சினி ஃபீல்டில் இருந்தே ஒதுக்கிவிடும் காலம் இருந்தது. ஆனால், அந்தச் சூழல் இப்போது மாறியிருக்கு. இப்போதிருக்கும் இயக்குநர்கள் திறமை இருந்தால், நடிகைகள் திருமணமானவர்களா- இல்லையா என்பதையெல்லாம் பார்ப்பதே இல்லை. தாராளமாக வாய்ப்பு கொடுக்கிறார்கள். திரையுலகம் சரியான, ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை வரவேற்கி றேன்'' என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் நடிகை ப்ரியாமணி.
விக்ரம் பிரபு நடித்த "சிகரம் தொடு' படத்தில் அறிமுகமானவர் குஜராத்தைச் சேர்ந்த மாடல் நடிகையான மோனல் கஜ்ஜார். "வானவ ராயன் வல்லவராயன்' படத்தில் கிருஷ்ணாவோடு ஜோடிபோட்டவர் அதோடு காணாமல் போய்விட்டார். அடுத்து ரொம்ப நாளாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த மோனல், ரொம்ப நாளுக்குப்பின் ஒரு பாட்டில் குத்தாட்டம் போடவருகிறார். "அரவான்' ஆதி நடிக்கும் "க்ளாப்' என்ற படத்தின் குத்தாட்டப் பாட்டில் மீண்டும் மோனல் கஜ்ஜாரைப் பார்க்கலாம்.
"ஜெயம்' ரவி நடித்த "ரோமியோ ஜூலியட்', "போகன்' படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தை இயக்கிய லட்சுமணன், "ஜெயம்' ரவியின் 25-ஆவது படத்தையும் இயக்க விருக்கிறார். இந்தக் கூட்டணியின் முந்தைய இரண்டு படங்களுமே செம ஜாலியான கதைக்களம் கொண்டிருக் கும். அதே பாணியில் அடுத்த படம் இருக்கும் என்று எதிர்பார்த்தால், "சர்வாதிகாரி' என்று படத்தின் டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது "பூமி' என்ற டைட்டில் வைத்துள்ளதாகத்தெரிகிறது. இந்தப் படத்தின்மூலம் நித்தி அகர்வால் தமிழில் அறிமுகமாகிறார்.
க்யூட் நடிகை என பெயர்பெற்றவர் லைலா. அஜீத், சூர்யா, விக்ரம் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடிபோட்ட லைலா, திருமணம் முடிந்ததும் சினிமாவுக்கு பை சொல்லிட்டு போய்விட்டார். சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி தந்ததன்மூலம் பட வாய்ப்புக்கு அடிபோடுகிறாரா என்று பேசப்பட்டது. இந்நிலையில், சினிமாவுக்கு பை சொல்லிச் சென்ற 13 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் லைலா. மணி சந்துரு இயக்குகிற "ஆலிஸ்' என்ற படத்தை யுவன் சங்கர்ராஜா தயாரிக்கி றார். லைலா நடிக்க "பிக்பாஸ்' புகழ் "ரைசா வில்சன்' நாயகியாக கமிட் ஆகியிருக்கிறார்.
ஒரே நேரத்தில் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ள படத்தில் நாயகியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். ஜெப்ரி சின் இந்தப் படத்தை இயக்கு கிறார். "லி டோக்யோ ரிப்போர்டர்' என்ற குறும்படத்தை இயக்கி, சர்வதேச அளவில் கவனம்பெற்றவர் இவர். காஜல் நடிக்கும் இந்தப் படத் திற்கு "கால்சென்டர்' என பெயரிடப் பட்டுள்ளது. ஒரு தம்பதியின் வாழ்க்கை யின் போக்கை ஒரு சம்பவம் எந்தளவுக்கு மாற்றுகிறது என்ற கதையை மையமாகக் கொண்ட இந்தப் படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக் கப்பட்டதாம்.
நட்சத்திர ஜோடிகளான நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா இருவரும், திரைத்துறையில் நல்ல பீக்கில் இருக்கும்போதே காதலித்து மாலை மாற்றிக்கொண்டார்கள். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ள நிலையில், தற்போது சினேகா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். ரெண்டா வது குழந்தைக்காக குடும்பத்தினர் உற்சாகத்துடன் காத்திருக்க, சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வும் இனிதே முடிந்தது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் திரைத் துறையில் ஹீரோவாக அறிமுகமானது 2007-ல். நேகா சர்மா, பிரகாஷ் ராஜ் நடித்து, பூரி ஜெகநாத் இயக்கிய இந்தப் படம் சக்கைப்போடு போட்டு, ராம்சரணுக்கு நல்ல தொடக்கத்தையும் கொடுத்தது. அடுத்ததாக, பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய "மகதீரா' படத்தின்மூலம் கமர்ஷியல் ஹீரோவாகவும் ப்ரமோஷன் வாங்கிய ராம்சரண், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது மீண்டும் ராஜமௌலி இயக்கும் "ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியிருக் கிறார். இதற்கிடையேதான் சினிமாவுக்கு அறிமுகமாகி 12 ஆண்டுகள் கடந்து விட்டதைக் கொண்டா டும்விதமாக தனது மனைவி உபாசனா, நடிகைகள் தமன்னா, ராச்சா முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் ராம்சரண்.
"நேர்கொண்ட பார்வை' படத்தின்மூலம் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றிருக்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றி கோபம் பொங்கப் பேசி யிருக்கிறார். மேலும், அதே நிகழ்ச்சியில் ""நான் குழந்தையே பெற்றுக்கொள்ளமாட்டேன்'' என்று கூறியிருக்கிறார். ""என் தாத்தா- பாட்டி 15 பிள்ளைங்க பெத்துக்கிட்டாங்க. எங்க அப்பா அம்மா இரண்டு குழந்தைங்கதான் பெத்தாங்க. ஆனா நான் குழந்தையே பெத்துக்கப் போறதில்ல'' என உறுதியாகக் கூறியிருக்கிறார்.
ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிபெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். "பாகுபலி' படத்தில் இவர் நடித்த ராஜமாதா காதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நிறைந்தது. தற்போது தெலுங்கில் நாகார்ஜூனாவுக்கு பதில், "பிக்பாஸி'-ன் மூன்றாவது சீசனை ரம்யா கிருஷ்ணன்தான் தொகுத்து வழங்குகிறார். "பிக்பாஸ்' வரலாற்றிலேயே ஒரு பெண் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை என சொல்லலாம். இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனின் போட்டோ ஒன்று இணையத்தில் தீவிரமாக வைரலாகி வருகிறது. வயதானாலும் அழகும், ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை. ரஜினியைப் பார்த்து ரம்யா சொன்ன டைலாக்கை அவர் ரசிகர்கள் இப்போது வார்த்தை மாறாமல் சொல்கிறார்கள்.
நடிகர் அஜித்தின் 50-ஆவது படமான "மங்காத்தா' ரிலீஸாகி எட்டு ஆண்டுகள் ஆகி விட்டன. அதை விழா நடத்திக்கொண்டாடியது படக்குழு. அப்போது பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, "" "மங்காத்தா' படம் எனக்கு பெரிய வெற்றி யைக் கொடுத்தது. அதில் அஜித் சார் ஒரு பாடல் சீனில் சட்டை போடாமல் நடித்திருப்பார். அப்படி யொரு காட்சியைச் சொன்னதும், "வெங்கட் உனக் காக பண்றேன்' எனக் கூறிக்கொண்டு அவர் நடித்துக்கொடுத்தார். இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்'' என உருக்கமா கப் பேசியிருக்கிறார்.