வருகிற பிப். 2, 3 தேதிகளில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் "இளையராஜா 75' என்னும் மிகமிகப் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கும், அதற்கடுத்த மாதம்
வருகிற பிப். 2, 3 தேதிகளில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் "இளையராஜா 75' என்னும் மிகமிகப் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கும், அதற்கடுத்த மாதம் நடைபெறும் நடிகர் சங்கப் பொதுக்குழுவுக்கும் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போயஸ் கார்டனிலுள்ள ரஜினி வீட்டில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் விஷால், மனோபாலா, கதிரேசன், நந்தா, எஸ்.ஆர். பிரபு ஆகியோர் சந்தித்து அழைப்புவிடுத்தனர்.
கருத்துக் குருடர் களுக்கும், சமூக நீதி விரோதி களுக்கும், தமிழினப் பகைவர் களுக்கும் தனது "பெரியார் குத்து' பாடல் மூலம் செம குத்துவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி. பாடலை எழுதிய மதன்கார்க்கி, பாடிய நடிகர் சிம்பு, இசையைமத்த ரமேஷ் தமிழ்மணி, ஆல்பத்தைத் தயாரித்த தீபன் பூபதி, சஞ்சய் ராகவன் ஆகியோரைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பொன்னாடை போர்த்தி பாராட்டுப் பத்திரம் வழங்கினார்.