"பிகில்' படத்தில் விஜய்யும் நயன் தாராவும் டெல்லி செல்வதுபோல் பிரசாத் ஸ்டுடியோவில் பாபா கோவில் செட் போட்டு ஷூட்டிங் நடத்தினாராம் அட்லீ. பட்ஜெட்டைவிட எகிறிவிட்ட கடுப்பில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். இன்டர்நேஷனல். இதற்கிடயே "பிகில்' டைட்டிலுக்கான பஞ்சாயத்தும் திடீரென ஆரம்பித்ததால் மேலும் கடுப்பாகிவிட்டதாம் தயாரிப்பு.

bb

ஒரே திருட்டு சமாச்சாரமா இருக்கு!

விஷால்- ராஷி கண்ணா ஜோடி போட்ட "அயோக்கியா' படத்தில் நடித்து முடித்து பணமெல்லாம் செட்டில் செய்யப் பட்டபிறகு, ""என்னோட "உள்ளே வெளியே' படத்தை திருடித்தான் "அயோக்கியா' வாக்கியிருக்கிறார்கள்'' என்றார் ரா. பார்த்திபன். ""இப்போது ரிலீசான அமலா பால் நடித்த "ஆடை' யும் என்னோட "குடைக்குள் மழை' படத்தின் திருட்டு'' என்றார் ரா. பார்த்தி பன். இப்போது ஜெயம் ரவி பெரிதும் நம்பியிருக்கும் "கோமாளி' படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்து டப்பிங், மிக்ஸிங் வேலைகள் நடந்துவருகின்றன. இந்த நேரத்தில், தன்னிடம் உதவி இயக்குநராக இருக்கும் கிருஷ்ண மூர்த்தியின் கதைதான் "கோமாளி'-யின் கதை என எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே. பாக்யராஜிடம் புகார் கொடுத்திருக்காராம் ரா. பார்த்திபன். ""என்னய்யா இது...? இந்த வாரம் முழுக்க திருட்டுக் கதை சமாச்சாரமா இருக்கு...'' என ஜாலி கமெண்ட் அடித்தாராம் கே. பாக்யராஜ்

Advertisment

சினிமாவாகும் சகாயம் ஸ்டோரி!

கதாசிரியரும் இணை இயக்குநருமான ரவி ரத்னம் என்ற இளைஞர், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை ரோல் மாடலாக வைத்து கதை ஒன்று எழுதியுள்ளாராம். இந்தக் கதையை சுந்தர். சி.யிடம் சொல்ல, அவரும் டபுள் ஓ.கே.சொல்லிவிட்டாராம். சுந்தர். ddசி.க்கு ஜோடியாக மலையாளத்தில் பிரபல நடிகையான அனுசித்தாராவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். மற்ற கேரக்டர்களில் நாஞ்சில் சம்பத், ராதாரவி ஆகியோர் நடிப்பார்கள் போலிருக்கிறது. படம் ஆரம்பமாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். படத்தின் டைட்டிலே "சகாயம்'தானாம். சைலண்டான ஜி.வி.பி. சமூகப் பிரச்சினை என்றால் முன்பெல்லாம் ஓடோடிவருபவர் ஜி.வி. பிரகாஷ். தற்போது வரிசையாக சில படங்கள் ஓடாததால், கவலைக் குள்ளான ஜி.வி.பி., இரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிறகு, மீண்டும் சமூக சேவையில் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.

உதவும் சமுத்திரம்!

Advertisment

டைரக்டரும் பிஸியான நடிகருமான சமுத்திரகனியும், "கருப்பசாமி குத்தகைதாரர்' டைரக்டர் மூர்த்தியும் ("பிச்சைக்காரன்' மூர்த்தி என்றால் இன்னும் பிரபலம்.) விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சமுத்திரகனிக்கு சொந்த ஊர் விருதுநகர். மூர்த்திக்கு சொந்த ஊர் ராஜபாளையம். இருவரும் உரிமையுடன் பேசிக் கொள் பவர்கள். அத னால் "தொண்டன்', "கொளஞ்சி' என தான் நடிக்கும் படங்களில் மூர்த்திக்கும் சான்ஸ் வாங்கித் தந்து உதவுகிறாராம் சமுத்திரகனி.

கிளப்பிவிட்ட கௌதம் மேனன்!

dd

கௌதம் மேனன் டைரக்ஷனில் தனுஷ்- மேகா ஆகாஷ் நடித்த "என்னை நோக்கிப் பாயும் தோட்டா', விக்ரம்- ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த "துருவ நட்சத்திரம்' படங்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஐசரி கணேஷிடம் கதை சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டதாக கௌதம் மேனன் தரப்பிலிருந்தே நியூஸைக் கிளப்பிவிடுகிறார்கள். இந்த நிலையில், டைரக்டர் லிங்கு சாமியும் விக்ரமிடம் ஒரு கதை சொல்லி இருக்காராம். ""அஜய் ஞானமுத்து வின் படம் முடிந்ததும் பார்க்கலாம்'' என்றிருக்கிறாராம் விக்ரம்.

வருகிறார் முத்துலிங்கம்!

ddஅருள்நிதியை வைத்து "மௌனகுரு' படத்தை டைரக்ட் பண்ணிய சாந்த குமார், அடுத்த தாக சூர்யாவை வைத்து படம் பண்ணும் வேலைகளில் இறங்கி யுள்ளா ராம். இப்படத் தின் பாடல்களை பழம்பெரும் கவிஞர் முத்துலிங்கம் எழுத விருக்கிறார்.

ஒன்லி மும்பை!

ரஜினி- ஏ.ஆர். முருகதாஸ் காம்பினேஷனில் படு மிரட்டலாக தயாராகி வரும் "தர்பார்' படத்தில் சில கேரக்டர்களுக்கு மட்டும்தான் நம்ம ஊர் நடிகர்- நடிகை களாம். இந்தி மார்க்கெட்டை டார்கெட் வைத்து முக்கால்வாசி மும்பை நடிகர்- நடிகைகளை நடிக்க வைத்துள்ளாராம் முருகதாஸ். ரஜினி- நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிக் காக இந்த மாதத்தில் சுவிட்சர் லாந்து போகிறதாம் "தர்பார்' டீம்.

ஷூட்டிங் ஓவர்!

கமலை வைத்து "பாப நாசம்' எடுத்த ஜீத்து ஜோசப், இப்போது கார்த்தி நடிக்கும் படத்தை டைரக்ட் பண்ணி முடித்துவிட்டார். கடைசி ஷெட்யூல் ஷூட்டிங் பொள் ளாச்சியில் நடந்து முடிந்து, படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டார்களாம். படத்தில் கார்த்தியின் அப்பா- அம்மாவாக சத்யராஜ்- சீதாவும், அக்காவாக ஜோதிகாவும் நடிக்கிறார்கள்.

யோகிபாபுவின் கவனிப்பு!

இப்போது டாப்- கியரில் போய்க் கொண்டிருக்கும் யோகிபாபு, தீவிர முருக பக்தராம். பக்தி ஒருபக்கம் இருந்தாலும், சென்னை வளசரவாக்கத்தில் தான் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டில், தனது பழைய நண்பர்களுக்கு அடிக்கடி அசைவ விருந்து கொடுத்து அசத்துகிறாராம் யோகிபாபு. இதே போல் தன்னை வைத்து படம் எடுக்கும் டைரக்டர் களுக்கும் தனிக்கவனிப்பு நடத்துகிறாராம்.