மூன்று வருடத்திற்கு மேலாகியும், சென்னை திருவான்மியூரில் அஜீத் கட்டிவரும் புதுவீட்டின் பணிகள் இன்னும் முடிந்த பாடில்லையாம். எல்லாமே ஜோசியர் ஆலோசனைப்படிதான் நடக்குது. பாத்ரூமுக்கு டைல்ஸ் வாங்கணும்னாக்கூட, ஜோசியர் குறித்துக்கொடுத்த நேரத்தில் போய்த்தான் கடைகளில் வாங்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிலிவிட்டாராம் அஜீத். மேலும் அஜீத்தின் ஜாதகப்படி 2020-ல்தான் அந்த வீட்டிற்கு குடிபுக வேண்டும் என்பதும் ஜோசியரின் கண்டிப்பான ஆலோசனையாம்.
போனிகபூர் தயாரிப்பில், வினோத் டைரக்ஷனில் வக்கீலாக அஜீத் மற்றும் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் காம்பினேஷனில் தயாரான "நேர்கொண்ட பார்வை' படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது.
ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் கோர்ட் செட் போடப்பட்டு, க்ளைமாக்ஸில் வக்கீல்
அஜீத், பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக வாதாடும் நீளமான சீனில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினாராம் அஜீத். மொத்த யூனிட்டே கைதட்டிப் பாராட்டியபோது, ""எல்லா பெருமையும் டைரக்டர் வினோத்துக்கே'' என்று தன்னடக்கமாச் சொன்னாராம் தல அஜீத்.