selvamuruganசிறுசிறு வேடங்கள் என்றாலும், ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார் நடிகர் செல்வமுருகன். "ஆதலால் காதல் செய்வீர்', "மேற்கு தொடர்ச்சி மலை', "ஒரு கிடாயின் கருணை மனு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், எழுத்தாளர் என்ற முகம் பலரும் அறியாதது. சமீபத்தில், இவர் எழுதிய "பாரதி ஸ்டூடியோ' என்ற சிறுகதை தொகுப்பின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அடுத் தடுத்த நல்ல கதா பாத்திரங்களை எதிர் பார்க்கும் அவரிடம் பேசும் போது...

""எனது நண்பர் களான எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, மருத்துவர்- நாகேஷ் பாபு, இயக்குநர் லெனின் பாரதி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரன், மணிவண்ணன் ஆகியோர் புத்தகக் காட்சிக்கு சென்று புத்தகம் வாங்கும்போது, அவர்களுடன் நானும் செல்வேன். அவர்கள் குறைந்தது இரண்டு பைகளில் புத்தகம் வாங்குவார்கள். இரவு திரும்பி வரும்போது, அதனை நான் வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு வருவேன். ஏனெனில், பை நிறைய புத்தகம் தூக்கி வருவதை யாரேனும் பார்த்தால், இவர் இவ்வளவு புத்தகம் படிக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள் அல்லவா!

அதற்காகத்தான், புத்தகம் தூக்கிக் கொண்டு வரும்போது, நண்பர்கள் என்னையும் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவார்கள். அப்படியே அவர் களால்தான் சினிமா வில் நடிக்க வந்தேன்.

Advertisment

நடித்துக் கொண்டிருக்கி றேன்'' என்கிறார் செல்வமுருகன்.