விஜய் சேதுபதிக்கு பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுத்தந்த படம் "சீதக்காதி'. இப்படத்தின் டைரக்டர் பாலாஜி தரணிதரன் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் பண்ணுகிறார். இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தீவிரமாக நடப்பதால், "க/பெ ரணசிங்கம்' என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய் சேதுபதி. "தர்மதுரை' படத்திற்குப் பின் விஜய் சேதுபதியுடன் "ரணசிங்க'த்துடன் ஜோடி போடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். "விடுப்பா விடுப்பா விருமாண்டி' புகழ் பெரிய கருப்புத் தேவரின் மகன் விருமாண்டிதான் "க/பெ ரணசிங்க'த்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். "அறம்' கோபி நயினாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் விருமாண்டி.
சமுத்திரகனி, "வேல' ராமமூர்த்தி, "பூ' ராம் என பன்முகக் கலைஞர்கள் "ரணசிங்க'த்தில் இருக்கிறார் கள். படத்தின் ஷூட்டிங் ராமநாதபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது. "அறம்', "ஐரா', "விஸ்வாசம்' படங்களை வாங்கி, ரிலீஸ் செய்த கே.ஜே.ஆர்.
ராஜேஷ்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.
அப்புறம் முக்கியமான ஒரு சங்கதி என்னன்னா...
இசையும் ஹீரோவுமான ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி, இந்தப் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
கொஞ்சம் சறுக்கலில் இருந்த விஜய் ஆண்டனி "கொலைகாரன்'’ சூப்பர் ஹிட்டால் செம ஹேப்பியாக இருக்கிறார். எல்லாம் வீடு மாறிய ராசிதானாம்.
இப்போது பாபு யோகேஸ்வரன் டைரக்ஷனில் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடந்து ரிலீசுக்குத் தயாராக இருக்கும் "தமிழரசன்' படமும் தப்பு பண்ணாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தின் ஹீரோயினாக ரம்யா நம்பீசன், வில்லிலியா அல்லது வெயிட்டான கேரக்டரா என்பது தெரியாத சங்கீதா என பலர் இருக்கிறார்கள். படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
"என்.ஜி.கே.' படத்தில் அன்புமணி ராமதாசை தாக்கி வசனங்களும் காட்சிகளும் இருப்பதால், டைரக்டர் செல்வராகவன்மீதும், ஹீரோ சூர்யாமீதும் செம கடுப்பில் இருக்கிறார்கள் பாட்டாளி சொந்தங்கள். ஆனால் படம் ஊத்திய ஊத்தலிலில் ரொம்பவே நொந்துவிட்டார் சூர்யா. அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சாயிஷா ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் தயாராகியிருக்கும் "காப்பான்' கண்டிப்பாக நம்மைக் காப்பாத்துவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சூர்யா.
"கொலைகாரன்' வெற்றியால் "ஐ ஆம் வெரி ஹேப்பி' என்கிறார் படத்தின் ஹீரோயினான ஆஷிமா நர்வல். அரியானா மாநிலத்தில் பிறந்த ஆஷிமா ஜாட் இனத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்ததும் மாடலிலிங் துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்டிசனான இவர் "மிஸ் சிட்னி', "மிஸ் இந்தியா குளோபல்' பட்டங்களையும் வென்றிருக்கிறார். வடநாட்டு நடிகைகள் வழக்கம்போல் தெலுங்கு சினிமாவழியாக தமிழ் சினிமாவில் என்ட்ரியாவதுபோல, தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துவிட்டு, "கொலைகாரன்' மூலம் தமிழில் என்ட்ரியாகி இருக்கிறார் ஆஷிமா. உருண்டையான முகம், பெரிய கண்கள் என பளிச்சென இருக்கும் ஆஷிமா நர்வலுக்கு நடிப்பும் ஓரளவு நன்றாக வருகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம். என்ன அம்மணி வரலாம்ல?
அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து, சிம்புவின் "மாநாடு' படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு டைரக்ட் பண்ணும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி போடுகிறார் நடிகை லிலிசியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இசை யுவன்சங்கர் ராஜா.
""ஷூட்டிங்க் தொடங்குவதற்கான பக்காவான முன்னேற்பாடுகளை முடித்துவிட்டு, ஜூன் மாதம் 25-ஆம் தேதி மலேசியாவில் ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறோம். சிம்பு நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம். இப்படம் பற்றி வதந்தி பரப்பியவர்களின் வாயை இப்போது அடைத்துவிட்டோம்'' என பூரிப்புடன் சொல்கிறார் "மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் ரவுண்ட் வருகிறார் ரெஜினா சாண்ட்ரா. இப்போது தெலுங்கில் பி.வி.பி. சினிமா பேனரில், பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி தயாரிக்கும் "எவரு' என்ற த்ரில்லர் படத்தில் வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறார் ரெஜினா. அறிமுக இயக்குநர் வெங்கட் ராம்ஜி டைரக்ட் பண்ணும் ஷூட்டிங், கொடைக்கானல், ஹைதராபாத் ஏரியாக்களில் நடந்துள்ளது.
"மணியக்காரன் குடும்பம்' படத்தை அடுத்து, தம்பி ராமையா தனது மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து "சிறுத்தை சிவா' என்ற படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் நடந்து வருகிறது.
கும்பகோணம், மயிலாடுதுறை, உடையார் பாளையம், கும்மிடிப்பூண்டி, புதுச்சேரி என பல ஊர்களில் விறுவிறு என ஜீவாவின் "சீறு' படத்தை எடுத்துமுடித்துள்ளார் ரத்னசிவா. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்து படம் ரிலீசானதும் "றெக்க'-க்குப் பின் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து படம் டைரக்ட் பண்ணப் போகிறாராம் ரத்ன சிவா.
"சண்டிவீரன்' படத்தில் "அலுங்குறேன் குலுங்குறேன்' என்ற பாடலை எழுதிய கவிஞர் மணி அமுதவன், விமல்- ஓவியா ஜோடியில் சற்குணம் டைரக்ஷனில் ரிலீசாகப் போகும் "களவாணி-2' படம்மூலம் இசையமைப் பாளராகிறார்.
செம சூப்பர் ஹிட்டான "96' படத்தின் பாடல்களை எழுதிய கவிஞர் கார்த்திக் நேத்தா, பாடலாசிரியலிருந்து டைரக்டராக புரமோஷன் ஆகிறார். டைரக்ஷன் கார்த்திக் நேத்தா என்று விரைவில் வெளியாகலாம்.
தங்கர்பச்சான் டைரக்ஷனில் "களவாடிய பொழுதுகள்' என்ற படம் 2017-ல் தயாராகி அப்படியே பெட்டிக்குள் முடங்கிவிட்டது. அந்தப் படத்தில் பிரபுதேவாவும் பூமிகாவும் ஜோடி போட்டிருந்தார்கள் கல்யாணமாகி மும்பையில் செட்டிலாகி விட்ட பூமிகா 12 வருடங்கள் கழித்து மு.மாறன் டைரக்ஷனில் உதயநிதி- ஆத்மிகா ஜோடி போடும் "கண்ணை நம்பாதே' படத்தில் செம வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறாராம்.
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா, விரைவில் இந்திப்பட உலகின் மாஸ் டைரக்டரான கரன் ஜோகர் படத்தில் நடிக்கி றார் என்ற பேச்சு பாலிலிவுட் டில் ஓடியது. "இல்லை அது வெறும் வதந்திதான்' என்கிறது ஷாருக்கான்- கௌரிகான் தரப்பு. "சினிமாவில் என்ட்ரியாக சுஹானா இன்னும் கத்துக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன' என்கிறார் கான். கரன் ஜோகரும் "இப்போது பூமிகா படேன்ஹர் ஹீரோயினாக நடிக்கும் படத்தில் பிஸியாக இருக்கிறேன்' என்கிறார்.
ஒரு காலத்தில் வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஆர். சுந்தர்ராஜன். டைரக்ஷன் வாய்ப்பு குறைந்ததால், மணிவண்ணன் பாணியில் சினிமாவில் கேரக்டர் ரோல் களிலும், காமெடி ரோல் களிலும் நடித்தார். தற்போது டி.வி. சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பு ஒருபக்கம் என்றாலும், தனது சொந்த மாவட்டமான கோவையில் கேட்டரிங் தொழிலும் நடத்திவரும் ஆர். சுந்தர் ராஜன், இப்போது சென்னையிலும் கேட்டரிங் தொழிலை ஆரம்பித்திருக்கிறார்.