"குப்பத்து ராஜா', "வாட்ச்மேன்' என வரிசையாக படங்கள் ஊத்தியதால் ரொம்பவே அப்செட்டில் இருக்கும் ஜி.வி. பிரகாஷை மேலும் அப்செட்டாக்கியிருக்கிறது முடிந்தும் முடியாமலும் இருக்கும் "ஜெயில்' படம். தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய டைரக்டர் வசந்தபாலன் படம் என்பதால் சம்பளத்தைப் பற்றி கெடுபிடி காட்டாமல், "ஜெயில்' படத்தில் கமிட்டானார் ஜி.வி.பி.
ஆனால் தயாரிப்பாளர் தரப்பு, ஃபைனான்ஸுக்கு திணறுவதால், முக்கால்வாசிக்குமேல் படம் முடிந்தும், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பாக்கி இருந்தும் ஷூட்டிங் முடியாததால்தான் அப்செட்டில் இருக்கிறார்கள் ஹீரோவான ஜி.வி. பிரகாஷும் ஹீரோயினான அபர்ணதியும். ஆனாலும் கடந்த வாரம் ரிலீசாகியிருக்கும் சசியின் "சிவப்பு மஞ்சள் பச்சை' ஹிட் சிக்னலை காட்டும் என்ற நம்பிக்கையும் ஜி.வி. பிரகாஷிடம் இருக்கத்தான் செய்கிறது.
கேரளா, புனே, திரைப்பட விழாக்களிலும் ஸ்வீடன் நாட்டுத் திரைப்பட விழாவிலும் விருதுகளை குவித்தது டைரக்டர் வஸந்த் சாய் கைவண்ணத்தில் உருவான "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.' இப்போது ஜப்பான் நாட்டிலும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் உலக திரைப்பட
"குப்பத்து ராஜா', "வாட்ச்மேன்' என வரிசையாக படங்கள் ஊத்தியதால் ரொம்பவே அப்செட்டில் இருக்கும் ஜி.வி. பிரகாஷை மேலும் அப்செட்டாக்கியிருக்கிறது முடிந்தும் முடியாமலும் இருக்கும் "ஜெயில்' படம். தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய டைரக்டர் வசந்தபாலன் படம் என்பதால் சம்பளத்தைப் பற்றி கெடுபிடி காட்டாமல், "ஜெயில்' படத்தில் கமிட்டானார் ஜி.வி.பி.
ஆனால் தயாரிப்பாளர் தரப்பு, ஃபைனான்ஸுக்கு திணறுவதால், முக்கால்வாசிக்குமேல் படம் முடிந்தும், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பாக்கி இருந்தும் ஷூட்டிங் முடியாததால்தான் அப்செட்டில் இருக்கிறார்கள் ஹீரோவான ஜி.வி. பிரகாஷும் ஹீரோயினான அபர்ணதியும். ஆனாலும் கடந்த வாரம் ரிலீசாகியிருக்கும் சசியின் "சிவப்பு மஞ்சள் பச்சை' ஹிட் சிக்னலை காட்டும் என்ற நம்பிக்கையும் ஜி.வி. பிரகாஷிடம் இருக்கத்தான் செய்கிறது.
கேரளா, புனே, திரைப்பட விழாக்களிலும் ஸ்வீடன் நாட்டுத் திரைப்பட விழாவிலும் விருதுகளை குவித்தது டைரக்டர் வஸந்த் சாய் கைவண்ணத்தில் உருவான "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.' இப்போது ஜப்பான் நாட்டிலும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் உலக திரைப்படவிழாவிலும் திரையிட தேர்வாகியுள்ளதாம் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. திரைப்பட விழாக்களில் திரையிடுவதும் விருதுகளை வாங்குவதும் சரி, தமிழ்நாட்டு தியேட்டர்களில் எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்கன்னு வஸந்திடம் கேட்டால், சீக்கிரமே பிரதர் என்கிறார்.
சிபிராஜுக்கு ஹிட் கொடுத்த "சத்யா' படத்தின் டைரக்டர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, மீண்டும் சிபிராஜ்- சத்யராஜுடன் கூட்டணி சேர்கிறார். தனஞ்செயனும் லலிதா தனஞ்செயனும் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையான இப்படத்தின் ஷூட்டிங்கை நவம்பரில் ஆரம்பித்து ஜனவரியில் முடிக்க திட்டமிட்டிருக்கி றார்கள். ப்ரியா ஆனந்த் அல்லது ஸ்ரீதிவ்யா இந்த இருவரில் ஒருவர் ஹீரோயினாகலாம்.
காமெடி மன்னர் கவுண்டமணி, மாலை நேரங்களில் தனது வீட்டில் முற்றத்தில் உட்கார்ந்து பத்திரிகைகளை படிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அப்போது யார் போனாலும் அவர்களுடன் சிரித்து சகஜமாக பழகும் கவுண்டர், ஃபோட்டோ எடுக்கணும் என்றால் சாரி "ப்ளீஸ்' என நாசூக்காக மறுத்து விடுவாராம்.
ஷூட்டிங் ஸ்பாட்டுகளிலும் சரி; மற்ற பொது பூங்காக்களிலும் சரி, அதிகாலை வாக்கிங் போவது சிரமம் என்பதால், தனது ஆழ்வார்பேட்டை வீட்டிலேயே தினமும் இரவும் ஒரு மணிக்குமேல் தான் வாக்கிங் செல்கிறாராம் சந்தானம். சமீபத்தில் ரிலீசான "ஏ-1' ஹிட் அடித்ததில் செம ஹேப்பியாக இருக்கும் சந்தானம், அடுத்ததாக சயின்ஸ் ஃபிக்ஷன் பின்னணி கொண்ட கதையில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார். படத்துக்கு பெயர் "டிக்கிலோனா.' "கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்' கே.ஜே. ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தின் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ளார் கார்த்திக் யோகி. "ஏ-1' ஹிட் சென்டிமென்டால் தாரா அலிஷா பெரி, மூணு சந்தானத்தில் ஒரு சந்தானத்திற்கு ஜோடியாகலாம் என்கிறது கோலிவுட் பட்சி.
தான் ஹீரோவாக நடித்து இசையமைக்கும் படங்களுக்கு பாடல்களையும் எழுதுவிடுகிறார் ஹிப்காப் தமிழா ஆதி. பெரிய பெரிய கவிஞர்களுடன் வேலை பார்ப்பது கொஞ்சம் சங்கடம் என்பதாலும், தனது பட பாடல்கள் கவிதை நடையில் இல்லாமல் உரை நடையில் இருந்தால்போதும் என நினைப்பதாலும்தான் ஹிப்காப் தமிழனே பாடல்கள் எழுதுகிறாராம். அதேபோல் சுந்தர்.சி.யின் ஆவ்னி மேக்கர்ஸ் ஆதியை வைத்து இரண்டு கோடி பட்ஜெட்டில் தயாரித்த "நட்பே துணை' எட்டு கோடி ரூபாய் அள்ளியதால், இப்போது மீண்டும் ஆதியை வைத்து அடுத்த படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் சுந்தர்.சி.
"கோமாளி' கதை லபக் விஷயத்தில் ஆகப் பெரிய கோடி ரூபாயை எதிர்பார்த்தாராம் ரா. பார்த்திபன். ஏன்னா அந்தக் கதை ரா. பார்த்திபனின் அசோஸியேட் கிருஷ்ணமூர்த்தியுடையது. அவ்வளவு பெரிய தொகையெல்லாம் கொடுக்க முடியாது. அதேநேரத்தில் நீங்க திருப்திப்படும்படியான தொகையை வாங்கித் தர்றேன் என சமசரசம் பேசி, தொகையை வாங்கிக் கொடுத்தாராம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ். முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் வெள்ளிக்கிழமை அன்றே வடபழனி ஃபோரம் மாலிலுள்ள பளாசோ தியேட்டரில் இரவுக் காட்சி பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். "ஒத்த செருப்பு' படத்தின் ரீ-ரிக்கார்டிங்கில் லடாய் ஆகிவிட்டதால், சத்யாவை வைத்து ரீ-ரிகார்டிங்கை முடித்துவிட்டாராம் ரா. பார்த்திபன்.
சென்னை வடபழனி, வளசரவாக்கம் பகுதிகளில் இருக்கும் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தலா இரண்டு வீடுகளை வாங்கிப் போட்டுள்ளாராம் டைரக்டரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ்.
எஸ்.ஏ. சந்திரசேகர் டைரக்ஷனில் "கேப்மாரி' படத்தை முடித்திருக்கும் ஜெய். அடுத்ததாக பேய்ப் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளாராம். வெற்றிச் செல்வன் டைரக்ட் பண்ணும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார் அதுல்யா ரவி. இதேபோல் அமலா பாலும் ஒரு பேய்ப்படத்தில் நடித்துவருகிறார். "ஆடை' போல் இதுவும் பரபரப்பாகவும் த்ரில்லிங் காகவும் இருக்குமாம்.
"உயிர்', "மிருகம்' படங்களின் டைரக்டர் சாமி, இப்போது "ஊர்க்குருவி' என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். குழந்தைகளின் உலகத்தைப் பேசும் இப்படம், சாமியின் ஏடாகூட இமேஜை மாற்றும் என்கிறார்கள் அவரது நண்பர்கள். அருள்நிதியை வைத்து "மௌனகுரு' என்ற ஹிட் படம் கொடுத்த டைரக்டர் சாந்தகுமார், ஐந்தாறு வருட இடைவெளிக்குப் பின் ஆர்யாவை வைத்து டைரக்ட் பண்ணி, கடந்த 6-ஆம் தேதி ரிலீசாகியுள்ள "மகா முனி' மேக்கிங்கில் மிரட்டலாகவும் வர்த்தகரீதியில் ஓ.கே.வாகவும் இருப்பதால் ஆர்யா- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு திருப்தி தானாம். இதற்கிடையே விக்ரம், சூர்யா ஆகியோருக்கு கதை சொல்லும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டதால், ஆர்யாவிடம் கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர் பாலா.