* "மேயாத மான்' படம்மூலம் கதாநாயகியாக அறிமுகமான இந்துஜா தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகி வருகிறார். விக்ரம் பிரபுவைத் தொடர்ந்து தற்போது "மகாமுனி'-யில் ஆர்யாவுக்கு ஜோடியாகி இருக்கிறார்.

இந்துஜா "மெர்குரி' படத்தில் நடித்தபோது பிரபுதேவாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இதை மறுத்துள்ள இந்துஜா பிரபுதேவா தனது குரு போன்றவர் என்கிறார்.

* தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்தவர் சிம்ரன். திருமணத்திற்குப் பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லை. இருப்பினும் தொடர் முயற்சி காரணமாக, சிவகார்த்திகேயனின் "சீமராஜா' வில் வில்லியாக நடித்த சிம்ரன், தற்போது ரஜினியின் "பேட்ட' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

peta

Advertisment

இந்த நிலையில், தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதற்கான தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள சிம்ரன், தெலுங்கிலும் தற்போது ஒரு படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

kamalsimbu

Advertisment

* "இந்தியன்-2' படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் கேரக்டர் தவிர்த்து மற்ற கேரக்டர் களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் முக்கியமான ஒரு கேரக்டருக்காக துல்கர் சல்மான் தேர்வாகியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் தமிழில் இப்போது "கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்', "வான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதே நேரம் "இந்தியன்-2' படத்தின் இன்னொரு கேரக்டருக்காக நடிகர் சிம்புவையும் படக் குழுவினர் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தியன் தாத்தா வேடத்தில் நடிகர் கமல் நடிக்கவிருக்கும் காட்சிகளை உக்ரைன், போலந்து ஆகிய நாடுகளில் படமாக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. இது கமலின் கடைசிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

* பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பி.யின் குரலை கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட பாடல்களில் அதிகமாக கேட்க முடியவில்லை. தற்போது மீண்டும் இளவட்ட இசையமைப்பாளர் களின் இசையில் பரவலாக பாடத் தொடங்கியிருக் கிறார்.

அந்தவகையில், தமிழில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள "பார்ட்டி' படத்தில் பிரேம்ஜி இசையில் ஒரு பாடல் பாடியவர், அதையடுத்து கார்த்தி நடித்துள்ள "தேவ்' படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ளார். தற்போது தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கும் என்டிஆர் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக் கிறார். இந்த படத்திற்கு கல்யாணி மாலிக் இசையமைக்கி றார். ரஜினியின் "பேட்ட' படத்திலும் அனிருத் இசையில் "மரணமாஸ்' பாடலில் பட்டையைக் கிளப்பியிருக்கார் எஸ்.பி.பி.

induja

* நடிகை ரகுல் பிரீத்சிங். தற்போது, சூர்யாவின் "என்.ஜே.கே.' மற்றும் கார்த்தியின் "தேவ்' படங்களில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியில் அதிக அக்கறை காட்டிவரும் இவர், தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் டயட் கண்ட்ரோலை கடைபிடித்து வருகிறார்.

bits

* "விஸ்வாசம்' படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜீத். பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இதையடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் "சதுரங்கவேட்டை' வினோத் இயக்கும் "பிங்க்' ரீமேக்கில் நடிக்கிறார். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த இந்த "பிங்க்' படத்தின் கதையை அஜீத்திற்காக திருத்தங்கள் செய்து கதை வேலைகளை முடித்துவிட்டார் வினோத். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்த தயாரிப்பாளர் போனி கபூர், அஜீத்தை சந்தித்து பேசினார். அப்போது "பிங்க்' ரீ-மேக்கில் நடிப்பதற்கான ஒப்பந்தம் முடிவாகி யிருப்பதாகக் கூறப்படுகிறது.

* மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் "சிதம்பரம் ரயில்வே கேட்'-டின் படப்பிடிப்பு, சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெற்றுவருகிறது.

* சென்னை கே.கே.நகரில் "கவிஞர் கிச்சன்' என்னும் ஓட்டலை நடத்திவந்த கவிஞர் ஜெயங்கொண்டான், இப்போது சினிமாவில் நடிப்பதிலும் சில டைரக்டர்களிடம் உதவியாளராக இருப்பதிலும், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதிலும் செம பிஸியாகிவிட்டார். சமீபத்தில் மறைந்த பா.ம.க. வி.ஐ.பி.யான காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரைக்கதையாக எழுதித் தரும்படி ஜெயங்கொண்டானை அணுகியுள்ளதாம் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம். குருவும் ஜெயங்கொண்டானும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

* "ஒண்டிக்கட்டை' படத்தை தயாரித்து டைரக்ட் பண்ணிய இசை அமைப்பாளர் பரணி, இப்போது மயில்சாமி மகன் ஹீரோவாக நடிக்கும் "தாய்மை' படத்திற்கு இசையமைக்கிறார்.

* விஜய் வசந்தை ஹீரோவாக வைத்து, வடசென்னை ரவுடியிசத்தை அடிப்படையாகக்கொண்டு, பாலாவின் உதவியாளர் சுஜா ஒரு படத்தை டைரக்ட் பண்ணிவருகிறார்.

* "உயிர்', "மிருகம்' படங்களின் டைரக்டர் சாமி, அடுத்ததாக குழந்தைகளை மையமாக வைத்து ஒரு கதை ரெடி பண்ணி வருகிறார். கொடைக்கானலில் கதை டிஸ்கஷன் விறுவிறுப்பாக நடக்கிறதாம்.

*"ரேணிகுண்டா-2' எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்காராம் பன்னீர்செல்வம்.

gvprakash

* ஜி.வி. பிரகாஷுக்கு மேட்சாக ஒரு கதை சொல்லியிருக்காராம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர்.

karthi

* புது இயக்குநர் ஒருவரிடம் புலிக்கதை ஒன்றை ஓ.கே.பண்ணி வைத்துள்ளாராம் கார்த்தி.

* சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட்டில் கடந்த வாரம் இரவு "பருத்திவீரன்' சரவணன் நடிக்கும் "அசால்ட்' படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. அனுமதி இல்லாமல் ஷூட்டிங் நடந்ததால், ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டதாம். பெர்மிஷன் வாங்கியபிறகு மறுநாள் ஷூட்டிங் நடந்துள்ளது.

* சத்யசிவாவின் "கழுகு-2'-வின் பாடல் காட்சிகள் சென்னை பின்னிமில்லில் படமாக்கப் பட்டு வருகிறது.