ருகிறது ஆங்கிலப் புத்தாண்டு

அற்புதமாய் வாழ்க்கை மாறப்போகுது..

எதிரி முன்னே நிமிர்ந்து வாழ

சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி

நல்விதமாய் அமையப் போகுது..

பண்ணிய கர்மம், சாபம், கோபம் தீர

விநாயகருக்கு கொழுக்கட்டை

விருந்துவைத்து வழிபடுகிறேனப்பா..

நினைத்ததெல்லாம் நடக்க

நல்லாசி கூறுமப்பாலி என்

நையாண்டிச் சித்தரே!..

நீ வாழ்வாங்கு வாழ

என் நல்லாசி என்றும் உண்டப்பா!..

"அப்பப்ப' நான் சொல்லும்

ஆபத்துக்களையும் அறிந்து செயல்பட்டால்

உன் ஆயுள்வரை வாழ்க்கை தித்திக்குமப்பா..

பதற வைக்கும் பங்குனியை

பத்திரமாய்க் கடக்க...

பரிகாரத்துடன் பலன் கூறுகிறேன்

பாலோ அப் பண்ணி

பயப்படாமல் கடந்து போ...

நல்லதே நடக்கும் என்பதை நம்பு...

ஆறு கிரக சேர்க்கை

திருக்கணித பஞ்சாங்கப்படி மார்ச் 29-ஆம் தேதி, கும்பத்திலிருக்கும் சனி, மீனத் திற்குள் பெயர்ச்சியாகிறார். ஏற்கெனவே மீனத்தில் இருக்கும் சூரியன், சந்திரன், ராகு, புதன், சுக்கிரன் என ஐந்து கிரகத்துடன், சனி ஆறாவது கிரகமாக அதிரடியாக இணைகிறார். சனிப்பெயர்ச்சி ஆனதும் ஆறு கிரகங்களும் மீனத்தில் சேர்ந்து உலகத்தையே உலுக்கப் போகிறார்கள். மார்ச் 29, 30, 31-ஆம் நாட்களில் இருக்கும் கிரக இணைவுகள் உலகில் பல மாற்றங்களைத் தரப்போகிறது. சூரியன், சந்திரன் இணைந்து அமாவாசை, சூரியன், சந்திரனுடன் ராகு இணைந்து கிரகண தோஷம், சூரியன், சனி சேர்க்கை, அஸ்தங்கம், சூரியன், நீச புதன் இணைந்த புதாத்தியம், அஸ்தங்கம், சூரிய சுக்கிர இணைவு ஏற்படுகிறது. ராகுவுடன் சூரிய சந்திரர்கள் இணைந்து கிரகண தோஷம் அடைவதுபோல், ராகுவுடன் சேரும் ராகு, சனி சேர்க்கை, ராகு புதன் இணைவு, ராகு சுக்கிரன் இணைந்து கிரகணமடைகிறார்கள்.

dd

சனி, புதன் இணைவு, சனி சுக்கிரன் இணைவு, சுக்கிரன், நீச புதன் இணைவு என கிரகங்கள் ஒன்றுக்கொன்று இணைவு பெறுகின்றனர். இந்த ஆறுகிரக சேர்க்கையால் உலகத்தில் பேரழிவு வரப் போகிறது. ஆறு கிரகத்தை அடுத்து மற்ற மூன்று கிரகமான செவ்வாய், குரு, கேது கிரகங்கள் நிலையும் சாதகமாக இல்லை. மிதுனத்தில் செவ்வாய், குருவின் புனர்பூசம் நட்சத்திரத்திலும், ரிஷப குரு, நீர் கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்திலும், செவ்வாய் பார்வைபெற்ற கன்னியில் கேதுவும் நிற்கிறார்.

மொத்தத்தில் நவகிரகங்களும் மோசமான இணைவு என கெட்டு நிற்கின்றன. இதனால் உலகம் பல்வேறு பேராபத்துக்களை, பேரழிவை விதவிதமான முறையில் சந்திக்கப் போகிறது. நாடு இன்னொரு லாக் டவுனுக்கு தயாராகிறது.

சுனாமி - பிரளயம்

நீர் ராசி, கடல் ராசியான மீனத்திற்குள் ஆறு கிரக சேர்க்கை ஏற்படுவதால் சுனாமி அல்லது கடலில் பிரளயத்தை உண்டாக்கப் போகிறது. மிதுனத்தில் செவ்வாய், குருவின் புனர்பூசம் நட்சத்திரத்திலும், ரிஷப குரு நீர் கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்திலும் இருப்பதால், உலக மக்களுக்கு தண்ணீரால் கண்டம் உண்டாகும். புண்ணிய நதிக்கரை, கடற்கரை களில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டு அவதிப்படுவர். மக்கள் வசிக்கும் நிலப் பரப்பிற்குள் நீர் புகுந்து நிலம் தீவு களாக மாறும். சில தீவுகள் மூழ்கும். கடல் கொந்தளிப்பதால் மக்கள் வாழும் தீவுகள் அழிந்து, விவசாய நிலம் பாதித்து உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை யை உருவாக்கும். மக்களுக்கு நீரால் பேரதிர்ச்சியும், பெரும் இழப்பும் ஏற்படப் போகிறது.

கடல் ராசி மீனத்தில் ஆறுகிரகம் சேர்வதால் கடல் கொந்தளிக்கும்..

கடக ஆறு நதி போலாகும்..

விருச்சிக குளத்தில் ஆற்று மீன் துள்ளும்...

குளம் ஆறாக ஓடும்

ஆறு கடல் போலாகும்...

அமாவாசை கிரகணத்தில் கடல் ஆகாயத்திற்கு எழும் அதிசயமும் ஆபத்தையே தரப் போகுதப்பா...

"அப்பப்பா' என துயர் வரும் காலம்

குரோதி பங்குனியில் வருதப்பா...

கடலோர மக்கள் இருப்பிடம் மாறி இருப்பது உத்தமம் தருமப்பா...

பொருளாதார வீழ்ச்சி!

கன்னியில் இருக்கும் கேதுவால் உலக நாடு களிடையே பணம் சம்மந்தமான பிரச்சினை, பொருளாதார சரிவு, நெருக்கடி, பணப் பரிவர்த் தனை, பண மதிப்பு மாற்றம், கரன்சி மாற்றம் என பணத்தை மையமாகக்கொண்டு பொருளாதார போர் ஏற்படும் அபாயம் உண்டு. நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தடை ஏற்படும். வெளிநாட்டு வர்த்தக உறவு பாதிக்கக்கூடிய வகையில் சூழல் அமையும். புதிதாய் கட்டிய பாலங்கள் இடிந்துவிழும் காலம். உலகப் போர் ஏற்படும் அபாயம் வரும். ஆட்சி யாளர்களுக்குள் தனி நபர் ஈகோவால் சண்டை, குண்டுமழை பொழிய வேண்டிய தாகிவிடும். ஆறு கிரகங்களும் கன்னி வீட்டில் இருக்கும் கேதுவை பார்ப்ப தாலும், செவ்வாய் நாலாம் பார்வையால் கேதுவை பார்ப்பதா லும் கன்னி கேது கடுமையாக பாதிக்கப் படுவார். மனித வெடிகுண்டு, விபத்து, போரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். கல்வி மையம், வயல் வெளி, புல்வெளி, பூந்தோட்டம் போன்ற இடங்களில் வெடி குண்டு மிரட்டல் அபாயத்தால் பாதிப்பு ஏற்படும்.

கால புருஷ தத்துவப்படி நோய், எதிரி, கடனைத் தரும் ஆறாம் இடமான கன்னியில் கேது...

மீனத்தின் ஆறு கிரக நேரடிப் பார்வையால்..

நீரில் அமிழ்தல், கடனில் அமிழ்தல் நோயால் அமிழ்தல், எதிரி தாக்குதலால்

எங்கே போவேன் என்கிற நிலையில்

மக்கள் வறண்டு வாழும் சூழலில்

வாடி வதங்கப் போகிறார்கள்...

போதாக்குறைக்கு மிதுனச் செவ்வாய் கன்னி கேதுவை நாலாம் பார்வையால் நார்நாராய் கிழிக்க போகிறார்...

உலகெங்கும் பணப்பஞ்சம் வெளிநாட்டு வாழும் பராரி மக்களுக்கு பேரிடி காத்திருக்கப்பா...

பணத்தை தங்கத்தில் முதலீடு செய்பவனே குருவால் காப்பாற்றப்படுவான்....

போர்- கிருமியால் ஆபத்து!

நில ராசியான ரிஷபத்தில் குரு இருப்பது நிலப்பரப்புகளில் பேரழிவு ஏற்படாமல் பாதுகாக்கப்படும். கடலோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும். காற்று ராசியான மிதுனத்தில் பாவகிரகமான செவ்வாய் நிற்பது அதிவேகமாக பரவக்கூடிய தீயால் அதாவது ராக்கெட், அணுகுண்டு மட்டுமல் லாமல், புதிய வைரஸ் கிருமியால் புதிய தொற்று நோய் பரவும் ஆபத்து உண்டு. போர் நெருப்பால், புது வகை மருந்தால், மக்கள் பேராபத்துக்களை சந்திக்க வேண்டி வரும். மேலும் மிதுனச் செவ்வாய் நான்காம் பார்வையாக, கன்னிக் கேதுவை பார்ப்பதால் விபத்து, கண்டம் உண்டாகும். ஏழாம் பார்வை யாக போர்க் குணம் கொண்ட வில் அம்பான தனுசுவை பார்ப்பதால் வீரியமாக நோய் தொற்றுப் பரவும். சர ராசியான மகரத்தையும் எட்டாம் பார்வையாக பார்ப்பது தீவிரவாதத் தாக்குதல் உண்டாகலாம். மொத்தத்தில் இன்னொரு லாக் டவுன் வரப் போகிறது.

மிதுனச் செவ்வாயின்

பார்வையில் கேது பயந்து கிடக்க..

பத்தாக் குறைக்கு ஆறுகிரகமும் சேர்ந்து

கன்னியை உற்று நோக்க...

கார்மேகம்போல் பிரச்சினைகள் சூழ்ந்து

கலங்கி நிற்கும் கன்னி கேதுவை...

ரிஷபத்தில் நின்ற குரு

நிம்மதியாய் பார்க்கிறார்...

குறையொன்றுமில்லை..

பணம் பணம் என அலைந்து

கெட்டுப்போன புத்திக்காரா...

புத்தி சொல்ல வந்திருக்கும் கேதுவிற்கே

சோதனைமேல் சோதனை

வேதனைமேல் வேதனை நடக்கிறது...

குருவின் பார்வை

கோடி நன்மை தருவார் என்றாலும்...

கோடி ரூபாய் முதலில்

எனக்கு தாருங்கள் போதும் என்கிறாய் நீ...

லாக் டவுன் வரப் போவது உறுதிதான்...

அந்த நேரம் உறுதியாய் நீ நின்றால்

நீயும் கோடீஸ்வரனாவாய்..

வாழ்த்துகள்...

பாதிப்படையும் ராசிகள்!

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீன ராசிக்காரர்கள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை அனைத்து விஷயத்திலும் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும். புது முயற்சி, சுப காரிய விசேஷம் எதையும் செய்யவேண்டாம். தள்ளி வைக்கவும்.

குருப்பெயர்ச்சிக்குப் பின்னே முக்கிய முடிவுகளை எடுக்கவும்.

ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு, விபரீத ராஜ யோகத்தால் நினைத்தவை நடக்கும். கிடைத்ததை பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

கடகம், மகரம் பொறுமை, நிதானம் தேவை. அவசரப்பட்டால் ஆபத்தில் முடியும் காலம். விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தைகள் வழியில் கவனம் எடுத்துக் கொள்ளவும். நேர்மையாக நடந்தால் யோகம்.

பரிகாரம்!

எட்டுத் திங்கள் பிடித்து வைத்த பிள்ளையாரை

பிடிவாதமாய் நீ வழிபட...

பிடிச்சதெல்லாம் உனக்கு கிடைக்குமப்பா...

புதையல் ஒன்று காத்திருக்கு

பூட்டி வைத்த உன் குலதெய்வத்திடம்...

அமாவாசையன்று சென்று வேண்டிக் கேட்டால்...

கேட்ட வரம் கிடைக்குமப்பா...

எளிமையான பரிகாரம் சொல்கிறேன் செய்துபார்...

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பிரபஞ்சத்திடம்

ஏழு வாரம் உனக்கு வேண்டியதைக்கேள்...

பஞ்சமின்றிப் பிழைக்க பல வழிகள் சொல்லும்...

படைத்தவன் சொல்கிறேன்

பட்ட வேதனைகள் இன்றோடு பறந்து போகும்...

வாழ்க வளமுடன்...

செல்: 96003 53748