பிரபு சாலமன் டைரக்ஷனில் தயாராகும் படத்திற் குத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் கால்ஷீட் கொடுத் துள்ளாராம் விஷ்ணு விஷால். அதனால் தனது சொந்தத் தயாரிப் பில் உருவாகிவந்த "கவரிமான் பரம்பரை' படத்திற்கு தற்காலிமாக பிரேக் விட்டுள்ளாராம் விஷ்ணு விஷால்.
ரஜினியின் "பேட்ட'க்குப்பிறகு தனது மார்க்கெட் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்தார் காமெடி நடிகர் முனீஸ்காந்த். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காத தால், சின்னச்சின்ன கேரக்டர்களில் தினசரி ரூ.50 ஆயிரம் சம்பளத்துக்கு ஓ.கே.சொல்லி வருகிறாராம்.
யானையை மையமாக வைத்து தாய்லாந்தில் நடந்துவரும் படத்தின் ஷூட்டிங்கில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறார் டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார். அதற்கடுத்து, அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் கிட்டத் தட்ட செகன்ட் ஹீரோ கேரக்டரிலும் நடிக்கும் ரவிக்குமாருக்கு, "படையப்பா-2' எடுக்கும் யோசனையும் உள்ளதாம்.
"ஆதலால் காதல் செய்வீர்' படத்தால் நஷ்டப்பட்ட டைரக்டர் சுசீந்திரன், இப்போது எடுத்து முடித்திருக்கும் "கென்னடி க்ளப்' படத்தை, செலவில்லாமல் தனது சொந்த ஊரான ஒட்டன் சத்திரத்திலேயே எடுத்து விட்டாராம் ஹீரோவாக நடித்திருக்கும் டைரக்டர். சசிகுமாரைத் தவிர, மற்ற கேரக்டர்களுக்கு சொற்ப சம்பளம்தானாம். ஏன்னா நடித்தவர்கள் அத்தனைபேருமே ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர்களாம். எனவே "கென்னடி க்ளப்' தனக்கு லாபம் ஈட்டித் தரும் என்ற நம்பிக்கையில் இருக்காராம் சுசீந்திரன்.
டைரக்ஷன் பண்ணுவது, படம் தயாரிப்பது இதெல்லாம் இப்போதைக்கு தனக்கு தோதுப்படாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சசிகுமார். சமுத்திரக்கனியின் "நாடோடிகள்-2'-வின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்து, ஆடியோ ரிலீசுக்கும், அதன்பின் பட ரிலீசுக்கும் தயாராகிவிட்டது. சுந்தரபாண்டியனின் "கொம்பு வச்ச சிங்கம்டா' ஷூட்டிங் முழுதாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஸ்பீடாக நடந்துவருகின்றன. இப்போது சுந்தர்.சி.யின் அசோஸியேட் கதிர் டைரக்ஷனில் ஒரு படத்திற்கு கமிட் ஆகியுள்ளார். இன்னும் டைட்டில் வைக்காத அந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடி போடுகிறார் நிக்கி கல்ராணி.
ஜி.வி.பிரகாஷ்- சித்தார்த் காம்பினேஷனில் பைக் ரேஸை அடிப்படை யாகக்கொண்ட "ரெட்ட கொம்பு' படத்தை எடுத்து முடித்துவிட்டார் சசி. படத்தின் ஷூட்டிங் மொத்தமும் சென்னைக் குள்ளேயேதானாம். ஆஹா ஓஹோன்னு விளம்பரம் பண்ணி, எதிர்பார்ப்பைக் கிளப்பி, படம் ஓடாம போறதுக்குப் பதிலா, சைலண்டா எடுத்த "பிச்சைக்காரன்' ஹிட் அடித்த மாதிரி, இந்த "ரெட்ட கொம்பு' வையும் சைலண்டாக எடுத்து முடித்து விட்டாராம் சசி.
ஜீவா- அருள்நிதி கூட்டணியில் தயாராகும் "கே-13' படத்திற்காக காரைக்குடியில் பத்து லட்ச ரூபாய் செலவில் ‘அப்புச்சி ஃபைனான்ஸ்’ என்ற வட்டிக்கடை செட் போட்டிருக்கிறார்கள்.
"களவாணி-2'-வில் நடித்த நடிகர்கள்முதல் யூனிட் கார் டிரைவர்கள்வரை அனைவருக்கும் சம்பளப் பாக்கி வைத்துள்ளாராம் படத்தின் தயாரிப்பாளரும் டைரக்டருமான சற்குணம். எல்லாரும் சேர்ந்து போர்க்கொடி தூக்கியிருப்பதால், படத்தை ரிலீஸ் பண்ணமுடியாமல் தவிக்கிறார் சற்குணம்.
ரா. பார்த்திபன், விஜய் ஆன்டனி, ஆர்யா உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் செல்ஃப் டிரைவிங்தானாம்.
"உத்தரவு மகாராஜா'-வை அடுத்து, தனது ஜேசன் ஸ்டுடியோ பேனரில் ‘டூப்ளிகேட்’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார் நடிகர் உதயா. ஹாரர், த்ரில்லர் படமான இதை, டைரக்டர்கள் சசி, சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ்குமார் டைரக்ட் பண்ணுகிறார்.
டப்-ஸ்மாஷ் புகழ் மிருணாலினி ரவி முக்கிய கேரக்டரில் நடிக்கும் படத்தின் முதல் கட்டப் படப் பிடிப்பு முடிந்துவிட்டது. ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட் டுள்ளார் உதயா.
மகிழ்திருமேனி டைரக்ஷனில் இந்தர்குமார் தயாரிப்பில் உருவாகி, ரிலீசுக்கும் தயாராக உள்ள படம் "தடம்'. இந்த "தடம்' எனக்கு நிச்சயம் நல்ல தடத்தைக் காட்டும்'' என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஹீரோ அருண்விஜய். தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் என படத்தில் மூன்று ஹீரோயின் கள் இருக்கிறார்கள். காமெடிக்கு யோகிபாபு இருக்கி றார்.
விஜய்- நயன்தாரா- அட்லீ- கல்பாத்தி அகோரம் காம்பினேஷனில் தயாராகும் படத்தின் ஷூட்டிங், சென்னை பின்னி மில்லில் ஸ்டார்ட் ஆகிவிட்டது. பின்னி மில்லை முழுவதும் வாடகைக்கு எடுத்து, வடசென்னை ஏரியாவான இராயபுரம், தென்மாவட்டமான காரைக்குடி, இந்தியத் தலைநகரான டெல்லி ஆகிய ஊர்களை பல கோடி ரூபாய் செலவில் செட் போட்டுள்ளார்களாம். தொடர்ந்து 70 நாட்கள் இதே செட்டில்தான் ஷூட்டிங்காம்.
லட்சிய நடிகர் மறைந்த எஸ்.எஸ்.ஆருக்குச் சொந்தமாக சென்னை சாலிகிராமத் தில் எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் என்ற பெயரில் தியேட்டர் ஒன்று இருந்தது. அதிக கட்டணமில்லாத டிக்கெட், நல்ல சவுண்ட் சிஸ்டம் இருந்தும் சிலபல காரணங்களால் தியேட்டரை இழுத்து மூடினார்கள். எஸ்.எஸ்.ஆரின் வாரிசுகளுக்கிடையே ஏற்பட்ட சொத்து பிரிப்பு தகராறால், அந்த தியேட்டரை சத்யம் சினிமாஸ் வாங்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இப்போது அந்த இடத்தில் டிரைவ்-இன் தோசைக் கடை ஒன்று சில மாதங்கள் நடந்தது. இப்போது முழுவதையும் இடித்து தள்ளிவிட்டார்கள். விரைவில் காம்ப்ளெக்ஸ் ஒன்றைக் கட்டுவதற்கு பிரபல கட்டுமான நிறுவனம் வேலையை ஆரம்பித்துள்ளது.
பிரபுதேவா- நிக்கி கல்ராணி- ஷக்தி சிதம்பரம் காம்பினேஷனில் சமீபத்தில் ரிலீசான "சார்லி சாப்ளின்-2' காலை வாரியதால் கவலையில் இருக்கிறார் தயாரிப்பாளர் டி.சிவா. படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணியவருக்கு மூன்று கோடி ரூபாய் நட்டமாம். பிரபு தேவாவின் "தேள்' பட ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது.
அடுத்து ஏ.சி. முகில் டைரக்ஷனில் "பொன் மாணிக்கவேல்' ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது.
""செமத்தியான குளிர் சீசன். ஒடம்பே விறைச் சுப்போற அளவுக்கு பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு. ஆனாலும் இதயெல்லாம் சூப்பரா ரசிச்சு என்ஜாய் பண்ணுனேன்'' என இத்தாலியின் தலைநகரான ரோம், போப் ஆண்டவர் இருக்கும் வாடிகன் போன்ற நாடுகளுக்கு ஜாலி டூர் அடிச்சுட்டு வந்ததை ஆனந்தமாய் சொல்கிறார் ராஷி கண்ணா. "ஜெயம்'ரவியுடன் ஜோடிபோட்ட "அடங்கமறு' ஹிட், இப்போது "அயோக்கியா'வில் விஷாலுக்கு ஜோடி, அடுத்து விஜய்சேதுபதி, கார்த்தி ஆகியோருடன் தலா ஒரு படம் என கமிட்டாகி, கோலிவுட் மார்க்கெட்டிலும் ஸ்பீடாக பிக்-அப் ஆகிக்கொண்டிருக் கிறார் ராஷி கண்ணா.
உதயநிதியுடன் "கண்ணே கலைமானே' படத்தைத்தவிர, தமிழில் தமன்னாவுக்கு வேறு படங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்த நியூஸ் வந்திருக்கும் சினிக்கூத்து இதழ் கடைக்கு வர்றதுக்குள்ளோ, வந்தபிறகோ படங்கள் கமிட் ஆகியிருக்கலாம். ஆனாலும் அலட்டிக்காத தமன்னா, இந்த ஆண்டும் தனது பிறந்த நாளை மும்பை வீட்டில் ஹேப்பியாக கொண்டாடி, அவரின் மம்மி கையால் காஸ்ட்லியான வைர நெக்லஸை கிஃப்டாக வாங்கியிருக்கார். தெலுங்கு, தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் சிரஞ்சீவியின் "சைரா நரசிம்ம ரெட்டி'யை ரொம்பவும் எதிர்பார்த்திருக்கிறார் தமன்னா.
பெண் சிசுக் கொலையை அடிப்படையாக வைத்து தயாராகியிருக்கு "ஐரா.' படத்தில் கிராமத்து கருப்பு அழகியாகவும், நகரத்து நாகரிக அழகியாகவும் இருவேடங்களில் வருகிறார் நயன்தாரா. ஒரு நயன்தாராவுக்காக மற்றொரு நயன்தாரா வில்லன்களை வேட்டையாடுகிறா ராம். அந்த நயன்தாரா கருப்பா? நகரமான்னு தெரியல. சில நாட்களுக்கு "ஐரா'வில் பெரும் மேகதூதம் பாடல் ரிலீசாகி செம ஹிட்டடித்துள்ளது.
தமிழ் சினிமா ஃபீல்டில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக "புரூஸ்லி' படம்மூலம் அடி எடுத்து வைத்தவர் கீர்த்தி கர்பந்தனா. தமிழில் செம ஹிட் அடித்த "சுப்ரமணியபுரம்' படத்தின் கன்னட ரீமேக்கிலும் நடித்தார். தமிழில் "புரூஸ்லி'-க்குப்பின் எந்தப் படமும் கமிட் ஆகாததால், பாலிவுட் பார்ட்டியான அவர், இந்தியில் மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணும் முயற்சியில் குதித்து விட்டார். பாலிவுட் ஸ்பெஷலான போல் டான்ஸில் செம செக்ஸியாக போஸ் கொடுத்து கதிகலக்கிவரும் கீர்த்தி கர்பந்தனா "ஹவுஸ்ஃபுல்-4' இந்திப் படத்தில் போல் டான்ஸிலும், கத்திச் சண்டையிலும் பின்னிப் பெடலடுத்திருக்கிறாராம்.
தன்னைவிட பத்து வயது அதிகமுள்ள ஆர்யாவைத் திருமணம் செய்யவிருக்கும் சாயிஷா சைகலின் கைவசம் சூர்யாவுடன் நடித்து வரும் ‘காப்பான்’ படம் மட்டுமே உள்ளது. திருமணத் திற்குப்பின் நடிப்பதா வேண்டாமா என்பதை தன்னைக் காக்கப்போகும் கணவன் ஆர்யாவின் முடிவிற்கே விட்டுவிட்டாராம் சாயிஷா.
அருள் நிதியை வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான "இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை டைரக்ட் பண்ணிய பத்திரிகையாளர் மு.மாறன், அடுத்ததாக உதயநிதியை டைரக்ட் பண்ணுகிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதற்கு "கண்ணை "நம்பாதே' என டைட்டில் வைத்திருக்கிறார் மாறன். உதயநிதிக்கு ஜோடி யாக மீசைய முறுக்கு' ஆத்மிகா கமிட் ஆகியிருக்கி றார். படத்தின் முக்கால்வாசி ஷூட்டிங் சென்னையைச் சுற்றிலும், சில காட்சிகள் புதுச்சேரியிலும் நடக்கப் போகிறதாம்.
கடந்த 2, 3 தேதி களில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. 2-ஆம் தேதி நடந்த இளையராஜா திரைக்கொண்டாட்டம் நிகழ்ச்சியில் நடிகைகள் நமீதாவும் மீரா மிதுனும் செமதூக்கலாக டான்ஸ் போட்டிருக்கிறார்கள்.