செல்வராகவன்- சூர்யா காம்பினேஷனில் உருவாகிவரும் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில், இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி, ராகுல்பிரீத்சிங்கும், வில்லனாக ஜெகபதிபாபுவும் நடிக்கும் இப்படத்தின் இசை யுவன்சங்கர்ராஜா. இதையடுத்து "இறுதிச்சுற்று' சுதாகொங்ரா டைரக்ஷனில் நடிக்கிறார் சூர்யா.
"விசுவாசம்' படத்தில் அஜீத் ஜோடியாக பலரை பரிசீலித்து, கடைசியில் நயன்தாராவை ஓ.கே. பண்ணியிருக்கிறார் அஜீத். தலயுடன் நயன் ஜோடி போடும் நான்காவது படம் இது.
பாலா டைரக்ஷனில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் "வர்மா' படத்தின் வசனத்தை டைரக்டர் ராஜூமுருகன் எழுதுகிறார்.
நடிகர் திலகம் சிவாஜியை வைத்து "கல்தூண்', "ரிஷிமூலம்' போன்ற மெகாஹிட் படங்களை தனது எஸ்.எஸ்.கே. பிலிலிம்ஸ் பேனரில் தயாரித்தவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எஸ். கருப்பசாமி. இவரின் மறைவுக்குப்பின் இவரது மகன் எஸ்.எஸ்.கே. சங்கரலிலிங்கம், பிரபு- மீனாவை வைத்து நடிகை லட்சுமியின் முதல் கணவர் சிவச்சந்திரன் டைரக்ஷனில் ஒரு ஊத்தல் படம் எடுத்ததோடு சினிமா தயாரிப்பை தற்காலிலிகமாக நிறுத்தி வைத்தனர். இப்போது எஸ்.எஸ்.கே. வின் பேரன் கருப்பசாமி, மீண்டும் தயாரிப்புத்துறையில் இறங்கிவிட்டார். ஏ. வெங்கடேஷ் டைரக்ஷனில் சரத்குமாரை வைத்து "பாம்பன்' படத்தை ஆரம்பித்திருக்கிறது எஸ்.எஸ்.கே.பிலிம்ஸ்.
கமலின் மகள் ஸ்ருதிக்கு லண்டன் காதலர் இருப்பதுபோல், ஸ்ரேயாவுக்கு ரஷ்யாவில் லவ்வர் இருக்கிறார்.அவரையே கல்யாணமும் பண்ணப்போகிறார்.
வருங்கால மருமகனின் பெற்றோரையும் ரஷ்யா வீட்டையும் பார்த்தபின், கல்யாணத்துக்கு ஓ.கே.சொல்லிவிட்டனர் ஸ்ரேயாவின் தாயும் தந்தையும். ராஜஸ் தானில் கல்யாணம், ரஷ்யாவில் ரிஷப்ஷனாம்.
டைரக்டர் பாண்டிராஜ்- கார்த்தி- சாயிஷா சைகல் காம்பினேஷனில் தயாராகும் "கடைக்குட்டிச் சிங்கம்' படத்திற்காக பிரம்மாண்ட ரேக்ளா ரேஸ் காட்சிகள் காரைக்குடியில் படமாக்கப்பட்டது. இதுதவிர, தனது பேனரில் வேறொருவர் டைரக்ஷனில் "மெரினா போராட்டம்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ்.
"காஞ்சனா-3'-ன் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்ஷய்குமார்.
பிரபல ஹாலிலிவுட் நடிகை ஷரோன் டேட், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது வீட்டிலேயே மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 1969-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து "தி ஹாண்டிங் ஆஃப் ஷெரோண் டேட்'என்ற பெயரில் ஹாலிலிவுட் சினிமா தயாராகிறது. இதில் ஷரோனாக நடிக்கும் ஹிலாரிட்ஃப், "எனக்கு இது மனநிறைவான, சவாலான கேரக்டர்' என்கிறார்.