ஆளுமையையும் அதிகாரத்தையும், தன்வசப்படுத்திப் பயணிக்கும் ஆற்றலை அருளும் ஜோதிடவியலில், பஞ்சபூதங்களின் ஆளுமை அளப்பரியதாகும்.
இதில் நெருப்பு, நிலம், காற்று, நீர் என நான்கு வகையாகப் பிரித்து, ராசிகளில் பயணிக்க பணித்துள்ளார்கள் நமது முன்னோர்கள்.
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ஆளுமைக்குரிய ராசிகளும், நெருப்பின் ஆளுமைக்கு உட்பட்டதாகும்.
இதில் செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்கள் நெருப்பு ராசியை தன்னகபடுத்தி ஆண்டு கொண்டிருக்கின்றது.
இந்த ராசிகளில் ஜனனம் எடுத்தவர்கள் தனக்கென ஒரு அதிகாரத்தையும், ஆளுமையையும், தனித்தன்மையையும், கொண்டவர்கள். இவர்கள் பெரும் கூட்டத்தை வழிநடத்தும் தனித்தன்மை கொண்டவர்கள். ஒரு செயலின் அச்சாணியாக விளங்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
கோபம் சற்று கூடுதலாக இருந்தாலும் இவர்களால் எடுக்கப்படும் முடிவு தீட்சண்யமாக பலரின் வாழ்வில் தீபம் ஏற்றும் வல்லமையை பெற்றிருக்கும்.
இம்மூன்று ராசிகளில் மேஷத்தில் மட்டுமே ஆயுள்காரகன் சனி நீசம் நிகழ்கின்றது.
மீதமுள்ள சிம்மத்தில் நீசமோ, உச்சமோ கிடையாது. அதேபோல் தனுசில் பகை, நீசம், உச்சம் என்று எதுவுமே நிகழாவண்ணம் ஒரு சிறப்புடைய தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது.
பஞ்சபூதத்தில் மாபெரும் சக்திகொண்டது நெருப்புதான். ஏனென்றால் நீரோ, காற்றோ, நிலமோ, மாறுபட்ட சூழ்நிலைக்கு தன்னை உட்படுத்தும் பொறுப்பேற்றுள்ளது.
பிற அசுத்தங்கள் இந்த பூதங்களை சீர்குலைக்கும். தன்னிலை மாறிய பின்பே உரித்தான நிலைக்கு திரும்பமுடியும். ஆனால் நெருப்பின் தன்மை இது கிடையாது. எந்தவிதமான சூழலில் ஒரு பொருள் இருந் தாலும் வெப்பநிலையின் அடிப்படையில் அதை பஸ்பம் ஆக்கும் ஆற்றல் நெருப்புக்கு மட்டுமே உண்டு.
இந்த குணத்தையே தன்னகத்தே இம்மூன்று ராசிகளும் கொண்டிருக்கும். இதில் மேஷம் மட்டும் குலதெய்வத்தின் அருளை தனக்கு உச்சமாக்கி பிரதிபலிக்கும் ஆற்றல்பெற்ற ராசியாகும். அதோடு 11 மற்றும் 10-ஆம் அதிபதியான சனிபகவான் தன்னிடத்தில் நீசம் எய்துவதனால் தொழில் மற்றும் லாபம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பை நல்கும்.
மேலும் ஏழாம் இடத்தில் உச்சம்பெறும் சனிபகவான் களத்திரத்தின் வழியில் ஒரு லாபத்தையும், ஒரு பாதகத்தையும், தொழில் சார்ந்த சூழலில் பெரும்.
காலபுருஷனுக்கு ஐந்தாம் பாவகமாக அமைந்துள்ள சிம்மத்தின் ஆளுமைக்குரிய அதிபதி சூரியன், மூன்றில் நீசமாகி ஒன்பதில் உச்சமாகும் சூழல் இருக்கும்.
இளைய சகோதரன் வழியிலும், பங்காளி கள் வழியிலும், ஒப்பந்தங்கள்ரீதியாகவும், சிற்சில பிரச்சினைகளைக் கடக்கும் சூழலை உருவாக்கும், ஸ்திர ராசியான சிம்மம் ஒன்பதாம் இடத்தை பாதகமாகக் கொண்டத னால் தந்தைவழி உறவுகளின்மூலம் ஒரு பெரிய ஜீரணிக்க முடியாத பாடத்தைக் கற்றுக்கொள்ளும் அமைப்பு உருவாகி இருக்கும்.
தனுசு காலபுருஷனுக்கு பாக்கியஸ்தனமான ஒன்பதாம் பாவகத்தை ஆளுகின்றது. தனுசு ராசியின் அதிபதியான குரு இரண்டாம் இடத்தில் நீசமாகி, எட்டாம் இடத்தில் உச்சம் ஆவதனால், குடும்பம் சார்ந்த விஷயங்களில் ஒரு பெரிய ரகசியத்தைக் கையாளக் கூடிய தன்மையும், வருமானம்ரீதியான விஷயத்தில் தொடர்ந்து பண வரவை எதிர்பார்க்க முடியாத தன்மையையும் பெற்றிருக்கும்.
எந்த ஒரு ரகசியத்தையும் மிக எளிதில் கண்டுபிடிக்கும் ஆற்றல் இந்த தனுசுக்கே உரியது என்றால் அது மிகை ஆகாது.
இப்படி தனக்கான சூழலில் பயணிக்கும் இம்மூன்று ராசிகள் தனக்கான பிரச்சினைகளை நெருப்பின் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் வல்லமை பெற்றவர்கள்.
இந்த ராசி சார்ந்தவர்கள் நெருப்பின்மூலம் எப்படி பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்? ஆதிநாயகனை அனுதினமும் தீப, தூப, ஆராதனை செய்யும் சூழலை உருவாக்கிக் கொள்வது சிறப்பு.
மேலும் யாகங்களின்மூலம் அதீத சுபிட்சத்தை பெரும் ஆற்றல் இந்த ராசியினருக்கு மட்டுமே அமையப்பெற்றுள்ளது.
மேஷம்
மலைமேல் அமர்ந்துள்ள கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் சிவன் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு செவ்வாய், ஞாயிறு, வியாழன் ஆகிய நாட்களில் ஏதாவது ஒருநாளில் உங்களின் வயதின் கூட்டுத்தொகை எண்ணிக்கையில் நெய் தீபம் போட வாழ்வில் பல சுபிட்சங்களை கையாளமுடியும். உதாரணமாக 12 வயது என்றால் மூன்று நெய் தீபங்கள் போட வேண்டும். அதேபோன்று துவரை, கோதுமை, கொண்டைக்கடலை இம்மூன்றையும் தலா கால்கிலோ வீதம் வாங்கி சிவப்புத் துணியில் கட்டி திங்கள்கிழமையன்று தலையணை யாக தலைக்கு வைத்து படுத்து, மறுநாள் இதனுடன் கால்கிலோ வெல்லம் சேர்த்து அரைத்து, மீன்கள் உள்ள குலத்திற்கு ஒரு பிடியும், பறவைகளுக்கு ஒரு பிடியும், எறும்பு புற்றுக்கு ஒரு பிடியும், மீதமுள்ளதை பசு மாட்டிற்கும் தானமாக வழங்க வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் விலகி மேன்மை பெறமுடியும்.
சிம்மம்
ஊரின் மேட்டுப்பகுதியில் அமைந்துள்ள முருகன் அல்லது சிவன் அல்லது குருபகவான் ஆகிய தெய்வங்களுக்கு வியாழக்கிழமைகளில் உங்களின் வயதின் கூட்டுத் தொகையில் இலுப்பை எண்ணெய் கொண்டு தீபங்கள் போட்டுவர வேண்டும்.
மேலும் கொண்டைக்கடலை மற்றும் துவரை இந்த இரண்டு தானியங்களையும் சனிக்கிழமையன்று இரவு வெள்ளை நிறத் துணியில் கட்டி தலையணைக்குப் பதிலாக வேறு துணியில் கட்டி வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் இதனுடன் கால்கிலோ அளவு வெல்லம் சேர்த்து அரைத்து மீன்கள், எறும்பு புற்று, பறவை, மற்றும் பசு மாட்டிற்கு, உணவாக அளித்து விட வேண்டும்.
தனுசு
மலைமேல் அமர்ந்துள்ள உருவம் மாறிய தெய்வங்களுக்கு அதாவது நரசிம்மர் பிரத்தியங்கரா போன்ற தெய்வங் களுக்கும், சிவன் ஆலயங்களுக்கும், சென்று உங்களின் வயதின் கூட்டுத்தொகையில் அமைந்துள்ள தீபத்தினை நல்லெண்ணெய் கொண்டு ஏற்றவேண்டும்.
மேலும் உங்களின் சுற்று வட்டாரங்களில் நிகழ்த்தப்படும் யாகங்களுக்கு நெய் வாங்கி தானம் அளிப்பதும் சிறப்பினைத் தரும். கொண்டைக்கடலை மற்றும் கோதுமை ஆகியவற்றை ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி புதன் இரவு தலையணையாக வைத்து படுத்துக்கொண்டு மறுநாள் காலை இதனுடன் கால்கிலோ அளவு வெல்லம் சேர்த்து அரைத்து மீன் குளம், எறும்பு புற்று, பறவைகள், பசு மாடு ஆகியவற்றிற்கு தானமாக அளிக்கவேண்டும்.
நெருப்பு ராசியில் பிறந்தவர்கள் பராமரிப்பு இல்லாத சிவன் ஆலயங் களுக்கு அமாவாசைதோறும் இலுப்பை எண்ணெய் மற்றும் நெய் வாங்கி வழங்கிவர கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் வெளிச்சம் உங்கள் இல்லங்களுக்கும் பரவும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சுற்றுவட்டாரத்தில் நிகழும் யாகங்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு நெய் அதில் சேர்க்கப்படும் சமித்துகள் போன்றவற்றை தானமாக அளிக்க தடைப்பட்ட அத்தனை சுப நிகழ்வும் உங்கள் வாழ்வில் அரங்கேறும்.
செல்: 80563 79988