விஷால்- ராஷி கண்ணா- ரா. பார்த்திபன்- ராதாரவி காம்பினேஷனில் தயாராகிவரும் "அயோக்கியா' படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. ஃபாரின் லொக்கேஷனான துருக்கியில், பைக் சேஸிங் சீனைப் படமாக்கியபோது நடந்த விபத்தில், விஷாலுக்கு இடதுகாலிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியைப் பொறுத்துக்கொண்டு நடித்துவிட்டு, அங்கிருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார் விஷால். போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு ஏறிவிட்ட தால் தயாரிப்பாளருக்கு இப்பவே கண்ணைக் கட்டுதாம்.

vishal

மிழிலும் தெலுங்கிலும் ஏகப்பட்ட பிஸியில் இருந்த ஸ்ருதிஹாசன் இப்போது எங்கிருக்கிறார்? என்ன பண்ணுகிறார் என கோலிவுட்டில் யாருக்குமே தெரியவில்லை. மியூஸிக் ஆல்பம் தயாரிப்பதில் லண்டனில் பிஸியாக இருக்கிறார் என்கிறார்கள். இல்லையில்லை. லண்டன் காதலருடன் கல்யாணத்திற்கு ரெடியாவதால்... படங்கள் எதையும் ஒத்துக்கொள்வதில்லை என்கிறார்கள். அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஸ்ருதிக்குப் பிடிச்ச ஃபேவரைட் ஹீரோ அஜீத்தானாம்.

Advertisment

aசுந்தர் சி.யின் "ரெண்டு' படத்தின் மூலமாகத்தான் மாதவனுக்கு ஜோடியாகத் தமிழில் அறிமுகமானார் அனுஷ்கா. 13 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் மாதவனுடன் ஜோடிபோடுகிறார் அனுஷ்கா.

சஸ்பென்ஸ், த்ரில்லர் படமான இதன் கதையை கோனா வெங்கட், கோபி மோகன் இருவரும் எழுத, ஹேமந்த் மதுகர் டைரக்ட் பண்ணுகிறார். இந்தப் படத்தில் மாதவன்- அனுஷ்காவுடன் அஞ்சலியும் ஷாலினி பாண்டேவும் இருக்கிறார்கள்.

"கன்னித்தீவு', "வெல்வெட்', "ராஜபார்வை', உட்பட கைவசம் ஏழெட்டு படங்கள் வைத்திருக்கிறார் வரலட்சுமி. க்ரைம். த்ரில்லர் படமான "வெல்வெட்' ஷூட்டிங் முடிந்துவிட்டது, "ராஜபார்வை' ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. "நான் ஒப்புக்கொள்ளும் படங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அதனால்தான் ஹீரோ யார் என நான் கேட்பதில்லை'' என்கிறார் வரலட்சுமி.

Advertisment

ஜினி- பி. வாசு- விஜயசாந்தி காம்பினேஷனில் 1992-ல் ரிலீசான "மன்னன்' தாறுமாறு ஹிட் அடித்தது. அந்த மன்னனைத் தான் உல்டா பண்ணி, இப்போது சிவகார்த்திகேயன்- நயன்தாரா காம்பினேஷனில் "மிஸ்டர் லோக்கல்' படத்தை எடுத்து முடித்துள்ளாராம் ராஜேஷ். எம்.

டிகர் சங்கத்துக்கு புதுக்கட்டடம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து, முடிவடையும் நிலையில் உள்ளது. கட்டுமானப் பணிகள் முழுவதும் கார்த்தியின் கன்ட்ரோல்தான். ஒருபைசா செலவு என்றாலும், கணக்கு வழக்கு பக்காவாக இருக்க வேண்டும் என்பதில் கறா ராக இருக்கிறாராம் கார்த்தி. இந்த புதுக்கட்டடமானது காலந்தோறும் நினைவில் இருக்க வேண்டும், அதற்கு இப்போதிருக்கும் நிர்வாகம்தான் காரணம் என்று சினிமாக்காரர்கள் மட்டுமல்ல; பொது மக்களும் நினைக்க வேண்டும் என்பதால் கர்மசிரத்தையாக உழைக்கி றாராம் கார்த்தி. இப்படி பொதுப்பணிகளிலும், சினிமாவிலும் கார்த்தி கடுமையாக உழைப்பதை, அப்பா சிவகுமார் பெருமையுடன் பூரிக்கும் அதே நேரத்தில், தனது மகன்களான சூர்யாவும் கார்த்தி யும் வருடத்திற்கு ஒருமுறை தங்களது மனைவி, குழந்தை களுடன் வெளிநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்பதில் ஸ்ட்ரிக்டாக இருக்காராம்.

செல்வராகவனின் "மாலைநேரத்து மயக்கம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வாமிகா. கோதுமைக்கு பேர்பெற்ற பஞ்சாப் தான் இந்த குளுகுளு பார்ட்டிக்கு சொந்த ஊர். வாமிகாவின் அப்பா ஒரு எழுத்தாளர், அம்மா டீச்சர். ஒரு தம்பியோ பஞ்சாபி மொழி சினிமாவில் வளரும் நடிகர். "மாலை நேரத்து மயக்க'த்திற்குப்பின் கொஞ்சநாட்கள் தமிழில் தலைகாட்டாமல் இருந்த வாமிகா, இப்போது எஸ்.ஜே. சூர்யாவின் "இறவாக் காலம்' மூலம் ரீஎன்ட்ரியாகிறார். சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் தயாரித்து நடித்த "9' படத்தின் மூலம் மல்லுவுட்டிலும் கால்பதித்திருக் கிறார் வாமிகா.

b

2018-ஆம் ஆண்டு இந்தியில் ரிலீசான "ஹிட்ச்ஹி'-க்குப்பின் ராணிமுகர்ஜி, இப்போது "மரடானி-2'-வில் கமிட் ஆகியுள்ளார். 2014-ல் ராணிமுகர்ஜி நடித்து செம ஹிட்டான "மரடானி'-யின் இரண்டாம் பாகம்தான் இப்போது. அந்த "மரடானி'-யை டைரக்ட் பண்ணிய அறிமுக இயக்குநரான கோபி புத்ரன்தான் இப்போது "மரடானி-2'-வை டைரக்ட் பண்ணுகிறார். ஷிவானி ராய் என்ற பவர்ஃபுல் போலீஸ் அதிகாரியாக அதிரடி கிளப்பப் போகிறாராம் ராணிமுகர்ஜி.

a

s

"பிரெட்டி உமென்' என்ற ஹாலிவுட் படத்தில் விபச்சார அழகியாக நடிக்கிறார் ஜூலியா ராபர்ட்ஸ். கேரக்டர் ஸ்டடிக்காக அமெரிக்காவில் இருக்கும் விபச்சார அழகிகளைச் சந்தித்து, அவர்கள் கஸ்டமர்களிடம் ஒருமணி நேரத்திற்கு கேட்கும் அமவுண்டையும் கொடுத்து, அவர்களின் தொழில் டெக்னிக் கைக் கேட்டு வந்தாராம்.