அஞ்சலியும் ஒரு பி.ஆர்.ஓ.வும்!

/idhalgal/cinikkuttu/anjali-and-pro

"பிரபல ஒளிப்பதிவாளரும் "மதுரை வீரன்' படத்தின் இயக்குநருமான பி.ஜி. முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் "லிலிசா' 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.

anjali

அறிமுக இயக்

"பிரபல ஒளிப்பதிவாளரும் "மதுரை வீரன்' படத்தின் இயக்குநருமான பி.ஜி. முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் "லிலிசா' 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.

anjali

அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார்.

"ஏமாலிலி' படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் "ஹாரர்' திரைப்படம் லி"லிசா.' இப்படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது- 3டி எஃபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமராமுன் அஞ்சலி வீசவேண்டும். ஆக்ஷன் என்றதும் எதிர்பாராத விதமாக தோசைக்கல் பறந்து வந்து கேமரா அருகில் நின்ற இயக்குநரின் நெற்றியில் பட்டு புருவம் கிழிந்தது.

நெற்றியில் தையல் போட்டு திரும்புவதற்கு நேரமாகி விட்டதால் அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.' இப்படியெல்லாம் நமக்கு மெயிலில் நியூஸ் அனுப்பினார் பி.ஆர்.ஓ. நிகில்முருகன். பத்து நிமிஷம் கழிச்சு ""அஞ்சலி அடிக்கவும் இல்லை; டைரக்டருக்கு நெத்தியும் கிழியல. அதனால அந்த நியூஸைப் போடாதீங்க பாஸ்'' என ஒரு மெயில் அனுப்பினார் நிகில்.

cine140818
இதையும் படியுங்கள்
Subscribe