ன்னட திரையுலகில் பிரபலமாகிவருபவர் நடிகை நிஷா. கன்னடத்தில் "அமர்', "பேஸ் டூ பேஸ்', "தேவா, ஐ லவ் யூ', "கே.ஜி.எப் 2', "தேவகி' ஆகிய படங்களில் நடித்து கர்நாடக சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர். அதோடு மாடலிங் கும் செய்துவருகிறார். 28 வயதாகும் நிஷாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவரது தந்தை கர்நாடகாவில் பிரபலமான அரசியல் பிரமுகர் என்பதால், இவருக்கு திடீரென அரசியல்மீது ஆசைவந்தது. நிஷாவின் அப்பா சி.பி. யோகேஸ்வர், கர்நாடக மாநிலம் சென்னப்பட்டிணம் தொகுதியின் எம்.எல்.ஏவாக, எம்.பியாக இருந்தவர். எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர். இவரது சகோதரர் தற்போதும் உள்ளாட்சிப் பொறுப்பில் இருந்துவருகிறார்.

nisha

யோகேஸ்வரை, பெங்களுரூ ரூரல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த முடிவுசெய்து இதனை அவரிடம் பா.ஜ.க. தலைமை தெரிவித்தபோது, "எனக்கு சீட் வேண்டாம். என் மகளுக்கு தாங்க' என தனது மகள் நடிகை நிஷாவை முன்னிறுத்தினார். 29 வயதாகும் நிஷாவின் அழகு, சினிமாமூலம் அவருக்கு கிடைத்துள்ள பிரபலத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த பா.ஜ.க. தலைமை யும் சரியென தலையாட்டி யது. நிஷாவும் எம்.பி. கனவில் போஸ்டர் விளம்பரத்துக்காக ஃப்ரெஷ்ஷாக ஃபோட்டோ ஷூட்டெல்லாம் நடத்தினார்.

சமூகவலைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் பரவின, செய்தித்தாள்கள் இவரைப்பற்றி அலசி எழுதத் துவங்கின. இவரது ரசிகர்கள் தங்களது அழகு, கனவுக்கன்னி எம்.பியாகப் போகிறார் என கர்நாடகாவில் குதூகலித் தார்கள்.

இந்நிலையில் மார்ச் 25-ந் தேதி வெளிவந்த பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் பெங்களுரூ ரூரல் தொகுதி வேட்பாளராக அஸ்வத் நாராயணன் என்பவரை அறிவித்தது நடிகை நிஷாவை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இதுபற்றி பாஜக மேலிடத்திடம் யோகேஸ்வர் கேட்டபோது, ""பெரும் தொழிலதிபரும், அமைச்சராகவும் உள்ள காங்கிரஸ் சிவக்குமாரின் தம்பி டி.கே. சுரேஷை ரூரல் தொகுதியில் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.

அவரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமென்றால் சாதிரீதியாக பலமான வேட்பாளர் தேவை. நீங்கள் பிராமணர். அதனால்தான் கௌடா சாதியைச் சேர்ந்த அஸ்வத் நாராயணனை நிறுத்தியுள்ளோம்'' எனகைவிரித்துவிட்டார்கள்.

தனது ஆசை மகளின் எம்.பி கனவு கரைந்து விட்டதே என நொந்து போயுள்ளார் யோகேஸ்வர். அவரைவிட அவரது மகள் நடிகை நிஷா மனவேதனையில் உள்ளாராம். தன்னை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்போகிறார்கள் என்கிற சந்தோஷத்தில், சக திரைக்கலைஞர்களுக்கு விருந்தெல்லாம் வைத்துள் ளார். இப்போது சீட் இல்லை என்றாகிவிட்டதால் மனம் கசந்து சோகமாக உள்ளார் என்கிறார்கள்.

தங்களது 28 வயது கனவுக் கன்னியை எம்.பி சீட் தருவதாக ஆசைவார்த்தை கூறி பாஜக ஏமாற்றியதை நினைத்து கண்ணீர் வடித்துவருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஒரு பெண்ணின் கண்ணீர், அதுவும் நடிகையின் கண்ணீர்க் கதறல் பா.ஜ.க.வை என்ன பாடுபடுத்தப் போகிறதோ?

-கிங்