சென்னை கே.கே.நகரில் இருக்கும் நடிகரும் டைரக்டருமான ரா. பார்த்திபன் வீட்டில் ஒரு புத்தர் சிலை உள்ளது. நாம் எந்தப் பார்க்கிறோமோ அந்தப் பக்கம் பார்க்கும் அந்த புத்தர் சிலை. ரா.பா. ஒரு புதுமைப்பித்தன் அல்லவா? அதான் இப்படி.
கனடாவில் கணவருடன் செட்டிலாகிவிட்டார். ரம்பாவின் அண்ணன் வாசுவும் தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டதால், சாலிகிராமத்தில் இருக்கும் ரம்பாவின் வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாம்.
காமெடியில் இப்போது தனி ஆட்சி நடத்தி கொடி கட்டிப் பறப்பவர் சூரி மட்டுமே. "கடைக்குட்டி சிங்க'த்தில் தூள் கிளப்பிய சூரி, விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் "சீமராஜா'விலும் பட்டையைக் கிளப்பியுள்ளார். தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் அழகான சொந்த வீட்டைக் கட்டி முடித்து, மறக்காமல் சிவகார்த்திகேயனையும் இல்லத் திறப்பு விழாவுக்கு அழைத்து, செல்ஃபி எடுத்து செம ஹேப்பியாகியிருக்கிறார் சூரி. ஆனால் புரோட்டா சூரியாக "வெண்ணிலா கபடிக் குழு'வில் அறிமுகப்படுத்திய டைரக்டர் சுசீந்திரனை மட்டும் புதுமனை புகுவிழாவுக்கு அழைக்க மறந்துவிட்டாராம்.
டைரக்டர் மணிவண்ணனின் மறைவுக்குப் பிறகு சென்னை புறநகரில் குடியேறிவிட்டார் மணியின் மகன் ரகு. அதனால் கே.கே. நகரில் உள்ள மணிவண்ணனின் வீடு, மாணவர்களின் ஹாஸ்டலாக மாறிவிட்டது.