* லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் "விஜய்-64' படத்தில் வில்லனாக கமிட் ஆகியிருப்பதால், தான் ஹீரோவாக நடித்து ttதீபாவளிக்கு ரிலீசாகவிருந்த "சங்கத் தமிழன்' படத்தை நவம்பர் மாதத்தில் ரிலீஸ் பண்ணுமாறு விநியோகஸ்தரான லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரனிடம் கேட்டுக்கொண்டாராம் விஜய் சேதுபதி.

* சிபிராஜ்- டைரக்டர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி காம்பினேஷனில் தயாராகிவரும் படம் "கபடதாரி'. சிபிராஜுக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா மற்றும் நாசர், ஜெயப் பிரகாஷ், மயில்சாமி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கி றார்கள். கதையை ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதை- வசனம் எழுதுகிறார் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன். நவம்பர் 1-ஆம் தேதி படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்து மார்ச் 2020-ல் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

* ராதா மோகன் டைரக்ஷனில், எஸ்.ஜே. சூர்யா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளின் மேன்மையை தனது ஸ்டைலில் சொல்லும் ராதா மோகனின் டைரக்ஷன் ஸ்டைலில் லயித்துப் போய்விட்டாராம் ஹீரோயினான ப்ரியா பவானி சங்கர். இப்படத்தைப் பத்திய கூடுதல் தகவல் என்னன்னா... "கண்களும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும்!' என ராதா மோகன் விருப்பப்படி, சாந்தினியும் இன்னொரு ஹீரோயினாக படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

Advertisment

* "ஒத்த செருப்பு' படத்தை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளாராம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

* "கைதி' படத்தில், கார்த்தியுடன் கைதியாக சென்னை சாலிகிராமத்தைச் சுற்றிலும் சடை, முடி, தாடியுடன் இருப்பவர்களை அழைத்து நடிக்க வைத்தாராம் லோகேஷ் கனகராஜ்.

* "பப்பி' பட டைரக்டரின் இயற்பெயர் நந்து. ஆனால், பப்ளிசிட்டிக்காக "முரட்டு சிங்கிள்' என பெயரை மாற்றிக் கொண்டாராம். "பேரை மாத்தி என்னய்யா பிரயோஜனம்? படம் ஊத்திக்கிச்சே...!' என டைரக்டர்மீது முரட்டுக் கோபத்தில் இருக்காராம் தயாரிப்பாளர்.

Advertisment

* மறைந்த கவிஞர் முத்துவிஜயனின் நினைவு நாளைக் கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்த தொகையில் சிறு திகட்டல் ஏற்படுத்திவிட்டதாம் நினைவு நாள் விழாக் குழு.

* ஒரு சாதியை மட்டும் உயர்த்திப் பிடித்து படம் எடுப்பவர் என்பதை மாற்றவேண்டு மென்ற முடிவுடன் அடுத்து "கோனார் மகன்' என்ற படத்தை ஆரம்பிக்கும் ஐடியாவில் உள்ளாராம் முத்தையா. ஹீரோவாக சசிகுமாரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். ஹீரோயினாக நடிக்க மனிஷா யாதவ்விடம் பேசும் ஐடியாவில் உள்ளாராம் முத்தையா. பெரும்பாலான நடிகர்களும் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்குமாறு சொல்லியுள்ளாராம் டைரக்டர்.

ffff

* சிலபல "தனிப்பட்ட' பழக்க வழக்கங் கள் பண்ணிய வேலைகளால், சென்னை வளசர வாக்கத்தில், தான் ஆசையாய் ஆசையாய் வாங்கிய வீட்டை விற்றுவிட்டாராம் அப்புக் குட்டி!

bb

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நான்கு நாட்களிலேயே ஃபைனான்ஸ் பிரச்சினையால் பிரேக்- டவுன் ஆகிவிட்டதாம்.