1
தீபாவளிக்கு ரிலீசான "பில்லா பாண்டி' சரியாகப் போகாததால் அப்செட்டில் இருக்கிறார்கள் இந்துஜாவும் சாந்தினி தமிழரசனும். அவர்களைவிட பயங்கர அப்செட்டில் இருக்கிறார் ஹீரோ ஆர்.கே. சுரேஷ். ஏன்னா அவரின் அடுத்த படமான ‘"நாய் வேட்டை' ரிலீசாவதில் பெரும் சிக்கலாம்.
2
போனிகபூர் தயாரிப்பில், ‘"சதுரங்க வேட்டை' வினோத் டைரக்ஷனில் அஜீத் நடிக்கும் படக்கம்பெனிக்கு நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய டவரில் ஆபீஸ் போட்டிருக்கிறார்களாம். வாய்ப்பு கேட்டு வருபவர்களைத் தவிர்ப்பதற்காகவே அவ்வளவு உயரத்தில் அலுவலகமாம்.
3
விஜய் ஆன்டனி- அர்ஜூன் காம்பினேஷனில் தயாராகும் ‘"கொலைகாரன்' படத்தின் ஷூட்டிங், ஈ.சி.ஆர். ரோட்டில் நடந்துவருகிறது.
4
சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஜாய் ஆலுக்காஸ் ஜுவல்லரியின் பிரம்மாண்ட கட்டடத்துக்குச் சொந்தக்காரர் மம்பட்டியான் தியாகராஜன். இந்த கட்டடத்தில் தனக்கென ஒரு அலுவலகம் அமைத்துக்கொண்டு, மதியம் தயிர்சாதத்துடன் வந்து, தனது கால்ஷீட் மற்றும் மகன் பிரசாந்தின் வளர்ச்சி குறித்து தீவிரமாக டிஸ்கஷ் பண்ணிவிட்டு இரவு பத்து மணிக்குமேல் வீட்டுக்குச் செல்கிறாராம்.
5
மூன்று படங்களின் டைரக்ஷன், இரண்டு படங்களில் ஆக்டிங் என பிஸியாக இருப்பதால் கோவை, பொள்ளாச்சி, நெல்லை என பறந்துகொண்டிருக்கிறாராம் டைரக்டர் சுசீந்திரன்.
6
சின்னச் சின்ன வேடங்களில் காமெடி பண்ணும் சென்றாய னுக்கும் சொந்தப் படம் எடுக்கும் ஆசை வந்துருச்சாம்.
7
அரசியல் பணிகளில் பிஸியாக இருப்பதால் மிஷ்கின் டைரக்ஷனில்
1
தீபாவளிக்கு ரிலீசான "பில்லா பாண்டி' சரியாகப் போகாததால் அப்செட்டில் இருக்கிறார்கள் இந்துஜாவும் சாந்தினி தமிழரசனும். அவர்களைவிட பயங்கர அப்செட்டில் இருக்கிறார் ஹீரோ ஆர்.கே. சுரேஷ். ஏன்னா அவரின் அடுத்த படமான ‘"நாய் வேட்டை' ரிலீசாவதில் பெரும் சிக்கலாம்.
2
போனிகபூர் தயாரிப்பில், ‘"சதுரங்க வேட்டை' வினோத் டைரக்ஷனில் அஜீத் நடிக்கும் படக்கம்பெனிக்கு நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய டவரில் ஆபீஸ் போட்டிருக்கிறார்களாம். வாய்ப்பு கேட்டு வருபவர்களைத் தவிர்ப்பதற்காகவே அவ்வளவு உயரத்தில் அலுவலகமாம்.
3
விஜய் ஆன்டனி- அர்ஜூன் காம்பினேஷனில் தயாராகும் ‘"கொலைகாரன்' படத்தின் ஷூட்டிங், ஈ.சி.ஆர். ரோட்டில் நடந்துவருகிறது.
4
சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஜாய் ஆலுக்காஸ் ஜுவல்லரியின் பிரம்மாண்ட கட்டடத்துக்குச் சொந்தக்காரர் மம்பட்டியான் தியாகராஜன். இந்த கட்டடத்தில் தனக்கென ஒரு அலுவலகம் அமைத்துக்கொண்டு, மதியம் தயிர்சாதத்துடன் வந்து, தனது கால்ஷீட் மற்றும் மகன் பிரசாந்தின் வளர்ச்சி குறித்து தீவிரமாக டிஸ்கஷ் பண்ணிவிட்டு இரவு பத்து மணிக்குமேல் வீட்டுக்குச் செல்கிறாராம்.
5
மூன்று படங்களின் டைரக்ஷன், இரண்டு படங்களில் ஆக்டிங் என பிஸியாக இருப்பதால் கோவை, பொள்ளாச்சி, நெல்லை என பறந்துகொண்டிருக்கிறாராம் டைரக்டர் சுசீந்திரன்.
6
சின்னச் சின்ன வேடங்களில் காமெடி பண்ணும் சென்றாய னுக்கும் சொந்தப் படம் எடுக்கும் ஆசை வந்துருச்சாம்.
7
அரசியல் பணிகளில் பிஸியாக இருப்பதால் மிஷ்கின் டைரக்ஷனில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "சைக்கோ' படத்தின் ஷூட்டிங்கிற்கு சின்ன பிரேக் விட்டுள்ளார்களாம்.
அதேநேரம் "சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தை தனது ரெட்ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ரிலீஸ் செய்ததில் செம ஹேப்பியாக இருக்கிறார் விஷ்ணுவிஷால்.
8
சாக்ஷி அகர்வாலுக்கு கைவசம் சினிமா படங்கள் இருக்கிறதோ இல்லையோ, எக்கச்சக்க விளம்பரப் படங் களில் செம பிஸியாக கலக்கி வருகிறார். ஆனாலும் சினிமா மார்க்கெட்டை ஸ்டெடியாக வைத்துக் கொள்ளும் ஐடியாவில் அவ்வப்போது சூப்பர் கிளாமராக ஃபோட்டோ ஷூட் நடத்தி உடனுக்குடன் ரிலீஸ் பண்ணி வருகிறார். இதுதான் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் ஷூட்.
9
சமீபத்தில் ரிலீசான "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தில் ஹீரோ விமலுக்கு இணையான கேரக்டரில் நடித்திருந்தார் சிங்கம்புலி. இப்போது கைவசம் ஓரிரு படங்களே இருப்பதால், தினசரி சம்பளத்தை 50 ஆயிரமாகக் குறைத்துக்கொண்டாராம் சிங்கம்புலி.
10
"தர்மதுரை'-யில் விஜய்சேதுபதி- கஞ்சா கருப்பு ஹிட் சென்டிமென் டால், சீனுராமசாமி- விஜய் சேதுபதி காம்பினேஷனில் தயாராகும் "மாமனிதன்' படத்திற்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கஞ்சா கருப்பு.
11
விஜய்- அட்லீ- ஏ.ஜி.எஸ். கல்பாத்தி அகோரம் காம்பினேஷனில் தயாராக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு, ஜனவரி 25-ஆம் தேதி ஆரம்பமாகிறது.
12
சுந்தர்.சி.யின் "அயோக்கியா' படத்தில் நடித்துவரும் விஷால், அடுத்ததாக கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷனில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
13
"வேடப்பன்', "சோக்கு சுந்த ரம்', "ஒரு சந்திப்பில்' படங்களை இயக்கிய ஆனைவாரி ஸ்ரீதர், இப்போது "கங்கனம்' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.
14
"பிக்பாஸ்' ஆரவ் நடிக்கும் "ராஜ பீமா' படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்துவருகிறது.
15
சமுத்திரகனியை ஹீரோ வாகப் போட்டு "வெள்ளை யானை' படத்தை எடுத்து முடித்துவிட்டார் சுப்பிரமணிய சிவா. ஆனால் அந்தப் படம் பிஸ்னஸ் ஆவதில் இழுபறி நீடிப்பதால், அடுத்த படத்திற் கான கதை டிஸ்கஷனில் இறங்கிவிட்டாராம் சு. சிவா. தனுஷின் ரசிகர் மன்ற மாநிலச் செயலாளராகவும் இருக்கும் சுப்பிரமணிய சிவா, "மாரி-2' ரிலீஸ் வேலைகளிலும் பிஸியாக இருந்தார்.
16
சீனுராமசாமி டைரக்ஷனில் உதயநிதி ஸ்டாலின்- தமன்னா ஜோடி போட்டுள்ள "கண்ணே கலைமானே' படம் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை அழுத்த மாகச் சொல்கிறதாம். அன்னிய உரங்களைப் பயன்படுத்தமாட்டோம் என்ற கருத்தை வலியுறுத்துகிறதாம். படம் முடிவடைந்து சில மாதங்களாகியும் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
17
மா.கா.பா. ஆனந்த் நடித்த சில படங்கள் வரிசையாக ரீலீஸ் ஆகி ஊத்திக்கொண்டதால், மீண்டும் டி.வி.பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.
18
கிரேன் மனோகர், முத்துக்காளை, கிளிமூக்கு ராமச்சந்திரன், கூல் சுரேஷ் போன்ற சின்ன கேரக்டர் நடிகர்களின் தினசரி சம்பளம் மூன்று ஆயிரம் ரூபாய்.
19
அறிமுக இயக்குநர் இயக்கும் "மதனந்தபுரம்' படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார் ஆர்யா.
20
விஜய்- அட்லீ- நயன்தாரா இணையும் படம் விஜயகாந்த் நடித்த "சந்தனக் காற்று' படத்தின் உல்டா என்கிறார்கள். போலீஸ், ரவுடி, அரசியல்வாதி கெட்- அப்புகளுக்கு செட் ஆகிறவர்களுக்கு மட்டும்தான் சான்ஸ் தருகிறாராம் அட்லீ.
21
"கோலி சோடா'-வில் நடித்த டைரக்டர் கௌதம் மேனன், இப்போது தனது சொந்தத் தயாரிப்பில் உருவாகும் "வினா' படத்தில் நடித்துவருகிறார்.
22
"பட்டிபுலம்' என்ற படத்தில் ஆர்ட் டைரக்டர் வீரசமரும் யோகி பாபுவும் நடித்திருக்கிறார்கள். படம் முடிந்து ஒருவருட மாகியும் ரிலீஸ் பண்ண முடியாமல் திணறுகிறார் தயாரிப்பாளர். ரொம்பவே நொந்துபோன நிலையில் படத்தின் டி.வி. புரொமோஷனுக்காக கடந்த வாரம் யோகி பாபுவை சந்திக்கப் போயிருக்கிறார். வெகுநேரம் வெளியிலேயே காக்க வைத்துவிட்டு வந்த யோகிபாபு, ""யாருய்யா நீ'' எனக் கேட்டு, அந்தத் தயாரிப்பாளரை அலறவிட்டாராம்.
23
காமெடி மயில்சாமியின் மகனும், மாஸ்டர் மகேந்திரனும் நடித்துவரும் படம் "சிதம்பரம் ரயில்வே கேட்.' சீர்காழியிலுள்ள சிவன்கோவில் தெருவில் இப்போது இதன் ஷூட்டிங் நடந்துவருகிறது. சைக்கிள் கடை, கொல்லம் பட்டறை, மாலைக் கடை, அடிபம்பு என பத்து லட்சம் செலவில் 1990 காலகட்டத்தை செட் போட்டிருக்கிறார்களாம்.
24
விமலை வைத்து "புரோக்கர்' படத்தை டைரக்ட் பண்ணிவருகிறார் மஜீத். படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டுச் சென்றுள்ளார் பெண் கவிஞர் ஒருவர். கவிஞருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் ""அப்புறம் பார்க்கலாம்'' எனச் சொல்லி அனுப்பி விட்டாராம் மஜீத்.
25
சின்னச்சின்ன காமெடி நடிகர்களின் வருகையால், பரோட்டா சூரியின் மார்கெட் ரொம்பவே டல்லடிக்கிறதாம். மதுரையில் இருக்கும் தனது பரோட்டா கடையை விரிவுபடுத்தும் சூரி, தனது அண்ணனுக்கு டீக்கடை வைத்துக் கொடுத்துள்ளாராம்.
26
பிரபு சாலமனின் "காடன்' ("கும்கி-2') படத்தில் 50 வயது முதியவராக நடிக்கிறார் தெலுங்கு ஹீரோ ராணா டகுபதி.
27
நயன்தாரா நடித்த "இமைக்கா நொடிகள்' படத்தில் செம வெயிட்டான கேரக்டரில் நடித்திருந்தார் ராசி கண்ணா. இப்போது ஜெயம் ரவியுடன் ஜோடிபோட்டு ரிலீசாகியுள்ள "அடங்கமறு' கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ராசிகண்ணா.
28
"ரேணிகுண்டா' தீப்பெட்டி கணேசன் இப்போது தனது சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதில்லை என்பதால், "கில்லாடிகள்', "சங்கமம்', "மாமனிதன்' மற்றும் டைரக்டர்கள் பன்னீர் செல்வம், நெல்சன் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்..
29
""இப்போதிருக்கும் தமிழ் நடிகைகளில் பொம்பள அஜீத் சாய்பல்லவிதான். படத்துல கிழிகிழின்னு கிழிச்சிருக்காங்க. அதனால் டைட்டில் கார்டிலேயே "பொம்பள தல' என போட்டி ருக்கிறார்கள். என்னோட வாழ்க்கையில் தனுஷுக்கு ரொம்பவும் நன்றிக் கடன் பட்ருக்கேன்'' என சரமாரியாக "மாரி-2' படத்தின் பிரஸ் மீட்டில் போட்டுத் தாக்கினார் காமெடி ரோபோ சங்கர்.
30
""மற்ற மொழிப் படங்களில் நடிப்பதைவிட தமிழில் நடிப்பதையே விரும்புகிறேன். நான் தமிழ் நடிகைன்னு சொல்லிக் கொள்வதில்தான் பெருமை'' -இப்படியெல்லாம் சொல்பவர் ஹன்சிகாதான். "மஹா'-வைத் தவிர ஹன்சிகாவுக்கு தமிழில் கைவசம் படங்கள் இல்லாததால்தான் இந்த ஸ்டேட்மென்ட்.