டிகர் சங்கத் தலைமைப் பொறுப்புகளில் இருந்த சரத் குமார், ராதாரவி டீமை எதிர்த்து களம் இறங்கி அபார வெற்றி கண்டது விஷால் தலைமையிலான பட்டாளம். "நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டிய பிறகே கல்யாணம் கட்டுவேன்' என சபதம் எடுத்தார் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால். ஏற்கெனவே இருந்த நிர்வாகக்குளறுபடியை சரிசெய்யவே பதவிக்காலம் முழுவதும் ஓடிவிட்டதால், இப்போதுதான், நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு அஸ்திவாரமே போட்டிருக்கிறார்கள். முழுமையாகப் பணிகள் முடிய வேண்டும் என்றால் இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும். எனவே நடிகர் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டி, தேர்தல் நடத்தாமல், இப்போதிருக்கும் நிர்வாகத்தையே தொடர அனுமதி கேட்கும் ஐடியாவில் இருக்கிறதாம் விஷால் டீம்.

vishal

அந்த மேட்டர் அப்படியே இருக்கட்டும். நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனதும் அடுத்ததாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியைக் குறி வைத்து களம் இறங்கினார்.

Advertisment

சங்கத்தின் தலைவர் கலைப்புலி தாணுவுக்கு ஆப்பு அடித்து, தலைவர் பதவியைக் கைப்பற்றினார் விஷால். செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளையும் விஷால் டீமே கைப்பற்றியது. தேர்தலில் நின்றபோது, ஏகப்பட்ட வாக்குறுதிகளை வாரி வழங்கினார் விஷால்.

"தலைவர் பதவிக்கு வந்து 14 மாசமாச்சு, கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?' இப்படி அதிரடியாகக் கேட்டு, கலகக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார் சங்கத்தின் உறுப்பினரான வாராகி. விஷால் கொடுத்த வாக்குறுதிகளை பாயிண்ட் பாயிண்டாக கேள்வி கேட்டு, விஷால் மீது செம பாய்ச்சல் காட்டியிருக்கிறார் வாராகி. அந்த பாயிண்டுகளும் கேள்வி களும்தான் கீழே.

1.பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் தேங்கிக் கிடக்கும் அனைத்து படங்களையும் ரிலீஸ் பண்ணுவேன்.

Advertisment

building

எத்தனை படங்களை ரிலீஸ் பண்ணியிருக்கின்றீர்கள்?

varagi

2.தயாரிப்பிலிருந்து ஒதுங்கிவிட்ட தயாரிப்பாளர்கள், மீண்டும் படம் தயாரிக்கும் சூழலை உருவாக்குவேன்.

எத்தனை தயாரிப்பாளர்கள் படம் தயாரித்திருக்கிறார்கள்?

3. படங்களின் டி.வி.ரைட்ஸ் முறைப்படுத்தப்படும், எல்லாப் படங்களுக்கும் டி.வி.ரைட்ஸ் கிடைக்க வழி செய்யப்படும்.

எத்தனை படங்களுக்கு டி.வி.ரைட்ஸ் வாங்கி கொடுத்துள்ளீர்கள்?

4. தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் சென்னையில் வீடுகட்ட அரை கிரவுண்ட் நிலம் வாங்கித் தருவேன்.

இதுவரை எத்தனை பேருக்கு நிலம் வாங்கி கொடுத்துள்ளீர்கள்?

5. சிறுபட்ஜெட் படங்கள் அனைத்திற்கும் அரசு மானியம் கிடைக்கச் செய்வேன். 149 படங்களுக்குத்தான் மானியம் கிடைச்சிருக்கு. மீதி 350 படங்களுக்கு மானியம் என்னாச்சு?

6. தயாரிப்பாளர்கள் சங்க நிதியிலிருந்து ஒரு பைசாகூட செலவழிக்க மாட்டேன்.

barathirajaதாணு வைத்துவிட்டுச் சென்ற வைப்பு நிதி 7 கோடி ரூபாய். ஆனால் இப்போது அந்த நிதியில் ஒரு பைசா கூட இல்லை. நீங்களும் செயலாளர்களும் இணைச்செயலாளர்கள் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரும் இந்த 7 கோடிக்கு கணக்கு காட்ட முடியுமா?

பொதுக்குழுவில் தலைவரைப் பார்த்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள். தலைவர் முறைத்துக் கொண்டு வெளியேறி விடுவார். இதுதான் சினிமா பொதுக்குழுவில் மட்டுமல்ல, எல்லா பொதுக்குழுவிலும் நடக்கும் சமாச்சாரம். ஆனால் தயாரிப்பாளர் சங்க பொதுக் குழுவிலோ, நீங்களே கேள்விகேட்டு, நீங்களே வெளியேறிய கூத்து நடந்து, பாதியிலேயே பொதுக் குழு பொசுக்குன்னு போச்சு.

கியூப் கட்டணக் குறைப்புக்காக சினிமா ஸ்டிரைக் நடந்துச்சு. நீங்க புதுசா ஒரு கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டீர்கள். மொதல்லயாவது படம் ரிலீசான முதல்வாரம், இரண்டாம் வாரம், மூன்றாம் வாரம் என கட்டணத்தை குறைத்துக் கொண்டே வந்தது கியூப். ஆனா இப்ப எல்லா வாரமும் ஒரே கட்டணம்தான். இதுக்குத்தான் 45 நாள் சினிமா ஸ்டிரைக்கா?

-இப்படியெல்லாம் வாராகி அதிரடி கிளப்பிக் கொண்டிருக்க, கடந்த வாரம் பாரதிராஜா, ஜே.கே.ரித்தீஷ், ராதாரவி, டி.ராஜேந்தர் ஆகியோர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பலர் ஆந்திரா கிளப்பில் கூடினார்கள். ""7 கோடி ரூபாய்க்கு விஷால் கணக்கு காட்ட வேண்டும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழன்தான் தலைவராக வரவேண்டும்'' என புது குண்டு போட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள்.

சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபுவோ, ""கண்டவர் களுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை'' என்கிறார். தலைவர் விஷாலோ, ""மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எல்லாவற்றிற்கும் கணக்கு வழக்கு பக்காவாக இருக்கிறது'' என்கிறார்.

சட்டை கிழியுற அளவுக்கு சண்டை முற்றிப் போகாம இருந்தா சரிதான்.

-ஈ.பா.பரமேஷ்