"தெய்வத் திருமகள்' என்ற டி.வி. சீரியலில் ஹீரோ யினாக நடித்தவர் வாணி போஜன். சீரியலிலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சினிமா வாய்ப்புகள் வாணி போஜனைத் தேடிவந்தது. "இந்த மெகா சீரியலிலின் எனது போர்ஷன் முடிந்தபின் பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறினார். இப்போது சீரியல் முடிந்துவிட்டதால், சினிமாவில் களம் இறங்கி ஒருகை பார்த்துவிடுவது என்ற முடிவுடன் ஹிக்கான ஸ்டில்களை ரிலீஸ் பண்ணியிருக்கிறார் வாணி போஜன். நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வைபவ்விற்கு ஜோடி போடும் வாணி போஜன், "விரைவில் பெரிய ஹீரோவிற்கு ஜோடிபோட்டே தீருவேன்' என சபதம் எடுத்துள்ளாராம்.
விஜய்யின் "மெர்சல்' படத்தில் நித்யாமேனன் கேரக்டருக்கு முதலில் ஜோதிகாவைத்தான் அணுகியிருக்கிறார் டைரக்டர் அட்லீ. ஜோதிகா மறுத்துவிட்ட பிறகுதான் நித்யாமேனனை செலக்ட் பண்ணினாராம் அட்லீ. ஆனால் சமீபத்தில் பேசிய ஜோதிகாவோ, ""அந்தப் படத்தின் கதை- திரைக்கதையில் தனக்கு திருப்தி இல்லாததால்தான் ஒத்துக் கொள்ளவில்லை'' எனச் சொல்லியுள்ளார்.
"செல்லமே' படத்தின் மூலம் விஷாலை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் காந்தி கிருஷ்ணா. அதன்பின் இவர் டைரக்ட் பண்ணிய படம் ஓடாததால், பல வருடங்களாக வாய்ப்பே இல்லாமல் இருந்தார் காந்தி கிருஷ்ணா. தான் அறிமுகப்படுத்திய விஷால், இப்போது பெரிய ஹீரோவாக இருப்பதால், அவரிடம் கதை ஒன்றைச் சொல்ல நேரம் கேட்டாராம். இதோ அதோ இழுத்தடித்து நோ சான்ஸ் என்றாராம் விஷால். இதைக்கேட்டு நொந்து நூடுல்ஸாகிவிட்டார் காந்தி கிருஷ்ணா.
தமிழ் சினிமாவின் இப்போதை தயாரிப்பாளர் களில் மிக இளம் வயது தயாரிப்பாளர் மாதவி அரிசங்கர்தான். "தோழர் வெங்கடேசன்' என்ற படத்தைத் தனது காலா பிலிம்ஸ்மூலம் தயாரித்து, தனது கணவர் அரிசங்கரையே ஹீரோவாக்கிவிட்டார் மாதவி. சுசீந்திரனின் "ஜீவா' படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக வந்த மோனிகா சின்னகொட்லாதான் ஹீரோயின். படத்தின் டைரக்டர் மகாசிவன் தனது சிஷ்யன் என்பதால், சுசீந்திரன் வழங்கும் "தோழர் வெங்கடேசன்' என விளம்பரங்களில் போட்டுக் கொள்ள பெருந் தன்மையுடன் சம்மதித்தாராம் சுசீந்திரன். இந்தப் படத்தை எடுப்பதற்கு பல வழிகளிலும் உதவியிருக்கி றார் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ. அன்பழகன்.
"களவாணி-2'- விற்கு இரண்டுமுறை பஞ்சாயத்து வந்து, இரண்டு முறையும் சரிபண்ணப்பட்டது. இப்போது ஜெயக்குமார் என்பவர், கடந்த 5-ஆம் தேதி ரிலீசாக வேண்டிய படத்திற்கு 4-ஆம் தேதி கோர்ட்டில் ஸ்டே வாங்கினார். அந்த ஸ்டேவை உடைக்க டைரக்டர் சற்குணமும் போராடினார். இதற்கிடையே படத்தில் நடித்த கஞ்சா கருப்புவுக்கு சம்பளப் பாக்கி இருப்ப தால், படத்தின் புரமோ ஃபங்ஷனுக்கு வரமறுத்து விட்டாராம் கருப்பு.
"இன்று- நேற்று- நாளை' ஹிட்டானதைத் தொடர்ந்து, அதன் 2-ஆம் பாகத்தை எடுக்க ஆரம்பித்திருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி. குமார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி. கார்த்திக் டைரக்ட் பண்ணுகிறார். "முண்டாசுப்பட்டி', "இன்று- நேற்று- நாளை' படங்களில் துணை இயக்குனராக வேலை செய்தவர் இந்த கார்த்திக். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஹீரோவாக விஷ்ணு விஷாலும் ஹீரோயினாக பிரியா பவானி சங்கரும் கமிட் ஆகியுள்ளனர். முதல் பாகத்தை டைரக்ட் பண்ணிய ரவிக்குமார், தனது சிஷ்யனுக்காக இப்படத்தின் கதை- திரைக்கதையை எழுதியுள்ளார்.
"சண்டக்கோழி-2' சரியாக ஓடாததால் அப்செட்டில் இருந்தார் டைரக்டர் லிங்குசாமி. அதேபோல் அப்பட ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கும் தமிழில் பெரிதாக வாய்ப்பில்லை. இப்போது "சீயான்' விக்ரமிடம் கதை ஒன்றைச் சொல்லி, நம்பிக்கையுடன் உள்ளாராம் லிங்குசாமி.
லிங்குசாமி சங்கதி இப்படி என்றால் பாலாவின் சங்கதியோ சங்கடமா இருக்கு. பாலா டைரக்ஷனில் விக்ரம் மகன் ஹீரோவாக அறிமுகமாகிய "வர்மா' படத்தைத் தூக்கி தூரப் போட்டுவிட்டு, அதே துருவ்வை வைத்து, வேறொரு டைரக்டரை வைத்து படத்தை எடுத்து முடித்துவிட்டது தயாரிப்பு தரப்பு. கொஞ்சநாள் அப்செட் மூடில் இருந்த பாலா சூர்யா, விக்ரம், ஆர்யா இவர்களிடம் கதை சொல்லி பல மாதங்களாகிவிட்டதாம். இன்னும் அந்த ஹீரோக்கள் சைடில் இருந்து பாஸிடிவ் பதில் வரவில்லையாம்.