ஷ்மி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் "பெட்டிக்கடை.'

Advertisment

இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான, புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியா ராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக "மொசக்குட்டி' வீரா நடிக்கிறார்.

Advertisment

கதாநாயகியாக சாந்தினி நடிக்கி றார். இன்னொரு ஜோடியாக சுந்தர்- அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார்.

win

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

இந்தப் படத்தில் அமரர் நா. முத்துகுமார் எழுதிய "சுடல மாட சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட சொல்லு புள்ள' என்ற பாடல் யூ டியூப் ரசிகர் களால் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நிறைய தேசிய விருதுகளை அமரர் நா. முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்த பாடலுக்காகவும் தேசியவிருது கிடைக்கும் என்கிறது "பெட்டிக்கடை' யூனிட். படம் வரும் 22-ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

Advertisment