ரஜினி
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்!
அஜீத்
முத்தமிழறிஞர், மூத்த தலைவர், ஐந்துமுறை தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.
தனுஷ்
வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச் சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து, எங்களைப்போன்ற பாமரர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்!
நயன்தாரா
சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். நாம் ஒரு காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகின்றோம். நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்திருக்கிறது. அவர் ஆற்றியிருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை.
விவேக்
நீடு புகழ் சகாப்தம்! நீ நிரந்தர சரித்திரம். முயற்சிக்கெல்லாம் அகரம். முத்தமிழ் சிகரம். எண்ணி எண்ணி வியக்கும் உழைப்பு, ஈடு செய்ய முடியா இழப்பு. தமிழ்வானின் எல்லை. இனி உன்போல் இன்னொருவன் இல்லை. தமிழே போய்வா.. இனி சூரியனுக்கு ஓய்வா?
பிரசன்னா
திராவிட இயக்கத்தின் தூண். கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்பு
ரஜினி
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்!
அஜீத்
முத்தமிழறிஞர், மூத்த தலைவர், ஐந்துமுறை தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.
தனுஷ்
வஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச் சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து, எங்களைப்போன்ற பாமரர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்!
நயன்தாரா
சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். நாம் ஒரு காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகின்றோம். நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்திருக்கிறது. அவர் ஆற்றியிருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை.
விவேக்
நீடு புகழ் சகாப்தம்! நீ நிரந்தர சரித்திரம். முயற்சிக்கெல்லாம் அகரம். முத்தமிழ் சிகரம். எண்ணி எண்ணி வியக்கும் உழைப்பு, ஈடு செய்ய முடியா இழப்பு. தமிழ்வானின் எல்லை. இனி உன்போல் இன்னொருவன் இல்லை. தமிழே போய்வா.. இனி சூரியனுக்கு ஓய்வா?
பிரசன்னா
திராவிட இயக்கத்தின் தூண். கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்புத் தலைவர். தி.மு.க.வை 50 ஆண்டுகளாக பாதுகாத்த தலைவர். நவயுக சாணக்கியர். தமிழன்பர். அவரது இழப்பிலிலிருந்து தமிழகம் மீள நெடுங்காலம் ஆகும்.
சிவகார்த்திகேயன்
ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப்போகிறது. ஐயா.. உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும்வரை பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.
விக்ரம் பிரபு
தாத்தாவின் முதல் நண்பர்களுள் ஒருவர். தாத்தாவின் திருமணத்தில் மணமகன் தோழன். அன்னை இல்லத்தின் நலம் விரும்பி. சிவாஜி என்ற பெயர் வருவதற்கு முன்பிருந்தே குடும்பத்தில் ஒருவர்.
ராதிகா
கலைஞர் மறைந்த இந்த நாள் கறுப்புதினம். அந்தப் பெரிய தலைவரின் நினைவுகள் மனதிலும், இதயத்திலும் நிறைந்திருக்கிறது. தமிழுக்குப் பெருந்தொண்டு செய்த அவரின் நினைவுகள் என்றென்றும் வாழும்.
குஷ்பு
சூரியனின் மகன் அஸ்தமித்துவிட்டார். மீண்டும் உதிக்கப்போவதில்லை.
இளையராஜா
தமிழ்ப் பெருங்குடி மக்களே! நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் அய்யா மறைந்தது நமக்கெல்லாம் துக்க தினமேதான். இந்த துக்கத்தை நாம் எப்படி ஆற்றிக்கொள்ளப் போகிறோம், எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை.
விஷால்
முத்திரை பதித்த தலைவர் கலைஞர் ஐயா தற்போது நம்முடன் இல்லை. திரைத்துறையிலும், அரசியலிலிலும் அவர் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்பமுடியாது.
பாரதிராஜா
நம் தமிழ்மண்ணில் இனிய தமிழ் மகன் கலைஞர். காலத்தாலும் கண்டெடுக்க முடியாத மகா கலைஞன். பகுத்தறிவில் பல்கலைக்கழகம். இயற்கையும் கலைஞரும் ஒன்று. மேகம் வடித்த கண்ணீரே சாட்சி. தமிழகம் முழுவதும் வீதிதோறும் மழை. தமிழ்மனச் சாலையெங்கும் மணக்கும் உங்கள் பிறப்பு.
சிவகுமார்
பெரியார், ராஜாஜிக்குப் பிறகு 95 வயதுவரை புகழோடு வாழ்ந்தவர் கலைஞர். தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிலிக்கக் காரணமானவர். தமிழகத்தில் என்றும் அவரது இடம் காலிலியாகவே இருக்கும்.
தங்கர்பச்சான்
தமிழ்நாட்டின் அரசியல் பாதைகளை உருவாக்கியவர்களில் கலைஞருக்குப் பெரும் பங்குண்டு. அவரை ஒருவராலும் நகல் எடுத்துக்கொள்ள முடியாது. நல்ல படைப்பாளிகளையும், கலைஞர்களையும் உடனே இனங்காண்பார். கரகரத்த தமிழ்க்குரலும், கறுப்புக் கண்ணாடியும், தடித்த பேனாவும் நினைவில் நிழலாடிக் கொண்டே இருக்கும்.
ஜெயம் ரவி
ஒரு பெரும் மகத்துவம் முடிந்துள்ளது. தமிழகத்தின் பெருமை அவர்.
வெங்கட் பிரபு
அவரின் தமிழ்ப்பற்றுக்கு அவர் மட்டுமே நிகர். என்றென்றும் நம் மனதில் அஸ்தமிக்காத சூரியன்!
ஜி.வி. பிரகாஷ்
அரசியல், தலைமை, எழுத்துலகம் என எல்லாவற்றிலும் அவர் மாபெரும் சகாப்தம்.
சித்தார்த்
யாரோடும் சேர்த்து ஒப்பிட முடியாதவர். ஒரு மகத்தான அரசியல்வாதி, படைப்பாளியை இன்று தமிழகம் இழந்து நிற்கிறது.
கார்த்தி
பெரியாரின் கனவுகளை ஆட்சியமைத்து நிறைவேற்றிக் காட்டியவர் கலைஞர். அதனால்தான், கிராமங்களில் இருந்து கூட்டம்கூட்டமாக கலைஞருக்கு மரியாதை செலுத்த வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கு வருபவர்களெல்லாம் ஏதோவொருவகையில் கலைஞரால் பலனடைந்தவர்கள்தான்.
ஸ்ரீப்ரியா
வழக்கம்போல் போராட்டம்... வழக்கம்போல் வெற்றி... மீண்டும் ஒரு மெரினா புரட்சி.. கலைஞர் ஒருமுறைகூட தோற்றதில்லை என்பது நாம் காணும் உண்மை!
டி. ராஜேந்தர்
50 ஆண்டுகளாக ஒரு இயக்கத்துக்கு தலைவனாக இருக்க முடியுமா? என்னுடைய குருநாதர் இருந்தார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
பிரபு
நான் கலைஞரை பெரியப்பா என்றுதான் அழைப்பேன். எங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவர்மீதும் பாசம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்துக்கு நான் ஆறுதல் சொல்வது எனது குடும்பத்துக்கு சொல்வது மாதிரி. தமிழ் இருக்கும் வரை கலைஞரும் இருப்பார்.
வடிவேலு
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அறிஞர் அண்ணா கூறியதை கடைசிவரை கடைப்பிடித்தவர் கருணாநிதி. மக்களுக்காக கடைசிவரை போராடியவர் இன்று நம்மைவிட்டு போய்விட்டார். நம் குடும்பத்தில் ஒருவர் பிரிந்துவிட்டார்.
கலைப்புலி தாணு
கலைஞரை இழந்தது எனக்கு மட்டுமின்றி, உலக தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.
மோகன்லால்
மூத்த அரசியல்வாதி. திரையுலகின் ஜீனியஸ். சமூகநீதிக்காக போராடியவர்.. இவற்றிற்கெல்லாம் மேலாக சிறந்த மனிதநேயம் மிக்கவர். தமிழக அரசியலிலில் புதிய அத்தியாயத்தை எழுதியவரை, நம் தலைமுறை இழந்திருக்கிறது.
சத்யராஜ்
தமிழினத் தலைவர் கலைஞர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவர் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது கொள்கைகளும் தத்துவங்களும் என்றும் நம்மைவிட்டுப் பிரியாது.
நாசர்
ஒரு சகாப்தம் மறைந்துவிட்டது. பாடிக்கொண்டு இருந்த சினிமாவை, பேசுகின்ற சினிமாவாக மக்களுக்கு கொண்டு சென்றவர் கருணாநிதி. அவரது வாழ்க்கையில் செய்த நற்செயல்களை பின்பற்றுவதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.
நெப்போலியன்
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், முத்தமிழ் அறிஞர், எனது அரசியல் குரு டாக்டர் கலைஞர் மறைவு, எனது தாய்-தந்தையின் இழப்புக்கு நிகரான பேரிழப்பு. தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏன் இந்தியாவுக்கே பேரிழப்பு. தலைவரின் குடும்பத்தினருக்கும் கழகத்தின் உடன் பிறப்புகளுக்கும் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்த்திபன்
மரணம் துயரமானது. கலைஞரின் மரணமோ உயரமானது. உயர்ந்த நோக்கத்தை இளைஞர்களுக்கு விட்டுச்செல்வது. அது.... எழுந்தால் விட்டம் தொடலாம். எழுத்தால் விண்ணையும் தொடலாம். முயன்றால் ...முடியாததை முறியடிக்கலாம்!
சீயான் விக்ரம்
தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமை கொண்ட டாக்டர் கலைஞர் அய்யா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். வெளியூரில் இருந்ததால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவருடைய பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.