Advertisment

அமலா பாலின் புதிய "தொழில்'

/idhalgal/cinikkuttu/amala-palins-new-industry

விவாகரத்துக்குப்பிறகு இன்னும் சுறுசுறுப் பாக மாறியிருக்கும் நடிகை அமலா பால் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துவருகிறார்.

Advertisment

இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ஆயுர்வேதத் தொழிலிலும், தற்போது கவனம் செலுத்திவருகிறார்.

Advertis

விவாகரத்துக்குப்பிறகு இன்னும் சுறுசுறுப் பாக மாறியிருக்கும் நடிகை அமலா பால் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துவருகிறார்.

Advertisment

இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ஆயுர்வேதத் தொழிலிலும், தற்போது கவனம் செலுத்திவருகிறார்.

Advertisment

amalapal

இதுகுறித்து அமலா பால் விரிவாகப் பேசியபோது... ""கொச்சி, சென்னை இரண்டுமே எனக்கு தாய் வீடு மாதிரி. கொச்சி நான் பிறந்த ஊர். சென்னை நான் வேலை பார்க்கும் ஊர். கொச்சிக்குப் போய்விட்டால் அம்மா செல்லமாகிவிடுவேன். நன்றாகத் தூங்குவேன். சாப்பிடுவேன். உடற்பயிற்சி, யோகா எல்லாம் இருக்காது. ஆனால் சென்னைக்கு வந்தால் ஏனோதானோ என்று இருக்கமுடியாது.

இது வாழ்வு கொடுக்கும் இடம். அதனால் கொஞ்சம் பயபக்தியுடன் இருக்க வேண்டியிருக்கி றது. ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு சினிமாவைத்தவிர வேறு எதுவும் தெரியாது. முதன்முறையாக ஏதாவது தொழில் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேத ஆரோக்கியம் தொடர்பான தொழிலிலில் கவனம் செலுத்தலாம் என முடிவுசெய்து இருக்கிறேன். இதைத் தவிர்த்து நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சமூக அமைப்பைத் துவக்கியுள்ளளேன். அதன்மூலம் நூறுபேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு உதவிட திட்டம் ஒன்றும் இருக்கிறது. மற்றபடி தற்போது மனதில் தோன்றுவதை எல்லாம் கதையாக எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. இந்த அமலா பாலினால் எல்லாரையும்போல ஒரு சாதாரண பெண்ணாக மட்டும் இருக்கவே முடியாது'' என்றார்.

cine110918
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe