அஜீத்தின் "பில்லா-2'-வில் கிளாமரில் பட்டையைக் கிளப்பியவர் புரூனா அப்துல்லா.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த குஜிலி அவ்வப்போது இந்தியாவில் லேண்டாகி, இந்தி சினிமாவில் நடிப்பார். இப்போது இந்தியில் பெரிதாக சான்ஸ் இல்லாததால், கோவா, இலங்கை என ஜாலி டூர் அடித்து டூ பீஸ் காஸ்ட்யூமில் கலக்கல் போஸ் கொடுத்து அதை ஃபோட்டோவும் எடுத்துப் போட்டு, தூள் கிளப்பி யிருக்கிறார் புரூனா அப்துல்லா.
நீ புகுந்து விளையாடு தாயி...
விஜய் சேதுபதி- கோகுல் காம்பினேஷனில் மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் "ஜூங்கா'-வில் சாயிஷா சைகல் ஹீரோயினாக வர, மற்றொரு வெயிட்டான கேரக்டருக்கு மடோனா செபஸ்டின் இப்போது கமிட் ஆகியுள்ளார்.
என்னதான் விஜய்யின் "மெர்சல்' மெகா ஹிட் அடித்தாலும் டைரக்டர் அட்லீயின் எக்குத்தப்பான பட்ஜெட்டால், தயாரிப்பாளர் இராமசாமிக்கு தாவு தீர்ந்துவிட்டது. மீண்டும் விஜய்யுடன் இணைவதாக நியூசைப் பரப்பிவிட்டு, சில தயாரிப்பாளர்களுக்கு வலைவீசினார் அட்லீ. ஆனால் அட்லீயின் பெயரைக் கேட்டாலே அலற ஆரம்பித்து தெறித்து ஓடிவிடுகின்றனர் தயாரிப்பாளர்கள். சரி, விஜய்யையாவது பார்த்துட்டு வருவோம் என கிளம்பிப்போன அட்லீயை "சாரி பிரதர். நெக்ஸ்ட் சான்ஸ் இருந்தா படம் பண்றது பத்தி யோசிப்போம்' என திருப்பி அனுப்பிவிட்டாராம் விஜய்.
காவிரி உரிமை மீட்புக்காக திரை உலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளாத சிம்பு, ""தமிழக- கர்நாடக மக்களுக்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தால்தான் காவிரி விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்'' என்ற அரிய யோசனையைத் தெரிவித்திருந்தார். அந்த யோசனை ஒருபக்கம் இருந்தாலும், "பிக்பாஸ் 'புகழ் ஓவியாவை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம் சிம்பு. பலகட்ட யோசனைக்குப்பிறகு சிம்புவை காதலிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துருக்காராம் ஓவியா.
""அண்டை நாட்டு நைல் நதி நீரை எந்தப் பிரச்சினையுமில்லாமல் சுமுகமாக பகிர்ந்துகொள்கிறோம். ஆனால் காவிரி நீர் விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. எரிந்துகொண்டிருக்கும் காவிரிப் பிரச்சினையை அணையவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளால்தான் இவ்வளவு பிரச்சினையும்'' என போட்டுத் தாக்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஆந்திரா சினிமாவிலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர் என்.டி. ராமராவ். பிரபல தெலுங்கு டைரக்டர் தேஜா டைரக்ஷனில் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு சினிமா வாகிறது. என்.டி.ஆராக அவரது மகன் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா நடிக்கிறார். சினிமாவில் தொடங்கி, அதிலும் கிருஷ்ணர் வேஷம் போட்டே தெலுங்கு மக்களை தன்வசப்படுத்தி, ஆட்சியையும் பிடித்து அசத்தியவர் என்.டி.ஆர். இவரது வாழ்க்கைக் கதையில் எம்.ஜி.ஆரும் வருகிறார், ஜெயலலிதாவும் வருகிறார். ஜெயலலிதா வேஷத்திற்கு காஜல் அகர்வால் கமிட் ஆகியுள்ளாராம்.
சீனு ராமசாமியின் "கண்ணே கலைமானே'-வில் பிரியா பவானிசங்கர், "மேயாத மான்' இந்துஜா என உதயநிதிக்கு இரண்டு ஜோடிகள்.
"படைவீரன்' படத்தில் அறிமுகமான அம்ரிதா இப்போது கிருத்திகா உதயநிதி டைரக்ஷனில் வளரும் "காளி'-யில் விஜய் ஆண்டனிக்கு ஜோடி போடுகிறார்.
""கிருத்திகா மேடம் ஆக்ஷன் சொன்னதும் காதல் காட்சிகளில் நடிக்கும்போது ரொம்பவே படபடப்பா இருந்துச்சு. ஆனால் விஜய் ஆண்டனி சார்தான் "தைரியமா நடிம்மா'ன்னு சொல்லி ஹெல்ப் பண்ணுனாரு. வெரிவெரி தேங்ஸ் விஜய் ஆண்டனி சார்'' என புல்லரிக்கப் பேசுகிறார் அம்ரிதா.
இந்தி பிரபலம் சயீப் அலிகானுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டவர் கரீனா கபூர். சயீப் அலிகானுக்கு முதல் தாரம்மூலம் திருமணவயதில் ஒரு மகள் இருக்கிறாள். கரீனாமூலம் ஆண் குழந்தையைப் பெற்று அதற்கு தைமூர் என பெயர் வைத்தார் சயீப். தைமூர் பிறந்ததால் சினிமாவை கொஞ்சம் தள்ளி வைத்தார் சயீப் கரீனா கபூர். இப்போது மகன் நன்றாக நடந்து, பேசவும் ஆரம்பித்துவிட்டதால் மீண்டும் இந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ""சினிமாவில் நடிக்காத வாழ்கையை என்னால் கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியாது'' என்கிறார் கரீனா கபூர்.
தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுப்பார் ஹன்சிகா. அந்தவகையில் இதுவரை 25 குழந்தைகளைத் தத்தெடுத்திருக்கிறார். எந்தக் குழந்தைக்கும் சிறு மனக்குறைகூட வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து, உயர்தர சத்துணவு, தரமான கல்வி, மருத்துவம் என பெற்ற தாயைப்போல அக்குழந்தைகளைப் பேணுகிறார் ஹன்சிகா. ஓவியம் வரைவதிலும் கில்லாடியான ஹன்சிகா, தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சி வைத்து அதன்மூலம் கிடைக்கும் நிதியை குழந்தைகள் அறக்கட்டளைக்கு பயன்படுத்தும் ஐடியாவில் உள்ளாராம்.