ப் ஆர். பெருமாள், ஈரோடு.
என் மகன் திருமணம்- நீங்கள் பொருத்தம் பார்த்த பெண்ணுடன் நிகழ்ந்தது. திருமணத்துக்குப்பிறகு பையனுக்கு வேலை- வருமான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எப்போது அமையும்?
மகன் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். மருமகள் கோமதி பூர நட்சத்தி ரம், சிம்ம ராசி, மகர லக்னம். இருவரும் ஒரே ராசி- ஒரே லக்னம். ஒரே யோனி (மகம், பூரம்- எலி) மிகமிகச் சிறப்பு. இருவருக்கும் நல்ல ஒற்றுமையும், மன நிறைவான மண வாழ்க்கையும், விரைவில் வாரிசுயோகமும் அமையும். பெண்ணுக்கு 2033 வரை ராகு தசை! மகனுக்கு சந்திர தசையில் 29-4-2019 ராகு புக்தி- அதனால் சம ராகு தோஷம். இந்த தோஷம் விலக சூலினிதுர்க்கா ஹோமம் செய்து மகனும் மருமகளும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். ஆனால் ஜாதகக் கோட்சாரக் கிரக அமைப்புப்படி, மேற்படி ஹோமம் செய்ய ஏதாவது தடை ஏற்படலாம். அல்லது பங்காளித் தீட்டு போன்ற சங்கடமும் தடையும் ஏற்படலாம். கோவிலுக்குப் போய் அர்ச்சனை, பூஜை செய்யவும்கூட தீட்டு ஏற்பட லாம்; தடை ஏற்படலாம். தீட்டுக்காலம் முடிந்ததும் வடக்குப் பார்த்த அம்ம னுக்கு நெய்தீபமேற்றி, மாலை சாற்றி பூஜை செய்யலாம். கோவை அவினாசி அருகில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் போய் வழிபடலாம். அது சித்தர் கோவில் என்பதால் அதற்கு எந்தத் தீட்டும் இல்லை.
ப் தங்கராஜ், பட்டாபிராம்.
பொதுவாக பங்காளித் தீட்டு, குடும்பத்தில் முக்கியமானவர்கள் இறந்த தீட்டு, பெண் பிள்ளைகள் பருவமடைந்த ருது தீட்டு அல்லது ப
ப் ஆர். பெருமாள், ஈரோடு.
என் மகன் திருமணம்- நீங்கள் பொருத்தம் பார்த்த பெண்ணுடன் நிகழ்ந்தது. திருமணத்துக்குப்பிறகு பையனுக்கு வேலை- வருமான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எப்போது அமையும்?
மகன் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். மருமகள் கோமதி பூர நட்சத்தி ரம், சிம்ம ராசி, மகர லக்னம். இருவரும் ஒரே ராசி- ஒரே லக்னம். ஒரே யோனி (மகம், பூரம்- எலி) மிகமிகச் சிறப்பு. இருவருக்கும் நல்ல ஒற்றுமையும், மன நிறைவான மண வாழ்க்கையும், விரைவில் வாரிசுயோகமும் அமையும். பெண்ணுக்கு 2033 வரை ராகு தசை! மகனுக்கு சந்திர தசையில் 29-4-2019 ராகு புக்தி- அதனால் சம ராகு தோஷம். இந்த தோஷம் விலக சூலினிதுர்க்கா ஹோமம் செய்து மகனும் மருமகளும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். ஆனால் ஜாதகக் கோட்சாரக் கிரக அமைப்புப்படி, மேற்படி ஹோமம் செய்ய ஏதாவது தடை ஏற்படலாம். அல்லது பங்காளித் தீட்டு போன்ற சங்கடமும் தடையும் ஏற்படலாம். கோவிலுக்குப் போய் அர்ச்சனை, பூஜை செய்யவும்கூட தீட்டு ஏற்பட லாம்; தடை ஏற்படலாம். தீட்டுக்காலம் முடிந்ததும் வடக்குப் பார்த்த அம்ம னுக்கு நெய்தீபமேற்றி, மாலை சாற்றி பூஜை செய்யலாம். கோவை அவினாசி அருகில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் போய் வழிபடலாம். அது சித்தர் கோவில் என்பதால் அதற்கு எந்தத் தீட்டும் இல்லை.
ப் தங்கராஜ், பட்டாபிராம்.
பொதுவாக பங்காளித் தீட்டு, குடும்பத்தில் முக்கியமானவர்கள் இறந்த தீட்டு, பெண் பிள்ளைகள் பருவமடைந்த ருது தீட்டு அல்லது பேறுகாலத் தீட்டு போன்றவை யெல்லாம் எவ்வளவு காலம் இருக்கும்?
பேறுகாலத் தீட்டு- ருதுமங்களத் தீட்டு போன்றவை 30 நாள்; பிறகு தோஷமில்லை. இறந்த தீட்டு அப்பா- அம்மாவுக்கு ஒருவருடம்; பங்காளித் தீட்டு ஆறுமாதம்; மனைவி இறந்த தீட்டு மூன்று மாதம்வரை உண்டு. மேற்படித் தீட்டுக்காலம் முடியும் வரை சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது. திருப்பதி, சபரிமலை போன்ற மலைக் கோவில்களுக்குப் போகக்கூடாது. 30 நாள் முடிந்ததும் வீட்டில் தீபமேற்றலாம். (தொழில் தர்மத்துக்கு விதி விலக்கு உண்டு. அதாவது மலைக் கோவிலில் பணியாற்று பவர்கள், வியாபாரம் செய்வோர் போன்றவர் களுக்கு விதிவிலக்கு.)
ப் ஏ. மணி, மதுரை.
"பாலஜோதிட'த்தில் நீங்கள் சொல்லும் பதில்கள் அற்புதம்! நடக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வேலையின்மை. சம்பாத்தியம் இல்லை. சம்பந்தமே இல்லாத பிரச்சினைகளால் வேதனை. ஆறு மாதம் நன்றாக இருக்கும்; அடுத்த ஆறு மாதம் மோசமாக இருக்கும். பக்கத்தில் குடியிருப்பவரால் காவல் நிலையம்வரை போகவேண்டிய நிலை. நாங்கள் ஒத்திக்கு குடியிருக்கிறோம். வீட்டை காலிசெய்துவிட்டு வேறிடம் போகலாமென்று மூன்று வருடமாக முயற்சிக்கிறோம். முடிய வில்லை. வீட்டின் உரிமையாளர் ஒத்திப் பணத்தைத் தரமறுக்கிறார். அந்தப் பணத்தை நம்பிதான் இருக்கிறோம். பணம் கிடைக்கப் பரிகாரம் என்ன?
நடப்பு 32 வயது ஆரம்பம். 22 வயதுமுதல் கேது தசை ஏழு வருடம். அடுத்து சுக்கிர தசை தனது புக்தி மூன்று வருடம், நான்கு மாதம். கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. சுயபுக்திக்குப்பிறகு சுக்கிர தசை யோகமாக இருக்கும். அதுவரை பொறுமையாக எதிர்நீச்சல் போடவேண்டியதுதான். சுயபுக்தி பெரிய பாதிப்பு ஏற்படுத்தாமலிருக்க வெள்ளிக்கிழமைதோறும் தொடர்ந்து வடக்குப் பார்த்த அம்மனுக்கு இரண்டு நெய்விளக்கேற்றி வழிபடவும். அத்துடன் ஒருமுறை பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபட்டால் வீடு மாற்றம் ஏற்படும். மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்குத் தென்புற வீதியில் குபேர பத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. அங்குசென்று வழிபடவும். வரவேண்டிய பணமும் வந்துசேரும். வேறு வீடும் மாறலாம். திருப்பதி- திருச்செந்தூர்- பழனி போவதுபோல மாதாமாதம் குபேர பத்ரகாளியம்மனை வெள்ளிக்கிழமையன்று வழிபட்டு நெய்விளக்கு ஏற்றினால் சுக்கிர தசை உங்களுக்கு யோக தசையாக அமையும்.
ப் கே. முருகன், கருப்பூர்.
எனது மகள் +2 படிக்கிறாள். கடன் வாங்கி கஷ்டப்பட்டு எப்படியோ படிக்கவைக்கிறேன். அடுத்து ஆசிரியர் வேலை அல்லது பேங்க் வேலைக்குப் படிக்கச் சொன்னால் அவள் அறிவியல் (ஒ.ந.த.ஞ.) படிக்கப்போகிறேன் என்கிறாள். அவளைப் படிக்க வைக்கமுடியுமா? படித்தாலும் அதற்குரிய வேலை கிடைக்குமா?
படிக்க ஆர்வமுள்ள பிள்ளைகளை கடன் வாங்கியாவது படிக்கவைக்க வேண்டியது பெற்றோர் கடமை. நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு (வங்கியில்) கல்விக்கடன் தருவார்கள். வெறும் ஆர்வம் மட்டும் போதாது. அக்கறையும் விடாமுயற்சியும் தேவையென்று மகளிடம் சொல்லவும். அவள் எண்ணம் ஈடேறும்.
ப் எம். திரவியம், பெங்களூரு.
மூத்த மகனுக்கு 48 வயது. இளைய மகனுக்கு 45 வயது. இருவருக்கும் திருமணமாகவில்லை. மூத்தவன் பெங்களூருவில் வேலை பார்த்துவிட்டு இப்போது பாக்கு வியாபாரத்தில் என்னுடன் இருக்கிறான். இருவரின் திருமணம், எதிர்காலம், தொழில்துறை யோகம் எப்படியிருக்கும்? பரிகாரம், இடம் பற்றிய தகவல் தரவும்.
இருவரின் ஜாதகத்திலும் குடும்ப தோஷம் கடுமையாக உள்ளது. மூத்த மகன் அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னம். 36 வயதுமுதல் சனி தசை. இது 4-ஆவது தசை; ஆகாது. இரண்டாவது மகன் மூல நட்சத்திரம், தனுசு ராசி. 38 வயதுமுதல் 45 வயதுவரை செவ்வாய் தசை. இது 5-ஆவது தசை; ஆகாது. இருவர் ஜாதகத்திலும் களஸ்திர தோஷம், புத்திர தோஷம் கடுமையாக இருக்கிறது. ஆயுள், ஆரோக்கியம், திருமணம், வாரிசு, தொழில், சம்பாத்தியம் எல்லாவற்றுக்கும் சேர்த்து 15 வகையான ஹோமம் செய்யவேண்டும். அதை முறையாக விசாரித்து செய்யவும். இரு பிள்ளைகளின் திருமணம், பேரன்- பேத்தியைப் பார்க்கும் பாக்கியம் உண்டாகும்.
ப் பி. மோகன், திருச்சி.
என் பேரன் பி.டெக் பாஸ் செய்துவிட்டு, சென்னையிலும் பெங்களூருவிலும் நேர்காணல் போய்வந்தும் தகுதியான வேலை அமையவில்லை. தற்போது ஒரு சுமாரான கம்பெனியில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்ப்பதால் மிகவும் நொந்துபோய் உள்ளான். அவன் ஜாதகப்படி தகுதியான வேலை எப்போது கிடைக்கும்? அரசு வேலை அமையுமா? திருமணம் எப்போது நடக்கும்?
பேரன் தனுசு லக்னம், கன்னி ராசி. சந்திர தசையில் ஜனனம். நடப்பு. 2023 பிப்ரவரிவரை ராகு தசை நடப்பு. இதன்பிறகு குரு தசையில் நல்ல வேலை, நல்ல சம்பளம் அமையும். அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் நிறுவனத்தில் அமையும். 30 வயதில் திருமணம் நடக்கும். வாய்ப்புக் கிடைக்கும் போது சமயபுரம் அடுத்து உஜ்ஜயினி காளியம் மன் கோவிலுக்கு (மாதம் அல்லது வாரம்) தொடர்ந்து போய் வழிபட்டுவரவும்.
ப் கே. பாஸ்கர், ஓசூர்.
என் மகனுக்கு உபநயனம் செய்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இறைவழிபாடு, பூஜை புனஸ்காரம் போன்ற ஆன்மிகக் காரியங்கள் எதிலும் ஈடுபாடில்லை. நம்பிக்கையும் இல்லை. மனதுக்கு கஷ்டமாக உள்ளது. ஏதேனும் பரிகாரம் உண்டா?
ராகு தசை நடக்கிறது. அதன்பிறகு குரு தசையிலிருந்து மகனுக்கு ஆன்மிகத்தில் நாட்டமும் ஈடுபாடும் உண்டாகும். அதுவரை ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவன் கோவிலில் நந்தி சந்நிதியில் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் நெய்விளக் கேற்றி வேண்டிக்கொள்ளவும். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை யில் ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மன் சந்நிதியில் ராகு தசை முடியும்வரை நெய்விளக்கு ஏற்றவும்.
ப் எஸ். தனசேகர், சேலம்.
என் மகன் பி.எஸ்.ஸி., கப்பல்துறையில் படிக்க ஆசைப்படுகிறான். அவன் ஜாதகப்படி அது உகந்த துறையா?
மகன் விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, துலா லக்னம். லக்னத்துக்கு 10-ல் செவ்வாய், 2-ல் சந்திரன். இருவரும் பரிவர்த்தனை. கப்பல் துறையில் படிக்கலாம்; எலக்ட்ரிக்கல் துறை யிலும் படிக்கலாம்.