நடிகரும், ஜனசேனா என்ற அமைப்பின் தலைவருமான பவன் கல்யாண், இன்றைய அரசியல் குறித்து இளைய
தலைமுறையினர் உரிய விழிப் புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட விழிப்புணர்வு அணிவகுப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டன் பரேஜ் என்ற சரித்திர புகழ்ப்பெற்ற பாலத்தின் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பிற்கு மீனவர்களும் பிச்சுகா லங்கா என்ற இடத்திலிருந்து தவ்லீஸ்வரம் வரை கடலில் தங்களது படகுகளில் ஜனசேனாவின் கொடிகளைக் கட்டி, ஆதரவை தெரிவித்தனர்.
பேரணிக்கு இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளும் தங்களது ஆதரவைத் தெரிவித்தன.