மும்பையில் செட்டில்?
சினிமாவில் பிஸி யாக இருக்கும் தமன்னா, இப்போதைக்கு திரும ணம் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை என்று சொல்லியிருந்தார். தமிழில் "பெட்ரோமேக்ஸ்', "ஆக்ஷன்' படங்களில் நடித்து, அதன் ரிலீஸுக்காக இப்போது காத்திருக்கிறார். அடுத்த டுத்து கால்ஷீட் கொடுப்ப தில் ஆர்வம் காட்டினா லும், திருமண செய்தி அவரை விட்ட பாடில்லை. தற்போது, மீண்டும் அடுத்த ஆண்டு இறுதியில் மும்பைத் தொழிலதிபர் ஒருவரைத்தான் தமன்னா திருமணம் செய்ய இருக்கிறார் என செய்திகள் கிளம்பி யுள்ளன.
தர்பாரையே தட்டிக் கழிச்சோம்!
நாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜாவும் நடித்துள்ள "பிகில்' படத்தில், தனது தலைமுடியைக் குறைத்துள்ளார் இந்துஜா. உச்ச நட்சத்திரமான விஜய்யின் "பிகில்' படத்தில் நடித்து வருவதால், ரஜினி நடித்துவரும் "தர்பார்' படத்தில் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை மறுக்கவேண்டிய நிலை இந்துஜா வுக்கு ஏற்பட்டு விட்டதாம். தமிழ் சினிமா வைப் பொருத்தவரை யாராக இருந்தாலும் ரஜினி படத்தில் ஓரமாக நிற்கும் காட்சி கிடைத் தாலே போதுமென்று ஏங்கும் காலம் இப்போதும் இருக்கிறது. அப்படி இருக்கையில், தேடிவந்த வாய்ப்பை இந்துஜா தட்டிக்கழித்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பெரிய சங்கதிதான்போல!
இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு "தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். அது கிடப்பிலேயே கிடந்த நிலையில், தற்போது கையிலெடுத்திருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் களமிறங்க, தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவிருக்கிறது இந்தப்படம். நாயகன், வில்லன் ஆகிய இரண்டு வேடங் களையும் கமலே ஏற்று நடிக்க, சீரியஸான அரசியல் கதைக்களத்துடன் "தலைவன் இருக்கின் றான்' படமாக்கப்பட உள்ளது. இது தனிப்பட்ட முறையில், தனது அரசியல் வாழ்க்கைக்கும் பிரயோஜனப்படும் என பெரிதும் நம்புவ தாலேயே மீண்டும் இந்தக் கதையை எடுக்கி றார் என்று சொல்லிக் கொண்டாலும், சில பைனான்ஸ் சங்கதிகளும் இதில் இருப்பதாக பேசப் படுகிறது.
எல்லாரும் ஒண்ணுக் குள்ள ஒண்ணுப்பா!
ரஜினியின் "தர்பார்', கமலின் "இந்தியன்-2', சிவகார்த்திகேயனின் 17-ஆவது படம், விஜய்யின் 64-ஆவது படம் என இசையமைப்பில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் அனிருத், அவ்வப்போது தெலுங்கு சினிமாவிலும் தலைகாட்டுகிறார். சமீபத்தில் தெலுங்கில் அனிருத் இசையமைத்து ரிலீஸான காமெடிப்படம் "கேங் லீடரி'ல், பாடல்கள் சரியாக வரவில்லை என விமர்சனங்கள் எழுந் துள்ளன. மேலும், தெலுங்கு சினிமா இசையமைப்பாளர் களைவிடவும், அனிருத் அதிகமாக சம்பளம் கேட்கிறார் என குற்றம்சாட்டுகிறார்கள். சமீபத்தில் அவர் இசை யமைத்த "ஜெர்ஸி' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆகவே, தமிழிலிருந்து தெலுங்கு செல்லும் இசை யமைப்பாளர்களை ஓரவஞ்சனையுடனே தெலுங்கு விமர்சகர்கள் பார்க்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாராம்.
ரெண்டாவது இன்னிங்ஸ்?
தென்னிந்தியத் திரையுலகில் அசைக்கமுடியாத ஹீரோயினாக வலம்வந்தவர் நடிகை அசின். அந்த உச்சத்தை வைத்தே இந்தியில் அமீர்கானின் "கஜினி' படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சில படங்களில் நடிக்கவும் செய்தார். திடீரென "கஜினி' படத்தில் வருவதுபோலவே பெரிய தொழிலதிபரை மணந்துகொண்டு, பெண் குழந்தைக்கு தாயானார் அசின். அதன்பிறகு இனி நடிக்க வரமாட்டார் என அனைவரும் நினைத்த நிலையில், மீண்டும் நடிப்பதற்காக கதை கேட்கிறாராம் அசின்.
காதலனுக்கு ப்ரமோஷன்
அடுத்தடுத்து சில ப்ளாப் படங்கள் கொடுத் தாலும், நயன்தாராவின் மார்க்கெட் இப்போதும் உச்சம்தான். அவரது காதலன் விக்னேஷ் சிவன், தற்போது "நெற்றிக்கண்' என்ற படத்தைத் தயாரிக்க, அதில் நடித்து வருகிறார் நயன். ப்ளைண்ட் என்ற "கொரியன்' படத்தின் ரீமேக் கான "நெற்றிக்கண்' படத்தில், பார்வை இல்லாத காவல் துறை அதிகாரியாக நயன் நடித்துவருகி றாராம்.
ரஜினி, விஜய்யுடன் மோதும் கார்த்தி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்த "கைதி' படப்படிப்பு முடிந்துவிட்டது. அடுத்தபடியாக ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலும், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் "சுல்தான்' படத்திலும் நடிக்கிறார். ஜீத்து ஜோசப் படத்தில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் விஜய்யின் "பிகில்' படத்துடன், கார்த்தி யின் கைதி மோதுகிறது. அதேபோல், ஜீத்து ஜோசப் பின் படம் பொங்கலுக்கு ரஜினியின் "தர்பார்' படத்து டன் ரிலீஸாகிறது.
வேற லெவலுக்கு வெயிட்டிங்!
"காப்பான்' படத்தைத் தொடர்ந்து சூர்யா, ஆர்யா இணைந்து இன்னொரு படத்தில் நடிக்கவிருக்கி றார்களாம். இந்தப் படத்தை பாலா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. "நந்தா' படத்தில் சூர்யாவுக்கும், "நான் கடவுள்' படத்தின்மூலம் ஆர்யா வுக்கும் தமிழ் சினிமாவில் வேறொரு முகத்தை உருவாக்கிக்கொடுத்த பாலாவின் படத்தில் இருவரும் களமிறங்கினால் அது வேற லெவலில் இருக்கும் என்பது கோலிவுட்டின் எதிர்பார்ப்பு.
இனி இப்படியொரு படத்தை எடுப்பியா?
பார்த்திபன் ஒற்றை ஆளாக எல்லா ஏரியாக் களிலும் கலக்கியிருக்கும் "ஒத்த செருப்பு சைஸ்-7' படம், விமர்சனம்- வசூல் ஆகிய ரெண்டு ஏரியாக் களிலும் மெர்சல் காட்டி விட்டது. வழக்கம்போல், இந்தப் படமும் இணையத் தில் திருட்டுத்தனமாக ரிலீஸாகி இருக்கிறது. இதைப் பார்த்து கடுப்பான பார்த்திபன், ""இப்படிப்பட்ட படத்தை யும் ஈவு இரக்கமில்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்க ணும் என் 7-ஆம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு!'' என தனது ட்விட்டர் பக்கத்தில் எரிச்சலுடன் பதிவிட்டிருக்கிறார்.
ரிலீஸுக்கு முன்னமே கலக்கல்!
"கேளடி கண்மணி', "நீ பாதி நான் பாதி', "நேருக்கு நேர்', "ஆசை' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வர் வசந்த். இவர் சமீபத்தில் "சிவ ரஞ்சனியும், சில பெண்களும்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெள்ளித்திரைக்கு வருவ தற்கு முன்னதாகவே பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டு நல்ல பாராட்டைப் பெற்றிருக் கிறது. சமீபத்தில் ஜப்பானில் நடை பெற்ற 28-ஆவது புகோகோ சர்வ தேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சிறந்த திரைப் படத்துக்கான விருதையும் வென்றி ருக்கிறது. வசந்த் தீவிர எதிர்பார்ப் பில் இந்தப் படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார்.
நக்சலைட்டான நடிகை!
பிரேமம் மலர் டீச்சராக அறிமுகான சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருக்கிறார். தெலுங்கில் போலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கு மான காதலை மையமாகக் கொண்ட "விராட பருவம்' என்ற படத் தில், அந்தப் பெண் நக்சலைட்டாக நடித்தி ருப்பது சாய் பல்லவிதானா? இதற்கு பல தரப்பிலிருந்து விமர்சனங் கள் கிளம்ப, "இமேஜ் பாதிக்கும், மார்க் கெட் போகும்' என பலரும் அட்வைஸ் செய்தார்கள். ஆனால், அதையெல்லாம் சட்டை செய்யாத சாய் பல்லவி, வாராங் கல்லில் நடக்கும் ஷூட்டிங்கில் பிஸியாகி விட்டாராம்.
சந்தோஷப்படுத்திய அஜித்!
அஜித் உடன் "பில்லா' படத்தில் ஜோடி போட்டவர் நமீதா. அதன் பிறகு அஜித் குறித்து சில இடங்களில் பெருமையாகவும் பேசிவந்த அவரிடம், "அஜித்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன' என்று கேட்க, நமீதா, ""அஜித் திற்கு குழந்தைகள்னா அவ்வளவு ப்ரியம். "பில்லா' படப்பிடிப்பின்போது என் அண்ணன் பிள்ளைகளைக் கூட்டிச் சென்றேன். அவர்களைப் பார்த்ததும் உற்சாகமான அஜித், அவர்களுக்கு பெரிய சாக்லேட்டைக் கொடுத்து அசத்தி னார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது'' என்றுள்ளார்.
திறந்த புத்தகமா இருக்காரே...
தெலுங்கில் சக்கைப்போடு போட்டு, இந்தியிலும் நல்ல வசூல் செய்த "அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக அறிமுக மாகிறார் நடிகர் விக்ரமின் மகன் துருவ். பல சிக்கல்களுக்கு பின்னர் "ஆதித்ய வர்மா' என்ற பெயரில் நவம்பர் 8-ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது. சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார் துருவ். அப்போது "நீங்க விஜய் ஃபேனா, அஜீத் ஃபேனா' என கேட்டிருக்கிறார்கள். அதற்கு சற்றும் யோசிக்காமல் ""விஜய் ஃபேன்'' என்று பட்டென கூறிவிட்டாராம்.
பேயாகவே வாழப் பழகிட்டார்!
ரொம்ப நாளைக்கு கேப் விட்டுவிட்டு "பலூன்', "லிசா' போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடித்தார் நடிகை அஞ்சலி. இனி இதுமாதிரியான படங்களில்தான் நடிக்கவேண்டும் என முடிவெடுத்துள்ள அவர், கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் பேய்ப்படம் ஒன்றில் நடித்துவருகிறார். பேய்ப்படம் என்று டைட்டில் வைத்திருக்கும் இந்தப் படத்தில், யோகிபாபு, "பிக்பாஸ்' ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தோட்டா பாயுமா? பாயாதா?
"பேட்ட', "பூமராங்', "வந்தா ராஜாவாதான் வருவேன்' என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸானாலும், தான் தமிழில் முதலில் அறிமுகமான தனுஷ் நடித்து, கவுதம் மேனன் இயக்கியுள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால் சோகத்தில் இருக்கிறாராம் மேகா ஆகாஷ். அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் ஒரு படத்தில் உதயநிதிக்கு ஜோடி யாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் மேகா. "சைக்கோ', "கண்ணை நம்பாதே', "ஏஞ்சல்' போன்ற படங்களில் நடித்துவரும் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க, மகிழ் திருமேனியுடனான இந்தப் படத்தில் பல ஹீரோயின் களின் லிஸ்ட் பரிந்துரையில் வந்தாலும், கடைசியில் மேகா ஆகாஷ் தான் க்ளிக் ஆகியிருக்கிறார்.