ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என பல வருடங்களாக தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக் ஓடிக்கொண்டிருக் கிறது. "அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பிப் பது உறுதி என இரண்டு வருடங்களுக்குமுன்பு அறிவித்தார் ரஜினி, ஆனால் அது எப்போது என்பதுதான் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்துகொண்டிருக்கும் நிலையில் தான், "தர்பார்' ஷூட்டிங்கிற்காக மும்பையில் இருக்கும் ரஜினி, அரசியல் கட்சிகளுக்கு ப்ளான் போட்டுத் தரும் பிரசார்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ôர் ரஜினி ஏரியாவுக்குள் என்னதான் நடக்கிறது என "ரஜினி மக்கள் மன்ற'த்தின் நிர்வாகிகள், பலரிடம் பல திசைகளிலும் விசாரணையில் இறங்கினோம்.
முதலில் ர.ம.ம.வின் கொங்கு மண்டல மா.செ. ஒருவர் நம்மிடம் பேசினார். """கிருஷ்ணர், அர்ஜுனர், இந்தி இருந்தா நல்லது. ஆனா திணிக்கக்கூடாது'ன்னு எங்க தலைவர் பேசுறதப் பார்த்தா குழப்பமாத்தான் இருக்கும். ஆனா அவர் ரொம்பத் தெளிவா இருக்கார். இன்னொருவிதமா சொல்லணும்னா... அவர் ஜெயலலிதா மாதிரி. உதாரணத்துக்கு- ராமர் கோவில் கட்டுவதற்கு செங்கல்லும் அனுப்புவார், பி.ஜே.பி.யின் சீனியர் லீடர் "அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா'ன்னும் சொல்வார். சொத்துக் குவிப்பு வழக்கு ஸ்ட்ராங்கா போய்க்கிட்டிருக்குன்னு தெரிஞ்சதும் பி.ஜே.பி.யிடம் பம்மினார்.
தனக்கு இந்துத்வா முகம் இருப்பதையும் காட்டிக்குவார். சிறு பான்மையினரிடம் மன்னிப்பும் கேட்டுக் குவார். அதேமாதிரிதான் எங்க தலைவரும்! இப்போது அவருக்கு இருக்கும் சிலபல காரணங்களால் தான் பி.ஜே.பி. வாய்ஸ் கொடுக்கிறார். தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஸ்டேட்டஜி அரசியல் பண்ணினால் என்ன ரிசல்ட் வரும்னு அவருக்கும் தெரியும். அதனால் தனிக்கட்சி ஆரம்பிக்கும்வரைக்கும் இதே டிராக்லதான் போவார்'' என்றார்.
தென்மாவட்ட நிர்வாகிகள் சிலரோ, """பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துத்தான் அரசியல் பண்ணணும்னா, அதுக்கு நான் கட்சி ஆரம்பிக்காமலேயே இருந்துருவேன். அதனால ரசிகர்கள் யாரும் பயப் படத் தேவையில்லை. என்னை நம்பி இத்தனை வருஷமா இருக்கும் ரசிகர்களைக் கைவிடமாட்டேன்' என்பதிலும் தலைவர் உறுதியா இருக்கார்.
என்னதான் சொல்றாருன்னு தெரிஞ்சிக்கத்தான் பிரசாந்த் கிஷோரை தலைவர் சந்தித்தாரே தவிர, வேறொன் றும் இல்லை. காற்று எந்தப் பக்கம் அடிக்குதுன்னு தெரிஞ்சு, அந்தப் பக்கம் ஒதுங்குவது பிரசாந்த் கிஷோரின் பழக்கம். அக்டோபர் 28-ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடக்குது. தலைவரின் மகர ராசி, திருவோண நட்சத்திரப்படி, அவரின் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்.
அதைவிட விசேஷமான நாள் என்னன்னா... ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் வரும்நாள்தான் தலைவரின் இஷ்ட சாமியான பாபாஜியின் பிறந்த நாள். இந்த வருஷம் பாபாஜியின் பிறந்தநாள் டிச. 11-ஆம் தேதி வருகிறது. அதற்கடுத்து டிச. 15-ஆம் தேதி தலைவரை பாபாஜி குகைக்கு அழைத்துச் செல்லும் ஹரியின் மகன் திருமணத்தை பெங்களூரில் நடத்திவைக்கிறார் தலைவர். இப்படி எல்லா சுப நாட்களும் கூடிவருவதால், டிச. 12-ஆம் தேதி தலைவரின் பிறந்த நாளில் பாபாஜி ஆசியுடன் நல்ல சேதியை தலைவர் சொல்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்'' என்றனர்.
ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!
-ஈ.பா.பரமேஷ்வரன்