வெளிநாட்டுத் தொழிலதிபருடன் தனி இரவு, தனிமைச் சந்திப்புக்கு மில்க் ஹீரோயினிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டு அகப்பட்டுக்கொண்டார் அந்தத் தமிழகத் தொழிலதிபர். மில்க்கிடம் கேட்கச்சொன்னதே அந்த மேனேஜர்தா
வெளிநாட்டுத் தொழிலதிபருடன் தனி இரவு, தனிமைச் சந்திப்புக்கு மில்க் ஹீரோயினிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டு அகப்பட்டுக்கொண்டார் அந்தத் தமிழகத் தொழிலதிபர். மில்க்கிடம் கேட்கச்சொன்னதே அந்த மேனேஜர்தான் என அகப்பட்டுக் கொண்டவர் போலீசில் சொல்ல, ஆடிப்போய்விட்டார் மில்க். எங்கே தனது ரகசிய சங்கதிகள் சந்திக்கு வந்துவிடுமோ என பதறிய மில்க், அந்த மேனேஜரைக் காப்பாற்றவே அறிக்கை வாசித்தாராம். அந்த அறிக்கையில் இருந்த வார்த்தை சரக்கைப் பார்த்து போலீஸ் வட்டாரத்திலேயே சிலர் வாய் பிளந்துவிட்டனராம்.
""எஃப்.ஐ.ஆர். போடுவதற்கு போலீசுக்கு ஒத்துழைத்தேன்.
போலீஸ் விசாரணைக்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காக மௌனமாக இருந்தேன். இப்போதுகூட ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இன்னும் சிலருக்கு பிடிவாரண்ட் உள்ளது'' என்ற ரேஞ்சில் இருக்கிறது மில்க்கின் ஸ்டேட்மென்ட்.
சிலர்மீது பிடிவாரன்ட் இருப்பது இவருக்கு எப்படித் தெரியும்? மேலிலிட செல்வாக்குடன் இருக்கும் ஒரு ஐ.பி.எஸ்.சும் மில்க்கும் மிக்ஸாகி, மில்க் க்ஷேக்காகிவிட்டதால்தான், இம்புட்டு அலம்பலான அறிக்கை என்கிறார்கள் ஹெட்குவார்ட்டர்ஸ் போலீஸ் புள்ளிகள்.