ன்னட சினிமாவின் "ராக்கிங் ஸ்டார்' பட்டத்துடன் ஹிட் ஹீரோவாக வலம்வருபவர் யாஷ்.

Advertisment

இவர் நடித்த பிரம்மாண்ட படமான "கே.ஜி.எஃப்.-1' கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் டிச.21-ல் ரிலீசாகிறது. கே.ஜி.எஃப்.ஐ தமிழில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார் விஷால்.

Advertisment

vishal

அந்தப் படத்தின் புரமோ நிகழ்ச்சி சென்னை க்ரீன்பார்க் ஓட்டலிலில் நடந்தது. ஹீரோ யாஷ், ஹீரோயின் ஸ்ரீநிதி, வசனகர்த்தா அசோக்குமார் உட்பட ஐந்து பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் விஷால் பேசியபோது, ""இரண்டு சங்கங்களின் தலைவர்னு கூப்பிடாம, சிம்பிளா விஷால் பேசுவார்னு சொன்ன நிகில் முருகனுக்கு நன்றி. சினிமாவுக்கு மொழி எல்லைகள் கிடையாது. முதன்முதலாக ஒரு கன்னடப்படம் ஐந்து மொழிகளில் ரிலீசாகிறது.

படத்தின் ஹீரோ யாஷ்ஷும் நானும் செம திக் பிரண்ட்ஸ். 2015-ல் மழை வெள்ளம் சென்னையையே புரட்டிப் போட்டப்ப, யாஷிடம் உதவி கேட்டபோது, ஒரு கண்டெய்னர் நிறைய நிவாரணப் பொருட்களை அனுப்பியவர். அந்த உண்மையை இப்பத்தான் சொல்றேன். அந்த நன்றிக் கடனுக்குத்தான் இப்ப .கே.ஜி.எஃப்.ஐ ரிலீஸ் பண்றேன். யாஷ் பெரிய ஹீரோவா இருந்தாலும், அவனோட அப்பா இப்பவும் கர்நாட கத்துல பஸ் கண்டக்ரா இருக்காரு. அவருதான் ரியல் ஹீரோ'' என நெகிழ்ந்தார் விஷால்.