வைராக்கியம் வாய்ந்த அனுஷம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/zealous-anush-melmaruvathur-s-kalaivani

னிதனின் ஒவ்வொரு அசைவுக்கும், ஏற்படும் விளைவுக்கும் முழுமுதல் காரணமாகத் திகழும் கிரகங்கள் பயணிக்கும் நட்சத்திரங்களின் வரிசையில் 17-ஆவது நட்சத்திரம் அனுஷ நட்சத்திரமாகும்.

இது கர்மகாரகன், ஆயுள்காரகன் என்றெல்லாம் அழைக்கப்பெறும் சனி பகவானின் இரண்டாவது நட்சத்திரமாகும். இதுவொரு ஆண் நட்சத்திரமென்றும், சில நூல்களில் அனுஷம், ஆண்- பெண்ணற்ற திருநங்கை நட்சத்திரமென்றும் கூறப் படுகிறது.

இந்த அனுஷம் காலச்சக்கரத்தின் எட்டாவது ராசியான விருச்சிகத்தில் தனது நான்கு பாதங்களையும் பதித்து அமர்ந்துள் ளது. நமது இந்திய பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றிவரும்பொழுது அனுஷ நட்சத்திர வரையறைக்குள் பயணிக் கும் காலம் அனுஷத்திற்குரிய காலமாகும். இந்த நேரத்தில் ஜனித்தவர்கள் அனுஷத்தை தங்களது ஜென்ம நட்சத்திரமாக அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள்.

அனுஷ நட்சத்திரத்தின் ராசிநாதன் செவ்வாயாகவும், நட்சத்திர நாதன் சனிபகவானாகவும், நவாம்ச நாதர்களாக அனுஷம் ஒன்றாம் பாதமென்றால் சூரியனும், இரண்டென்றால் புதனும், மூன்றென்றால் சுக்கிரனும், நான்காம் பாதமென்றால் செவ்வாயாகவும் அமையப் பெறுவார்கள்.

ansuham

மேலும் வைராக்கியத்திற்குப் பெயர் பெற்ற கிரகமாகத் திகழ்கிற செவ்வாயின் வீட்டில் நீதிதேவன் கர்மகாரகனின் நட்சத்திரம் அமையப்பெற்றுள்ளது.

இந்த அனுஷ நட்சத்திரத்திற்கு அனுராதா என்ற பெயரும் உண்டு. இந்த இரண்டுமே சமஸ்கிருதப் பெயர்களாகும். அணுஷத்தை தமிழில் அனுடம் என்று அழைப்பார்கள். பனை, தேன், மித்திரனால், புல், காளி, பேரந்

னிதனின் ஒவ்வொரு அசைவுக்கும், ஏற்படும் விளைவுக்கும் முழுமுதல் காரணமாகத் திகழும் கிரகங்கள் பயணிக்கும் நட்சத்திரங்களின் வரிசையில் 17-ஆவது நட்சத்திரம் அனுஷ நட்சத்திரமாகும்.

இது கர்மகாரகன், ஆயுள்காரகன் என்றெல்லாம் அழைக்கப்பெறும் சனி பகவானின் இரண்டாவது நட்சத்திரமாகும். இதுவொரு ஆண் நட்சத்திரமென்றும், சில நூல்களில் அனுஷம், ஆண்- பெண்ணற்ற திருநங்கை நட்சத்திரமென்றும் கூறப் படுகிறது.

இந்த அனுஷம் காலச்சக்கரத்தின் எட்டாவது ராசியான விருச்சிகத்தில் தனது நான்கு பாதங்களையும் பதித்து அமர்ந்துள் ளது. நமது இந்திய பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றிவரும்பொழுது அனுஷ நட்சத்திர வரையறைக்குள் பயணிக் கும் காலம் அனுஷத்திற்குரிய காலமாகும். இந்த நேரத்தில் ஜனித்தவர்கள் அனுஷத்தை தங்களது ஜென்ம நட்சத்திரமாக அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள்.

அனுஷ நட்சத்திரத்தின் ராசிநாதன் செவ்வாயாகவும், நட்சத்திர நாதன் சனிபகவானாகவும், நவாம்ச நாதர்களாக அனுஷம் ஒன்றாம் பாதமென்றால் சூரியனும், இரண்டென்றால் புதனும், மூன்றென்றால் சுக்கிரனும், நான்காம் பாதமென்றால் செவ்வாயாகவும் அமையப் பெறுவார்கள்.

ansuham

மேலும் வைராக்கியத்திற்குப் பெயர் பெற்ற கிரகமாகத் திகழ்கிற செவ்வாயின் வீட்டில் நீதிதேவன் கர்மகாரகனின் நட்சத்திரம் அமையப்பெற்றுள்ளது.

இந்த அனுஷ நட்சத்திரத்திற்கு அனுராதா என்ற பெயரும் உண்டு. இந்த இரண்டுமே சமஸ்கிருதப் பெயர்களாகும். அணுஷத்தை தமிழில் அனுடம் என்று அழைப்பார்கள். பனை, தேன், மித்திரனால், புல், காளி, பேரந்தை என்று சில தமிழ் நிகண்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நான்கு புள்ளிகளைக்கொண்ட தொகுப்பாக, ஒன்றுடன் ஒன்றை இணைத் தால் தாமரைப்போன்று காட்சியளிக்கிறதென்று கூறுகின்றார்கள்.

இவர்களது உடலில் வலப்புறத்தில் மச்சம் அல்லது மரு இருக்கும்.

இந்த அனுஷ நட்சத்திரத்தின் பறவையாக வானம்பாடியைக் கூறுகின்றனர். இந்த வானம்பாடிப் பறவை வானத்திலிருந்து விழும் மழைத்துளியைப் பருகி வாழும் என்று தமிழகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனுஷ நட்சத்திரத்திற்கு ஆகாத நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரமாகும். கார்த்திகையில் நண்பர்களோ, கூட்டாளி களோ, வாழ்க்கைத் துணையோ இல்லாமல் பார்த்துக்கொள்வது சிறப்பினைத் தரும்.

இந்த அனுஷம் காலச்சக்கரத்தின் எட்டாவது ராசியில் அமையப்பெற்று, பாக்கியாதிபதி தன் ராசியிலேயே நீசமடை வதனால் சற்று அதிர்ஷ்டம் குறைந்த நட்சத்திரமாகக் கருதப்படு கின்றது. குறைவாக இருந்தாலும் தனது உழைப்பு மற்றும் திட்டமிடலின் மூலம் அனைத் தையும் போராடி வெல்லும் வல்லமை படைத்தவர்கள் அனுஷ நட்சத்திரக் காரர்கள்.

இது சூரியனின் கர்மப் பதிவை கொண்ட நட்சத் திரமாகும். சூரிய னின் காரகமான தந்தை, மாமனார், மூத்தமகன், கண், ஆரோக்கியம் போன்றவற்றில் சில நெருடல்கள் இவர்களுக்கு இருந்தே தீரும்.

அனுஷத்தில் ஆண் என்றால் மாமியாருடன் முரண்பாடுகள், விட்டுக் கொடுத் துச் செல்லும் சூழ் நிலை உருவாகும். பெண் என்றால் மாமனாரின் அதட்டல் களுக்கு அடிபணிந்து செல்லக்கூடிய சூழ்நிலை களை உருவாக்கிக் கொடுக்கும்.

இது மேற்கூறியதுபோன்று சூரியனின் கர்மப் பதிவைக்கொண்ட நட்சத்திரம் என்பதனால் இவர்களின் வம்சாவளிகளில் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிபவர் கள் அரசாங்கத்தினால் தண்டனை பெற்றவர்கள். கண், தலைசார்ந்த பிரச்சினை உடையவர்கள் இருப்பார்கள். இவர்களது இளமைக்காலம் அவ்வளவு சிறப்பாக அமையப் பெறுவதில்லை. காரணம் இவர் களுக்கு முதல் தசையே சனி தசையாக வருவத னால் பல இன்னல்களையும் இடைஞ்சல் களையும் சகித்துப் பயணிக்கவேண்டிய சூழ்நிலை அமையும். மேலும் இவர்களது கல்வி நிலையானது புதனின் நிலையைப் பொருத்து அமையும் இவர்களுக்கு தொழிற்கல்வி சிறப்பினைத் தரும்.

இவர்கள் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியுமென்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களின் தந்தை எடுக்கும் முடிவின் மூலம் பயணிப்பது பெரும் சிறப் பினைத் தராது. இளம் வயதினிலேயே பல போராட்டங்களைக் கடந்தே இவர்கள் வந்திருப்பார்கள்.

மறைபொருளறிவது, ரகசியம் காப்பது, மதப்பற்று, நிதானம், குறிக்கோள், திட்டமிடல் போன்ற வற்றில் வைராக்கியமாக இருந்து தனது காரியத்தை சாதித்துக்கொள் வார்கள். மற்றவர்களிடம் அடிமை யாக தொழில்புரிவதை ஒரு பொழுதும் விரும்புவதில்லை. இது சனியின் நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாயின் வீட்டில் அமையப் பெற்றதனால் இவர்களுக்கு இவர் களே தலைமைப் பொறுப்பை ஏற்கும் எண்ணம் இருக்கும்.

இந்த விருச்சிக வீடு ஞானகாரகன் கேது பகவான் உச்சம்பெறும் ராசி என்பதாலும், செவ்வாயின் ஆட்சிவீடு என்பதினாலும் தெளிந்த ஞானம், கல்வி மேன்மை, எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் திறன் போன்றவை அமைந்திருக்கும்.

அனுஷம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சூரியனின் வீடான சிம்மத் தில் அமையப்பெறும். இங்கு செவ்வாய், சனி சந்திரன், சூரியன் ஆகியோரின் கூட்டு நிகழ்கிறது. இந்த நிலையானது அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகளில் இரண்டாம் கட்டப் பதவி போன்றவை அமையும். முதல் கட்ட பதவி என்னும்பொழுது அங்கு குருவின் இணைவும் தேவைப்படும் இங்கு சனியுடன் இணைவு ஏற்படு வதனால் இரண்டாம் கட்ட அரசு சம்பந்தப் பட்ட வேலைகள் இவர்களுக்கு உயர் வினைத் தரும். அரசுத் துறையில் கீழ்நிலைப் பதவி. துப்புரவுத் தொழில் போன்றவை இவர்களை சிறப்பின்வசம் இட்டுச்செல்லும்.

அனுஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் புதனின் வீடான கன்னியில் அமையப்பெறும். இங்கு செவ்வாய் சந்திரன், சனி, புதன் ஆகியோ ரின் கூட்டு நிகழும் இந்நிலையானது பூமி, பூமி சம்பந்தப்பட்ட தொழில், விவசாயம், கான்ட் ராக்ட் எடுப்பது, புத்திக்கூர்மை, விவசாயம் சார்ந்த விளைபொருள்களின் விற்பனை, அச்சகம், அச்சிடல், ஆராய்ச்சி, மெடிக்கல் ரெப், ஆயுள் காப்பீடு சம்பந்தப்பட்ட தொழில் கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைந்துகொண்டே இருக்கும் தொழில் போன்றவை இவர்களுக்கு சிறப்பினைத் தரும்.

அனுஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் சுக்கிர னின் வீடான துலாத்தில் அமையப்பெறும். இங்கு செவ்வாய், சனி, சுக்கிரன், சந்திரன் ஆகியோரின் கூட்டு நிகழும். இந்நிலையானது வழக்காடு மன்றங்கள், நீதிமன்றங்கள், சீருடைப் பணி என்று சொல்லக்கூடிய சீருடையணிந்த பணிகள், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், வெளிநாடுகளில் கீழ்த்தட்டு துறையில் பயணிப்பது, கனரக வாகனங்கள் இயக்குவது, ட்ரான்ஸ்போர்ட், கழிவுநீர் அகற்றும் தொழில், வீடு சம்பந்தப்பட்ட வாடகை வாங்குவது, டிரைவிங் போன்ற தொழில் இவர்களுக்கு சிறப் பினைத் தரும்.

அனுஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் செவ்வாயின் வீடான விருச்சிகத்திலேயே அமையப்பெறும். இங்கு செவ்வாய், சனி, சந்திரன் ஆகியோரின் இணைவு ஏற்படும் இந்நிலையானது சந்திரன் வர்க்கோத்தம மடைந்து பலம்பெற்றுவிடும். எனவே இவர் களுக்கு பண்ணை, விவசாயம், தீயணைப்புத் துறை இரண்டாம் நிலை பதவிகள், குற்றவியல் துறை போன்றவையும் அமையும்.

இது 12 வீடுகளில் எட்டாம் வீடாக அமையப் பெறும் ரகசியம் காக்கும் இடமாகவும் குறிக்கப் படுவதனால், மறைத்து வைத்ததைத் துப்பறியும் துறைகளான விஜிலன்ஸ் போன்ற துறைகளில் இவர்கள் கோலோச்சுவதை நிதர்சனத்தில் காணமுடிகிறது.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தங்களது தொழில் மற்றும் பணிகளை செவ்வனே செய்து முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல மலர்ந்த தாமரையின் சின்னத்தை "லோகோ வாகப் பயன்படுத்தலாம். முன்பே கூறியதுபோன்று கார்த்திகை நட்சத்திரத்தைத் தவிர்த்துவிடுவதன் மூலம் வாழ்வில் பல சிறப்புகளை அடையமுடி யும். இழப்புகளைத் தவிர்க்கமுடியும்.

வணங்கவேண்டிய தெய்வம்: மலை மேலுள்ள முருகன்.

வணங்கவேண்டிய விருட்சம்: மகிழம்.

அணியவேண்டிய ரத்தினம்: பவளம்.

(அடுத்த இதழில் கேட்டை)

bala310323
இதையும் படியுங்கள்
Subscribe