நடிகைகளும் அரசியல் வி.ஐ.பி.களும்! -சூப்பர் ஸ்டோரி!

/idhalgal/cinikkuttu/actresses-and-political-vips-super-story

(சென்ற இதழ் தொடர்ச்சி)

நயன்தாரா (வயது-34 ):

தமிழ் சினிமாவின் டாப்-1 ஹீரோயி னான இவரைப் பற்றிய அறிமுகம் தேவை யில்லை. ஆனாலும், "ஐரா', "கொலையு திர் காலம்', "மிஸ்டர் லோக்கல்' என வரிசையாகப் படங்கள் ஊத்திக் கொண்ட தும், அவ்வளவுதான் நயனின் மார்க்கெட் என கோலிவுட்டில் ஓப்பனாகவே பேச ஆரம்பித்தார்கள். ஆனால், அஜீத்துடன் ஜோடி போட்ட "விஸ்வாசம்' மெகா ஹிட் ஆகி, நயனின் மார்க்கெட்டை ஸ்டெடியாக்கியது. கடந்த 4-ஆம் தேதி ரிலீசான, சிரஞ்சீவி யுடன் ஜோடி போட்ட "சைரா நரசிம்மா ரெட்டி' எகிடு தகிடாக ஓடி, தெலுங்கு, தமிழ் ஹீரோயின்களை மிரட்சியாகப் பார்க்க வைத்தார் நயன்தாரா. தற்போது ரஜினியுடன் "தர்பார்', விஜய்யுடன் "பிகில்' என டாப் கியரில்தான் போய்க் கொண்டிருக்கிறது நயனின் மார்க்கெட்.

nayan

தேசியக் கட்சியின் இளம் தலைவர் ஒருவருடன் ஒருவாரம் உல்லாசத்தீவு ஒன்றில் மெகா பட்ஜெட்டில் பொழுதைக் கழித்தார் நயன். இரண்டு வருடங் களுக்குமுன் இது நடந்தது.

ஆனால், இவரின் கல்யாணம்தான் நியூட்ரலிலேயே இருக்கிறது. சேட்டை மன்னன் சிம்புவுடன் லவ்வி கவ்வி, ஆரம்பத்திலேயே டமால் ஆனது காதல்!

அதன்பின், உள்ளே வந்தார் பிரபுதேவா. ஏற்கெனவே கல்யாணமானவர் என தெரிந்தும் பிரபுதேவாவை டீப்பாக லவ் பண்ணினார் நயன்.

பிரபு தேவாவிற்காக பல கோடி களை வாரி இறைத்தார் நயன். எந்தளவுக்கு முடியுமோ அந்தள வுக்கு நயனிடம் கறந்து சக்கை யாக்கிவிட்டுப் பறந்துவிட்டார் பிரபு தேவா. ரஜினி போன்ற சீனியர்களின் அட்வைசை சீரியஸாக ஃபாலோ பண்ணி யதால், கொஞ்ச காலம் காதல் வலையில் விழுகாமல் இருந்தார் நயன்.

திடீரென நயனின் வாழ்க்கைக்குள் வந்தார் டைரக்ட

(சென்ற இதழ் தொடர்ச்சி)

நயன்தாரா (வயது-34 ):

தமிழ் சினிமாவின் டாப்-1 ஹீரோயி னான இவரைப் பற்றிய அறிமுகம் தேவை யில்லை. ஆனாலும், "ஐரா', "கொலையு திர் காலம்', "மிஸ்டர் லோக்கல்' என வரிசையாகப் படங்கள் ஊத்திக் கொண்ட தும், அவ்வளவுதான் நயனின் மார்க்கெட் என கோலிவுட்டில் ஓப்பனாகவே பேச ஆரம்பித்தார்கள். ஆனால், அஜீத்துடன் ஜோடி போட்ட "விஸ்வாசம்' மெகா ஹிட் ஆகி, நயனின் மார்க்கெட்டை ஸ்டெடியாக்கியது. கடந்த 4-ஆம் தேதி ரிலீசான, சிரஞ்சீவி யுடன் ஜோடி போட்ட "சைரா நரசிம்மா ரெட்டி' எகிடு தகிடாக ஓடி, தெலுங்கு, தமிழ் ஹீரோயின்களை மிரட்சியாகப் பார்க்க வைத்தார் நயன்தாரா. தற்போது ரஜினியுடன் "தர்பார்', விஜய்யுடன் "பிகில்' என டாப் கியரில்தான் போய்க் கொண்டிருக்கிறது நயனின் மார்க்கெட்.

nayan

தேசியக் கட்சியின் இளம் தலைவர் ஒருவருடன் ஒருவாரம் உல்லாசத்தீவு ஒன்றில் மெகா பட்ஜெட்டில் பொழுதைக் கழித்தார் நயன். இரண்டு வருடங் களுக்குமுன் இது நடந்தது.

ஆனால், இவரின் கல்யாணம்தான் நியூட்ரலிலேயே இருக்கிறது. சேட்டை மன்னன் சிம்புவுடன் லவ்வி கவ்வி, ஆரம்பத்திலேயே டமால் ஆனது காதல்!

அதன்பின், உள்ளே வந்தார் பிரபுதேவா. ஏற்கெனவே கல்யாணமானவர் என தெரிந்தும் பிரபுதேவாவை டீப்பாக லவ் பண்ணினார் நயன்.

பிரபு தேவாவிற்காக பல கோடி களை வாரி இறைத்தார் நயன். எந்தளவுக்கு முடியுமோ அந்தள வுக்கு நயனிடம் கறந்து சக்கை யாக்கிவிட்டுப் பறந்துவிட்டார் பிரபு தேவா. ரஜினி போன்ற சீனியர்களின் அட்வைசை சீரியஸாக ஃபாலோ பண்ணி யதால், கொஞ்ச காலம் காதல் வலையில் விழுகாமல் இருந்தார் நயன்.

திடீரென நயனின் வாழ்க்கைக்குள் வந்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன். இருவருமே கேரளாவைச் சேர்ந்தவர் கள் என்பதால், இவர்களின் லவ்வும் ஸ்ட்ராங்கானது. கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலேயே இருவரும் ஒரே வீட்டில் (அதுவும் நயனின் வீடுதான்) கோயிங் ஸ்டெடி ஸ்டைலில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறந்து ஜாலியாகப் பொழுதைக் கழிக்கிறது நயன்- விக்னேஷ் சிவன் ஜோடி.

தனது அன்புக் காதலனும் வருங்காலக் கணவருமாகிய விக்னேஷ் சிவனுக்காக சினிமா தயாரிப்புக் கம்பெனி ஒன்றை ஆரம்பித்துக் கொடுத் துள்ளார் நயன். அநேகமாக வருகிற டிசம்பர் மாதத்தில் விக்னேஷ் சிவனுக்கு முறைப்படியான கணவர் அந்தஸ்தை நயன் வழங்குவார் என்கிறார்கள் கோலிவுட்டில். அதற்குள் எந்த வில்லங்கமும் நடக்காமல், கல்யாணம் நல்லபடியாக நடந்தால் சரிதான்!

kajol

காஜல் அகர்வால் (வயது-34): பஞ்சாபைச் சேர்ந்த இவர், இந்தி சினிமா வில் நுழைந்தார். அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லாத தால், வழக்கம்போல் தெலுங் குப் பக்கம்போய், பாரதிராஜா வின் "பொம்மலாட்டம்' மூலம் தமிழுக்கு வந்தவர். அந்தப் படம் முடிந்து பல வருஷங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் இருந்ததால், தெலுங்கில் கவனம் செலுத்தினார். ஒருவழியாக "பொம்மலாட்டம்' ரிலீஸ் ஆகி நல்ல பேரும் வாங்கிக் கொடுத்ததால், மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தினார். விஜய், கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட காஜல், இப்போது கமலுடன் "இந்தியன்-2'-வில் கமிட்டாகி, ஷூட்டிங் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

""திருமணத்தின்மீது எனக்கு வெறுப் பெல்லாம் கிடையாது. ஆனா என்னமோ தெரியல, திருமணம் தள்ளிப் போய்க் கிட்டே இருக்கு'' என ஒரு தினுசாகப் பேசுகிறார் காஜல் அகர்வால்.

பூனம் பாஜ்வா (வயது-34): டைரக்டர் ஹரியின் "சேவல்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர். சொல்லிக்கொள்ளும்படியாக எந்தப் படமும் தமிழில் ஓடியதில்லை. சுந்தர் .சி.யின் "அரண்மணை'-யில் வஞ்சகம் இல்லாமல் கவர்ச்சிகாட்டியிருப்பார். பார்ப்பதற்கு மொளுக் மொளுக் என இருந்தாலும், இன்னும் எந்த தொழிலதிபரும் இவருக்கு வாழ்க்கை கொடுக்க முன்வராதது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.

andrea

ஆன்ட்ரியா (வயது-33): ஆங்கிலோ இந்தியனான இவர், நல்ல பாடகியும் கூட. கமல், சரத், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டிருக்கிறார். அதிலும் "வடசென்னை' படத்தில் கப்பலில் அமீருடன் ஃபர்ஸ்ட் நைட் சீனில் தூள் கிளப்பியிருப்பார். 2001-2006 ஜெயலலிதா ஆட்சியின்போது சில அமைச்சர்களுடன் சேர்ந்து கிசுகிசுக் கப்பட்டார். இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களில் நடித்து வருகிறார்.

anjali

அஞ்சலி (வயது-33): டைரக்டர் மு. களஞ்சியத்திடம் சிக்கி படாதபாடுபட்டு, ஒருவழியாக அவரிடமிருந்து எஸ்கேப்பானவர். இவரது சம்பாத்தியத்தையெல்லாம் இவரது சித்தி உறவுமுறை கொண்டவர் மொத்தமாக அமுக்கப் பார்த்தபோது, உஷாராகி, சித்தியைத் துரத்தியடித்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்தினார். நடிகர் ஜெய்யை லவ் பண்ணினார், லவ்வை கட் பண்ணினார், மீண்டும் லவ் வானார். ஜெய்யின் குடிகார சேட்டைகளால் வெறுத்து மீண்டும் லவ்வை கட் பண்ணினார். அப்போது தி.மு.க.வில் பவர் புள்ளியாக தென்மாவட்டத்தில் இருந்த வரின் மகனுடனும், இப்போ தும் பவராக இருக்கும் ஒருவரின் மருமகனுடனும் ரொம்பவே நெருக்கமாக இருந்தார், இருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் இவரது பெரியம்மா வீட்டிற்கு அவ்வப்போது சென்று ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டு தாயகம் திரும்புகிறார். தீபாவளி கழித்து ரிலீசாகவிருக்கும் "நாடோடிகள்-2'-வை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் அஞ்சலி.

ப்ரியா ஆனந்த் (வயது-33): அக்மார்க் தமிழச்சியான இவர், சிவகார்த்தி கேயனின் ஆரம்ப காலப் படங்க ளில் ஜோடி போட்டார். இப்போது சிவகார்த்திகேயன் டாப் லெவலுக்குப் போனதும் கண்டு கொள்ளாமல் இருக்காரே என அடிக்கடி கவலைப்படு கிறார். ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடி போட்ட "எல்.கே.ஜி.' படம் இவருக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது. ஆனா லும், கவர்ச்சி தூக்கலான ஸ்டில்களை வாரந்தோறும் ரிலீஸ் பண்ணிவருகிறார்.

சீக்கிரமே இவருக்கு சுப காரியம் நடக்கட்டும்.

பிந்துமாதவி (வயது-33): "பொக்கிஷம்', "கழுகு', "தேசிங்கு ராஜா', "ஜாக்சன் துரை' என சொல்லிக் கொள்ளும்படியான படங்களில் நடித்தவர்தான். இவர் ஜோடி போட்டவர் களில் கொஞ்சம் பெரிய ஹீரோ என்றால் விமல்தான். இப்போது தமிழில் சுத்தமாக சான்ஸ் இல்லாத தால், ஆந்திராவில் இருக்கும் தனது பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். தெலுங்கானா அமைச்சர் ஒருவர் இவருக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். பொருத்த மான தொழிலதிபரை, மகளுக்காக தேடி வருகிறார்கள், பிந்துமாதவியின் பெற்றோர்.

ஷெரின் (வயது-33): "துள்ளு வதோ இளமை' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்தப் படம் எடுத்து முடிவதற்குள் டைரக்டர் செல்வராகவன், ஷெரினை படுத்தி எடுத்து விட்டார். இசையைக் கற்றுக் கொள்ள கொஞ்ச வருஷம் லண்டனில் இருந்தார், வந்தார், சந்தானத் துடன் "நண்பேண்டா' படத்தில் ஜோடி போட்டார். தற்போது, "பிக்பாஸ்' வீட்டிற்குள் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார்.

aad

அமலா பால் (வயது-27): டைரக்டர் சாமியின் "சிந்துசமவெளி' தான் இவருக்கு முதல் படம் என்றாலும், பேர் வாங்கிக் கொடுத்ததென்னவோ பிரபு சாலமனின் "மைனா'தான். இந்த மைனாவைத்தான் தனது கன்னியில் சிக்க வைத்தார் டைரக்டர் ஏ.எல். விஜய். அமலா பாலைத் திருமணம்செய்ய விஜய்யின் அப்பாவான ஏ.எல். அழகப்பன் கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், விஜய்யோ கட்னா அமலா பாலைத்தான் கட்டுவேன், இல்லேன்னா... கட்ட பிரம்மச்சாரி யாவே இருந்துட்டுப் போறேன்...'' என உறுதியாக இருந்ததால், வேறு வழியில்லாம் சம்மதித்தார் அழகப்பன். கேரள முறைப்படியும், தமிழ்நாடு முறைப்படியும் கோலாகலமாக நடந்தது விஜய்- அமலா பால் திருமணம்.

அழகப்பன் எதிர்பார்த்தமாதிரியே, திருமணமாகி ஒன்றரை வருஷத்தில் இல்லறத்தில் விரிசல் விழுந்தது, விவாகரத்தானது. மன அமைதிக்காக அடிக்கடி இமயமலை சென்று திரும்பும் அமலா பால் ஆன்மிகத் தத்துவங் களைப் பேசி அசத்தினாலும், சினிமா விலும் கவனம் செலுத்திவருகிறார்.

சாயிஷா சைகல் (வயது-22):

மும்பையைச் சேர்ந்த இவர், நம்ம ஊர் நடிகர் ஆர்யாவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு, சந்தோஷ மாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ""சின்ன வயசு லேயே எனக்குத் திருமணம் ஆகிருச்சு என்பதற்காக என்னுடைய ஆசைகளையும் லட்சியங்களையும் அடக்கிவைக்க முடியாது. நான் சினிமா வில் தொடர்ந்து நடிப்பேன்னு சொல் லிட்டுத்தான ஆர்யாவைக் கல்யா ணம் செஞ்சுக்கிட்டேன்'' என்கிறார்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

cini221019
இதையும் படியுங்கள்
Subscribe