சுந்தர். சி.யிடம் அசிஸ்டெண்டாக இருந்தவர் கதிர். நீண்ட போராட்டத்திற்குப் பின் சசிகுமார்- நிக்கி கல்ராணி காம்பினேஷனில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. முப்பது நாட்களாக பொள்ளாச்சி ஏரியாவில் விறுவிறுப்பாக ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. டைரக்டரின் ஸ்பீடைப் பார்த்து சசிகுமாரே ஆச்சரியப்பட்டார். இந்த ஆச்சர்யம் ஒரு வாரம்கூட நீடிக்கவில்லை. பகலில் ஷூட்டிங் முடிந்து ராத்திரியானால் போதும், டைரக்டர் கதிருக்கு "அந்தத் துணை' கண்டிப்பாக வேண்டுமாம். "அது' இல்லேன்னா மறுநாள் ஷூட்டிங்கில் சொதப்ப ஆரம்பித்திருக்கிறார் கதிர். சசிகுமார் பஞ்சாயத்து பண்ணியும் கதிர் சரிப்பட்டு வராததால், தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

nikhil

மார்ச் 24-ஆம் தேதி நடக்கவிருக்கும், தனது மகளின் திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்தாலும், கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம்-2'-வை எடுப்பதிலும் மும்முரமாக உள்ளார் ரா. பார்த்திபன். முதல் பாகத்தைப்போலவே முன்னணி ஹீரோக்களை ஒருசில சீன்களில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம் பார்த்தி.

Advertisment

jothika

வறுமைக் கோட்டிற்குக்கீழே இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவாக உள்ளது. அந்த இரும்புச்சத்துக் குறைபாடு, பிறக்கும் குழந்தையையும் பாதிக்கும். எனவே ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா.

Advertisment

அமிதாப்பச்சன், ரன்பீர்கபூர், அலியாபட், நாகார்ஜுனா காம்பினேஷனில் பிரம்மாண்டமாகத் தயாராகிவருகிறது "பிரம்மாஸ்த்ரா.' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் லோகோவை சமீபத்தில் நடந்த கும்பமேளாவில் ரிலீஸ் பண்ணியுள்ளனர். மூன்று பாகங்களாக தயாராகும் "பிரம்மாஸ்த்ரா'-வின் முதல் பாகம், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீசாகிறது.

trishityd

சீனியர் காமெடி நடிகர் சார்லிக்கு, டிரைவர், மேனேஜர் என யாருமே கிடையாதாம். இரண்டுமே அவரின் மனைவி தானாம்.

ஆனால் யோகிபாபுவும் வையாபுரியும் அடிக்கடி டிரைவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்களாம்.

சிருஷ்டி டாங்கே செமஹேப்பியாக இருக்கிறார்.

அவரின் ஹேப்பிக்கு காரணம், அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் (கடந்த 8-ஆம் தேதி) ரிலீசாகியுள்ளது. பரத்துடன் ஜோடி போட்ட "பொட்டு', கதிருடன் ஜோடி போட்ட "சத்ரு' என ரிலீஸ் ஆகியிருப்பதால், இனிமேல் தனது மார்க்கெட் சூடுபிடிக்கும் என்னும் நம்பிக்கையில் இருக்கார் சிருஷ்டி டாங்கே. "பொட்டு' அமானுஷ்ய கதை என்றால், "சத்ரு' க்ரைம் த்ரில்லர் கதை என இரண்டு ஜானர்களில் பெர்ஃபாம் பண்ணியிருக்கிறார் சிருஷ்டி. பரத்தின் "பொட்டு' 1,000 தியேட்டர்களில் ரிலீசாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது.