ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்த வர் ஸ்ருதி ரெட்டி. பள்ளிப்படிப்பை ஆந்திரா விலும், கல்லூரிப் படிப்பை சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியிலும் முடித்தவர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மாடலிங் துறை யிலும், ஆந்திர தெலுங்கு
சேனல்களில் கேட் வாக்கும் நடத்தியவர். தெலுங்கு சினிமாக்களில் இப்போது வளர்ந்துவரும் ஹீரோயி னான இவர், தமிழ் சினிமாவிலும் வளரும் எண்ணத்துடன் ஃப்ரஷ்ஷாக
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்த வர் ஸ்ருதி ரெட்டி. பள்ளிப்படிப்பை ஆந்திரா விலும், கல்லூரிப் படிப்பை சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியிலும் முடித்தவர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மாடலிங் துறை யிலும், ஆந்திர தெலுங்கு
சேனல்களில் கேட் வாக்கும் நடத்தியவர். தெலுங்கு சினிமாக்களில் இப்போது வளர்ந்துவரும் ஹீரோயி னான இவர், தமிழ் சினிமாவிலும் வளரும் எண்ணத்துடன் ஃப்ரஷ்ஷாக ஃபோட்டோ ஷூட் நடத்தி ரிலீஸ் பண்ணியிருக்கிறார். இதேபோல் மும்பையில் மாடலிங் பண்ணிவரும் நஸ்மா சுல்தானும் தமிழ் ஃபீல்டைக் குறிவைத்து களம் இறங்கியிருக்கிறார்.
"காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் நாயகி ஐஸ்வர்யா மேனன், "தீயா வேலை செய்யணும் குமாரு' படத்திலும் வெயிட்டான கேரக்டரில் நடித்தார். இப்போது இவரும் நியூ ஃபோட்டோ ஷூட்டை ரிலீஸ் பண்ணியிருக்கிறார். இவரது பாணியில் "ஜோக்கர்' பட நாயகி ரம்யா பாண்டியனும், வடநாட்டுப் பார்ட்டியான ஷ்ரின் கஞ்ச்வாலாவும் ஃப்ரஷ் ஃபோட்டோ ஷூட்டை ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள்.
சிபிராஜ் நடித்த "நாய்கள் ஜாக்கிரதை' படத்தின்மூலம் ஒளிப்பதி வாளராக அறிமுகமானவர் நிஷார் ஷபி. இப்போது "செவன்' (7) படத்தின்மூலம் டைரக்டராகியிருக்கிறார். பல போலீஸ் கதைகள், இன்வெஸ்டிகேஷன் கதைகள் வந்திருந்தாலும், இந்த "செவன்' தனிக் கவனம் பெறுகிறது. ஒரு இளைஞன், ஆறு பெண்கள், ஒரு விசாரணை அதிகாரி என செம விறுவிறுப்பாகவும் த்ரில்லிங் காகவும் செல்கிறது படம். தெலுங்கில் வளர்ந்துவரும் ஹீரோவான ஹவீஸ்தான் தமிழில் "செவன்' மூலம் அறிமுகமாகியிருக்கிறார். ரெஜினா, நந்திதா, அனிஷா, அதீதி ஆர்யா, த்ரிகா சௌத்ரி, பூஜிதா பொன்னாடன் ஆகிய ஆறு ஹீரோயின்கள் இருக்கிறார் கள். சீனியர் நடிகர் ரஹ்மானும் தனது பங்களிப்பை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
சுதா கொங்கரா டைரக்ஷனில் சூர்யா நடித்துவரும் "சூரரைப் போற்று' படத்தின் ஏர்போர்ட் சீன் ஒன்றிற்காக சென்னை ஏர்போர்ட் நிர்வாகத்தை அணுகியபோது மறுத்துவிட்டதாம் நிர்வாகம். அந்த சீனை சத்தீஸ்கர் ஏர்போர்ட்டில் படமாக்கியிருக்கிறார் கள். கிராமத்து சிறுவன் ஒருவன் ஏர்சீஃப் மார்ஷலாகி சந்திக்கும் போராட்டங்களின் கதைதான் "சூரரைப் போற்று' படமாம்.