சன் பிக்சர்ஸ்- டைரக்டர் பாண்டிராஜ்- சிவகார்த்திகேயன் கூட்டணியின் படப்பிடிப்பு எளிமையான முறையில் ஆரம்பமாகிவிட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் சமுத்திரகனி, நட்டி என்கிற நட்ராஜ், ஆர்.கே. சுரேஷ், யோகிபாபு, வேல ராமமூர்த்தி என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களம் இறங்கிய பாண்டிராஜ், முதன்முதலாக கேமராமேன் நீரவ்ஷாவுடன் கைகோர்க்கிறார்.
கைவசம் ஒன்றிரண்டு படங்கள் தமிழில் இருப்பதாலும், தெலுங்குப் பக்கம் மார்க்கெட்டைப் பிடிப்பதற்காவு
சன் பிக்சர்ஸ்- டைரக்டர் பாண்டிராஜ்- சிவகார்த்திகேயன் கூட்டணியின் படப்பிடிப்பு எளிமையான முறையில் ஆரம்பமாகிவிட்டது. ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் சமுத்திரகனி, நட்டி என்கிற நட்ராஜ், ஆர்.கே. சுரேஷ், யோகிபாபு, வேல ராமமூர்த்தி என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களம் இறங்கிய பாண்டிராஜ், முதன்முதலாக கேமராமேன் நீரவ்ஷாவுடன் கைகோர்க்கிறார்.
கைவசம் ஒன்றிரண்டு படங்கள் தமிழில் இருப்பதாலும், தெலுங்குப் பக்கம் மார்க்கெட்டைப் பிடிப்பதற்காவும் ஃப்ரெஷ்ஷாக ஃபோட்டோ ஷூட் நடத்தி, வாரத்திற்கு இரண்டுமுறை அந்த ஃபோட்டோக்களை தனது பி.ஆர். ஓ. ரியாஸ் அஹமது மூலம் ரிலீஸ் பண்ணிவருகிறார் நிக்கி கல்ராணி.
டைரக்டர் ஏ.எல். விஜய்- சாய்பல்லவி இவர்களுக்கிடையிலான நெருக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறதாம். இந்த விவகாரம், மாஜி மனைவி யான அமலாபாலுக்கும் டீடெய்லாக தெரியும் என்பதால், மேற்படி இருவரின் நெருக்கத்தை உடைக்க என்ன செய்யலாம் என தீவிர ஆலோசனை பண்ணி, தமன்னா வுடன் விஜய் நெருங்கிப் பழகுகிறார் என்ற நல்ல செய்தியைப் பரப்பி வருகிறாராம்.
விஜயா புரொடக்ஷன்ஸ் பி. பாரதி ரெட்டியின் 6-ஆவது படம் "சங்கத் தமிழன்'. விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜும் முதன்முறையாக ஜோடி போடுகிறார்கள். விஜய் சந்தர் டைரக்ட் பண்ணிவரும் "சங்கத் தமிழ'னின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.
"தர்மபிரபு' படத்தில் யோகி பாபுவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் "கடலோரக் கவிதைகள்' ரேகா. ஆனால் அவருக்கோ, யோகிபாபுவுக்கு ஜோடி யாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதே ஆசை யோகிபாபுவுக்கு இருக்கிறதாம். இதை "தர்மபிரபு' டிரைலர் ரிலீஸ் விழாவில் இருவருமே ஒத்துக்கொண்டார்கள். மேடையையும் மைக்கையும் பார்த்தா நம்ம வாய் சும்மா இருக்காது, ஏதாவது அக்கப்போர் ஆகிவிடும் என நினைத்த ராதாரவி, படத்தில் நடித்திருந்தும் அந்த விழாவிற்கு வரவில்லை.
சினிமா வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால், கையில் இருக்கும் காசை வைத்து ஓட்டல் ஒன்றை திறக்கும் ஐடியாவில் இருக்காராம் சிங்கம்புலிலி. சென்னை அசோக்நகர், கே.கே.நகரில் ஓட்டலுக்கான இடம் தேடிவருகிறார் புலிலி.
மனைவி ஃபாத்திமா மற்றும் மச்சினிச்சிக்கு தயாரிப்பு மேற்பார்வை பொறுப்பை முழுவதுமாகக் கொடுத்துவிட்டு, முழுக்க முழுக்க நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி.
விஜய் சேதுபதியை வைத்து "றெக்க' என்ற சுமாரான வசூல் படத்தை எடுத்த ரத்னசிவா, இப்போது "சீறு சீறு' என்ற டைட்டிலிலில் ஜீவாவை வைத்து ஒரு படம் டைரக்ட் பண்ணிவருகிறார். "றெக்க' படத்தை ஒரே மாதத்தில் எடுத்து முடித்தார் சிவா. ஆனால் இப்போது ஜீவா நான்கு படங்களில் பிஸியாக இருப்பதால், "சீறு சீறு' ஷூட்டிங், மெதுவாகத் தான் போகிறதாம்.