ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போலீஸ் உடையில் போலீசையும் தமிழக அரசையும் விமர்சித்த சின்னத்திரை நடிகை நிலானியை குன்னூரில் வடபழனி போலீசார் கைது செய்து குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .

actress-nilani

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பேரக்ஸ் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த சின்னத் திரை நடிகை நிலானி தனியார் தொலைக்காட்சியில் "தாமரை' என்ற தொடரில் டி.எஸ்.பி.யாக நடித்துவந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தின்போது காவல்துறை காண்காணிப்பாளர் உடை அணிந்து அரசுக்கு எதிராகப் பேசியது, ஆள் மாறாட்டம் செய்தது, அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டியது, சோசியல் மீடியாவில் வெளியிட்டது போன்ற குற்றங்கள் தொடர்பாக சென்னை வடபழனி போலீஸ் 23-5-18-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து நிலானி யைத் தேடிவந்தனர்.

காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததின்பேரில் குன்னூர் அருகே பேரக்ஸ் பகுதியில் உறவினர் வீட்டில் நிலானி இருப்பதை அறிந்து வீட்டைச் சுற்றிவளைத்து கைது செய்து குன்னூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் நீதிபதி சுந்தராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் .

பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

டி.வி. நடிகை நிலானி கைதானதால் நடுக்கத்தில் இருக்கிறது கோடம்பாக்கம்.

Advertisment