ப் ஏ. செல்வராஜ், சீனிவாசநகர், சென்னை- 63

இவருடைய நீண்ட கடிதத்தில் வேலை, வீடு, கர்மவினை, பேரன், குலதெய்வ சாபம், பரிகாரம் என வரிசையாகக் கேட்டுள்ளார்.

இவர் பிறந்த தேதி 30-9-1958. மேஷ லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். இவருடைய 6-ஆமிடத்தில் நான்கு கிரகக் கூட்டணி உள்ளதால் அங்கு கிரக யுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் இவருக்கு நல்ல வேலை கிடைக்காமல் இருக்காது. கிடைக்கும்தான். ஆனால் இவர் பேசிப்பேசியே வேலையைவிட்டு விலகும் சூழ்நிலையை உருவாக்கிவிடுவார். இவருடைய 5-ஆம் வீட்டை சனி, செவ்வாய் இருவரும் பார்ப்ப தால், கட்டுப்பாடான ஒழுக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இவரால் தொடர்ச்சியாக வேலைபார்க்க இயலாது. அதற்காக சொந்தத் தொழில் எல்லாம் சரிப்பட்டு வராது. வீடு என்ற ஒன்று நிலையாக அமைய வாய்ப்பில்லை. நடப்பு குரு தசை; குரு அம்சத்தில் நீசம். குரு தசையில் சனி புக்தி 2024, அக்டோபர்வரை. நிறைய தடை, தாமதங்களை சந்திக்க வேண்டியிருக்கும். குலதெய்வ சாபம், பித்ரு சாபம் எல்லாம் உள்ளது. இவ்விதம் குலதெய்வ சாபம நீங்க, திருநெல்வேலி சொரிமுத்து அய்யனார் கோவில் சென்று வழிபடவும்.

ப் வே. லோகநாதன், ஈஞ்சம்பாக்கம், சென்னை- 115.

Advertisment

இவரின் நீண்ட கடிதத்தில் தனக்கும், குடும்பத்தினர் அனைவருக்குமான கேள்விகள் கேட்டுள்ளார். வே. லோகநாதன் தன் மனைவியுடன் சதா சண்டை, நிம்மதியில்லை. எப்போது குடும்பமாக ஒற்றுமையாக இருப்பேன் என்று கேட்டுள்ளார்.

26-4-1960-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். இவரின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி உச்சம். லக்னாதிபதி பலமிழந்துள்ளார். எனவே இவர் எப்போதும் அமைதியாக இருப்பது நல்லது. நடப்பு குரு தசையில் செவ்வாய் புக்தி. அடுத்துவரும் ராகு புக்தியில் தொழிலில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவீர்கள். ஆனால் வீட்டில் ஓரளவு அமைதி ஓடும். இவ்வித தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை உடையவர்கள், திருச் செங்கோடு சென்று வழிபடவும். மேலும் அருகிலுள்ள சிவாலயங் களில் பிரதோஷ வழிபாட்டில் ஈசனும் அம்மையும் சேர்ந்து வரும்போது, தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளவும்.

Advertisment

Q&A

ப் எம். கார்த்திகேயன், திருநெல்வேலி.

என் திருமணம் எப்போது நடக்கும்? சொந்தமா- அசலா?

17-11-1987-ல் பிறந்தவர். மீன லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். லக்னம், ராசி இரண்டுக்கும் நாக தோஷம் உள்ளது. இதுபோல் செவ்வாய் தோஷமும் உள்ளது. நடப்பு குரு தசையில் சனி புக்தி. இந்த ஜாதகர் தனது காதல் மணத்துக்காக வெகுநாள் சண்டையிட்டுக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. 2025-க்குள், ஒரு திருமணத்தை நடத்திக்கொள்வார். இவ்விதம் திருமணத் தடை உடையவர்கள் திருவாரூர்- திருவீழிமிழலை சென்று வணங்கலாம். இந்த ஜாதகரைப்போல் 7-ஆமிடத்தில் சந்திரன், கேது சேர்ந்திருப்பவர்கள், திங்கட்கிழமை அம் பாளையும் விநாயகரையும் அபிஷேகப் பொருட்களுடன் வணங்கவும்.

ப் விஜயலட்சுமி, கோயம்புத்தூர்.

என் மகனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணத்திற்கு ஒரு பெண் ஜாதகம் வந்துள்ளது. அதனை சேர்க்க லாமா? பெயர் வெளியிட வேண்டாம்.

பையன் 24-2-1985-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். நடப்பு சந்திர தசையில் புதன் புக்தி. 2024-ஆம் வருடம் வரை. அதற்குள் மறுமணம் நடந்துவிடும். பெண் 4-3-1990-ல் பிறந்தவர். தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். நடப்பு குரு தசையில் சனி புக்தி இதில் மறுமணம் நடக்கும். இரு ஜாதகத்திலும், ஒருவரின் லக்னாதிபதி ஒருவருக்கு ஏழாம் அதிபதியாக உள்ளனர். எனவே தாரளமாக மணம் முடிக்கலாம். இவ்விதம் மறுமண வாழ்க்கை, நல்ல விதமாக அமைய விருப்பம் கொண்டோர் மயிலாடுதுறை மாப்படி சுமங்கலி காளியை வணங்கவும்.

ப் ஜெ. காளிமுத்து, சேலம்.

எனக்கு நேரம் எப்படி இருக்கிறது? சுயதொழில் ஆரம்பிக்கலாமா? நிறைய கடன் இருக்கிறது. பரிகாரம் கூறவும்?

18-1-1984-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். கடக ராசிக்கு அஷ்டமச்சனி. நடப்பு சுக்கிர தசை ஆரம்பம். சுக்கிர தசை. சுக்கிர புக்தி 2026, ஜூலை வரை ஓடும். எப்போதும் சுய புக்திகள் ரொம்ப வேலை செய்யாது. அடுத்துவரும் சூரிய புக்தியில் முதல் போட்டு, உங்கள் பரம்பரை சார்புடைய தொழில் ஆரம்பிக்க முடியும். உங்கள் 6-ஆம் அதிபதி உச்சம். எனவே கடன், நோய் இவை ஏற்பட்டால் அதிகமாக தாக்கும். எனவே கூடியமட்டும் கடன் வாங்காமல் சமாளிக்கப் பாருங்கள். இவ்விதம் கடன் தொல்லைகள் உடையவர்கள், ஸ்ரீ நரசிம்மரின் எந்தத் திருக்கோலத்தையும் தரிசித்து வணங்க வேண்டும்.

ப் மனைவி உமா மகேஸ்வரி

மனைவி பழையபடி பாசமாக, சந்தோஷமாக இருக்க பரிகாரம் கேட்டுள்ளார்.

உமா மகேஸ்வரி 1-5-1963-ல் பிறந்தவர். மகர லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். கால சர்ப்ப தோஷ ஜாதகம். நடப்பு செவ்வாய் தசை. செவ்வாய் 7-ஆமிடத்தில் நீசபங்கமாகி உள்ளார். செவ்வாய் தசையில் சனி புக்தி. இவருக்கும் இவரது கணவருக்கும் சுத்தமாகச் சரிபட்டு வரவில்லை. இவரது ஜாதகத்தில், சற்று வேண்டாத செயல்களின் குற்றம் இருப்பதாகத் தெரிகிறது. குடும்பம் சிதறிக் கிடக்கிறது நிம்மதியில்லை. இவ்விதம் வேண்டாத செயல்களின் குற்றம் உடையவர்கள், மயிலாடுதுறை அருகிலுள்ள வழுவூர் தலம் சென்று சகஸ்ர லிங்கத்துக்கு ஆரத்தி செய்து வழிபடவேண்டும். மேலும் இந்த ஜாதகி, அருகிலுள்ள வராஹி அம்மனை வழிபட்டால், குடும்பம் சற்று அமைதியாகும். செவ்வாய் தசை முழுவதும் வழிபாடு அவசியம்.

ப் இரண்டாவது மகன் லோ. சிவகுமார்.

இவருக்கு வேலை எப்போது கிடைக்கும்? வெளியூர் சென்று, படித்துக்கொண்டிருக்கிறார்.

லோ. சிவகுமார் 9லி2-2001-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். 2021-ல் சூரிய தசை ஆரம்பம். சூரிய தசை ஆரம்பித்தவுடன் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். நடப்பு சூரிய தசையில் ராகு புக்தி. அடுத்துவரும் குரு புக்தியில் வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்வார். இவ்விதம் வேலைவாய்ப்பு வேண்டுவோர், பிரதோஷ காலத்தில் நெய் விளக்கேற்றி வணங்கவேண்டும்.

ப் மகன் மருமகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். குழந்தை பிறப்பு எப்போது?

மகன் லோ. சிவனேசன் 29-5-1993-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். நடப்பு செவ்வாய் தசையில் ராகு புக்தி 2024 வரையில். பின் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டு. மருமகள் லாவண்யா 7-7-1999-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நடசத்திரம். நடப்பு சூரிய தசை செவ்வாய் புக்தி. இவருக்கும் 2024-க்கு பிறகு குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. தம்பதிகள் இருவரும் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனையும் மருந்தும் பெற வேண்டியிருக்கும். இவ்விதம் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் கும்பகோணம் அருகில் கருவளர்சேரி சென்று வணங்கவும்.

செல்: 94449 61845