ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பைத் திரைப்பட விழா நடைபெறு வது வழக்கம். இந்த ஆண்டு 20-ஆவது மும்பைத் திரைப்படவிழா மும்பையில், அக்டோபர் 25-ஆம் தேதி தொ
ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பைத் திரைப்பட விழா நடைபெறு வது வழக்கம். இந்த ஆண்டு 20-ஆவது மும்பைத் திரைப்படவிழா மும்பையில், அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்கி (நவம்பர் 01) முடிவடைந்தது.
இந்தத் திரைப்பட விழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்னும் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மிபிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாக ரன், கார்த்திக் கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். எழுத் தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதை களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக் கப்பட்டது.
"பாலிலின சமத்துவப்' (Gender Equality Award) பிரிவில் SPACIAL JURY MENTION விருது "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்காக இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப் பட்டது.