துவும் தெலுங்குதேசத்தின் கிளுகிளு சமாச்சாரம்தான். நம்ம சென்னை அமைந்தகரையில் டாக்டராக வாழ்க்கையை ஆரம்பித்து, தெலுங்கு சினிமாவில் நுழைந்து படிப்படியாக முன்னேறி ஹீரோ ஆனவர் டாக்டர் ராஜசேகர். "இது தாண்டா போலீஸ்', "நான் தாண்டா எம்.எல்.ஏ.', "எவண்டா என்னைக் கேக்குறது'-ன்னு அடாபுடா

டைட்டில்மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானவர்.

rajasekar

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கில் நடிக்கப்போன ஜீவிதாவுடன் லவ்வாகி கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு ராஜசேகர். இப்ப ராஜசேகர்- ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானியும் சினிமா ஹீரோயின் ஆகிட்டாரு. சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.

போன வாரம் தெலுங்கு .டி.வி. சேனல் ஒன்றில் விவாத அரங்கம் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென எழுந்த ஒரு பெண், ""நடிகர் ராஜகேசர் ஒரு பெண்பித்தர். அவருக்கு விதவிதமான பெண்களை ஏற்பாடுசெய்து அவரைத் திருப்திப்படுத்துவது அவரது மனைவி ஜீவிதாதான். ஹைதராபாத் அமீர்பேட் பகுதியில் வேலை பார்க்கும் பெண்கள், சில கல்லூரி மாணவிகளை தனது கணவருக்காக செட்பண்ணிக் கொடுப்பார் ஜீவீதா'' என சரவெடியாகப் பேசி,

நிகழ்ச்சிக்கு வந்தவர்களையும் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் திடுக்கிட வைத்தார்.

இதையெல்லாம் கேட்டா ஜீவிதாவுக்கு கோபம் வருமா, வராதா? வந்துச்சே கோபம். ""நான் செட் பண்ணிக் கொடுத்ததை நீ பார்த்தியா. ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு இரு. இல்லே போலீசுக்குப் போவேன். எல்லாம் இந்த ஸ்ரீரெட்டியால வந்த வினை. அவ என்ன யோக்கியமா? இதோ பாருங்க... அவளோட ஃபேஸ்புக்ல "எனக்கு எப்பவுமே செக்ஸ் மூடு இருந்துக்கிட்டே இருக்கும்'னு சொல்லிலிக்கிட்டே எப்படி அசிங்கமா இருக்கா பாருங்க'' எனச் சொன்னபடியே பத்திரிகையாளர்களிடம் ஸ்ரீரெட்டியின் கசமுசா வீடியோவைக் காட்டி, மீடியாவின் பல்ஸை எகிற வைத்தார் ஜீவிதா.

""இருக்கு. ராஜசேகருக்கு ஜீவிதா பெண்கள் சப்ளை செய்ததற்கு ஆதாரம் இருக்கு'' என பதற வைக்கிறார் ஸ்ரீரெட்டி.

Advertisment