தெலுங்கில் பவன்கல்யாண் ஜோடியாக "புலி' படத்தில் 2010-ல் அறிமுகமானார் நிகிஷா பட்டேல். "தலைவன்' படம்மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பின் "என்னமோ ஏதோ', "கரையோரம்', "நாரதன்', "7 நாட்கள்' போன்ற படங்களில் நடித்தார்.

Advertisment

nigishapatel

இப்போது புதுமுக டைரக்டர் ஒருவரின் தெலுங்குப் படத்தில் கமிட் ஆகியுள்ள நிகிஷாவுக்கு, ஆக்ஷன் கலந்த அதிரடி கேரக்டராம். ஏன் இந்த அதிரடி என நிகிஷாவிடம் கேட்டதற்கு, ""பேஸிக்கா நான் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை.

Advertisment

அட்டகாசமான ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவு இப்போது நனவாகியுள்ளது. இனிமே ஃபுல் அண்ட் ஃபுல் அதிரடிதான், ஆக்ஷன் தான்'' என்கிறார் நிகிஷா பட்டேல்.

சொர்ணாக்கா ரேஞ்சுக்கு எகிறி அடிக்காம இருந்தா சரிதான்.