டைரக்டர் மிஷ்கினின் "பிசாசு' படத்தின்மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரயாகா மார்ட்டின். ""மற்ற மொழிப் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நடிக்கும்போது தனி சந்தோஷம் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருக்கி றார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டுவிடுவேன்'' என ரொம்பவே உணர்ச்சிவசப்படுகிறார் பிரயாகா. சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷுடன் மலையாளத்தில் "உல்டா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் பிரயாகா, தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.

ff

"நான் அவனில்லை', "அஞ்சாதே', உட்பட 13 படங்களைத் தயாரித்திருக்கும் நேமிசந்த் ஜபக் நிறுவனத் தின் ஹித்தேஷ் ஜபக், பதினான்காவது படத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமான இதை ஜி.என். கிருஷ்ணகுமார் டைரக்ட் பண்ணுகிறார்.

Advertisment

bbb

லையாளத்தில் "காலேஜ் டேஸ்', "காஞ்சி', "டியான்' படங்களை இயக்கியவர் இந்த கிருஷ்ணகுமார். ஹீரோயினாக மானஸா ராதாகிருஷ்ணன் கமிட் ஆகியுள்ளார்.

Advertisment

இன்னொரு கேரக்டரில் வித்யா பிரதீப் மற்றும் குருசோமசுந்தரம், மாரிமுத்து, "பசங்க' சிவக்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

bb

ட்டு கோடி ரூபாய்க் கும்மேல் கடனாளியாகி விட்டதால், சென்னை ஏவிஎம் ஆஸ்டோ அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாங்கிப் போட்டிருந்த வீட்டை விற்றுவிட்டாராம் விஜய் ஆண்டனி. இப்போது அவர் குடியிருக்கும் ஆழ்வார்பேட்டை வீடு மட்டும்தான் அவருக்கு சொந்தமாக உள்ளது.

ஏகப்பட கடனாளியாகி விட்டதால், சென்னை வளசரவாக்கத்தில் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றுவிட்டு, அதே ஏரியா வில் 30 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டுக்குப் போனார் காமெடி கஞ்சா கருப்பு. இப்போது படங்கள் எதுவும் கைவசம் இல்லாததால் சொந்த ஊரான சிவகங்கை யிலேயே டேரா போட்டு விட்டாராம் கஞ்சா கருப்பு.

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியின் "அசுரன்' படத்தின் பேஜ் ஒர்க் சீன்களின் ஷூட்டிங் கோவில் பட்டியில் நடந்துவருகிறதாம்.

தான் நடிக்கும் படங்களின் செட் பிராப்பர்ட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கென்றே சென்னை வளசர வாக்கத்தில் வீடு ஒன்றை வாங்கியுள் ளாராம் தனுஷ். இதற்கிடையே தனுஷ் ரசிகர் மன்றத் தின் போஸ்டிங் போடுவதில் ஏற்பட்ட கசமுசா வால், தனுஷ் ரசிகர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்துள் ளாராம் டைரக்டர் சுப்பிரமணிய சிவா.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், ஜெய்யை ஹீரோவாக போட்டு "லவ் மேட்டர்' என்ற படத்தை எடுத்துவருகிறார். எஸ்.ஏ.சிக்குச் சொந்த மான அடையாறு பங்களாவில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

குழந்தைகளை வைத்து ஒரு படத்தை எடுத்துவருகிறார் "உயிர்' டைரக்டர் சாமி. படத்தின் ரீ ரெக்கார்டிங்குக்காக இசைஞானியிடம் பேசியபோது, ""மொத்த படத்தையும் எடுத் துட்டு வாய்யா. ஆர்.ஆர்.போட்டுத் தர்றேன்'' என்றாராம் ஞானி.

விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கி றார் பொன் ராம். சிவகார்த்திகேயனை வைத்து எடுத்த "சீமராஜா' சறுக்கியதால், ரொம்ப ரொம்ப அக்கறை எடுத்து ஸ்கிரிப்ட் எழுதிவருகிறாராம் பொன் ராம்.

bits

"நான் அவனில்லை' ஜீவன், நமீதா மற்றும் ஐந்து ஹீரோயின்களைப் போட்டு இரண்டு வருடத்திற்குமுன் "ஜெயிக்கிற குதிரை' என்ற படத்தை ஆரம்பித்தார் டைரக்டர் ஷக்தி சிதம்பரம். இந்தப் படத்தின் ஷூட்டிங் நொண்டியடித்துக் கொண்டிருந்தபோது, "சார்லின் சாப்ளின் -2' சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல வரும் வருமானத்தை வச்சு "ஜெயிக்கிற குதிரை'-யை கண்டினியூ பண்ண லாம் என ப்ளான் பண்ணினார். ஆனால் "சார்லி சாப்ளின்-2' ஊத்திக் கொண்டதால் தயாரிப்பாளர் டி. சிவாவும் நொந்துபோனார். ஷக்தி சிதம்பரமும் "ஜெயிக்கிற குதிரை'யைக் கைவிட்டு விட்டார்.

dd

"எல்.கே.ஜி.' படம் எடுத்த ஐசரி கணேஷிடம் மீண்டும் ஒரு கதை சொல்லி ஓ.கே. வாங்கியுள்ளாராம் ஆர்.ஜே. பாலாஜி. இதிலும் இவரே ஹீரோ. தானே டைரக்ட் பண்ணலாமா, இல்லை எல்.கே.ஜி. டைரக்டரையே செலக்ட் பண்ணலாமா என்ற யோசனையில் உள்ளாராம் பாலாஜி.

னது மகன்களை ஹீரோவாக கமிட் பண்ணவரும் தயாரிப்பாளர்களிடம் வகைதொகையில்லாமல் அட்வான்ஸ் வாங்கிக் குவிக்கிறாராம் மயில்சாமி. எப்ப ஷூட்டிங் வச்சுக்கலாம் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தொடர்புகொண்டு கேட்டால், ""பையன்களுக்கு உடம்பு சரியில்லை' அடுத்த மாசம் பார்க்கலாம்'' என ஜவ்வு போடுகிறாராம் மயில்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டார் நடிகர் மன்சூரலிகான். பிரச்சாரத்தின்போது, மீன் விற்பது, கறிக்கடையில் மட்டன் வெட்டுவது, காய்கறி விற்பது என டிசைன் டிசைனாக கலக்கினாலும் மன்சூரலிகானால் டெபாசிட்டை வாங்க முடியவில்லை. போனால் போகட்டும் போடா என ரிலாக்ஸாகிவிட்ட மன்சூர், தனது மகனை ஹீரோவாகப் போட்டு எடுத்த "கடமான் பாறை' பட ரிலீஸ் வேலைகளில் மும்முரமாகிவிட்டாராம்.

bis

"ஒண்டிக் கட்டை'-யில் ஹீரோயினாக அறிமுகமான நேகாவை தமிழ் நாட்டிலிருந்து போனில் யார் தொடர்பு கொண்டாலும் போனை எடுப்பதே யில்லையாம். ஏன்னா "ஒண்டிக்கட்டை' தந்த அனுபவம் அப்படியாம்.

சையமைப் பாளர் சந்தோஷ் நாராயணன், சென்னை அருகே கொளப்பாக்கத்திலுள்ள தனது வீட்டிலேயே ரிகார்டிங் ஸ்டுடியோ ஒன்றைக் கட்டியுள்ளார். இதேபோல் இசையமைப்பாளர் சத்யாவும் தனது வீட்டிலேயே ஸ்டுடியோ அமைத்துள்ளார்.

ண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரான "தோழர் வெங்கடேஷ்' என்ற படம் இண்டஸ்ட்ரியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைரக்டர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்த மகேஷ் தனது பெயரை மகாசிவன் என மாற்றி இப்படத்தை எடுத்திருக்கி றார். படத்தின் பாடல்களும் எடிட்டிங்கும் இவரே. தனது சிஷ்யனின் உழைப்பை மெச்சி, சுசீந்திரனே இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்.