ப் ஆர். முருகன், உளுந்தூர்பேட்டை.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் எப்போது நடக்கும்?
மகன் விக்னேஸ்வரன் 31-3-1990-ல் பிறந்தவர். துலா லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னத்துக்கு 4-ல் செவ்வாய் உச்சம். எனவே பரிகாரச் செவ்வாயாவார். செவ்வாயும் சனியும் ராகுவுடன் இணைந்துள்ளனர். எனவே கலப்பு, காதல் மணம் நடக்கும். நடப்பு குரு தசையில் கேது புக்தி 2023, ஜூலைவரை. இதில் காதல் பற்றிய செய்தி தெரிந்து சண்டை ஏற்படும். அடுத்துவரும் சுக்கிர புக்தியில் காதல் திருமணம் நடக்கும். இவ்விதம் இஷ்ட திருமணம் நடக்க பெற்றோர் சம்மதம் கிடைக்கப் போராடுபவர் கள், விருதுநகர்- சிவகாசி சாலையிலுள்ள திருத்தங்கல் ஆலயம் சென்று வணங்குவது சிறப்பு.
ப் ப. நரசிம்மன், நங்கநல்லூர், சென்னை-61.
என் பேத்தி ஜாதகம் அனுப்பியுள் ளேன். குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும் என கூறவும்?
பேத்தி நிவேதா 13-6-1991-ல் பிறந்தவர். கடக லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். 5-ஆம் அதிபதி லக்னத்தில் நீசமாகி, உடனுள்ள உச்ச குருவினால் நீசபங்கமாகியுள்ளார். சனிபார்வை இருப்பதால், புத்திர பாக்கியம் தாமதமாகும். நடப்பு குரு தசையில் செவ்வாய் புக்தி 2023. செப்டம்பர் வரை. இந்த பெண்ணுக்கு 5-ஆம் அதிபதி கெட்டிருப்பதால் கண்டிப்பாக, கர்ப்பப்பை கோளாறு இருக்கும். இப்போது கர்ப்பப்பை சம்பந்தமாக ஒரு அறுவை சிகிச்சை உண்டு. பின் குழந்தை பாக்கியம் ஏற்படும். சென்னை சேத்துப்பட்டில், கருக்காத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இவ்விதம் குழந்தைப் பேறுக்கு காத்திருப்பவர்கள், அங்கு சென்று எலுமிச்சை பரிகாரம் செய்துகொண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
ப் ஞானவடிவேல், புதுச்சேரி.
என் மகன் ஜாதகம் அனுப்பி யுள்ளேன். ஏற்கெனவே மணமாகி விவாகரத்து வழக்கு நடக்கிறது. நீதிபதியின் ஆணைக்குக் காத்திருக்கி றோம். மறுமணம் எப்போது?
மகன் வைத்திலிங்கம் 14-8-1985-ல் பிறந்தவர். மகர லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். லக்னத்தில் நீச குரு, 7-ல் உள்ள நீச செவ்வாயைப் பார்க்கிறார். 7-ஆமிடத்தில் கூடவே சந்திரன், சூரியன், புதனும் உள்ளனர். ஆக, நீச குரு, நீச செவ்வாயைப் பார்த்து, உச்சநிலையை அடைகின்றனர். இவ்வித கிரகநிலை மற்ற இடங்களில் இருந்தால் பரவாயில்லை. லக்ன 7-ஆமிடத்தில் இருக்கும்போது இடிக்கிறது. இந்த 7-ஆமிட கிரக சேர்க்கையின்படி, ஒன்று மனைவி அடங்காதவளாக வருவாள். மற்றொன்று வந்த மனைவியும் இருக்க மாட்டாமல் பிரிந்துவிடுவாள். அல்லது அவளுக்கு விபத்து ஏற்படும். ஒன்றைக் கவனியுங்கள். இரண்டாம் திருமணத்துக்குரிய 11-ஆம் வீட்டு அதிபதி செவ்வாய்தான். இரண்டாம் திருமண மனைவியும், இதைவிட அடங்காத குணமுள்ள பெண்ணாகத்தான் இருப்பாள். அப்போது என்ன செய்வீர்கள். நடப்பு கேது தசையில் செவ்வாய் புக்தி. வரும் குரு புக்தியில், பழைய மனைவியையே மறுபடியும் திருமணம் செய்துகொள்வார். அல்லது சனி புக்தியில், வேறுமதப் பெண்ணை இஷ்ட திருமணம் செய்வார். மொத்தத்தில் திருமண வாழ்க்கை சிக்கல்தான். இவ்விதம் கேது தசை நடந்து அல்லல்படுகிறவர்கள், காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்தில் பௌர்ணமியில், கொள்ளும் உளுந்தும் கொண்டு அர்ச்சிக்கவும்.
ப் ஆ. செந்தில், மேலக்கொண்டையார், திருவள்ளூர்.
எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? சினிமாவில் சாதிக்க முடியுமா?
16-10-1985-ல் பிறந்தவர். கும்ப லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். லக்னத்துக்கு 7-ல் செவ்வாய். ராசிக்கு நாகதோஷம். ஜாதகத்தில் 9-ஆமிடத்தில் சந்திரன், சனி, புதன், கேது இணைவுள்ளது. எனவே ஏற்கெனவே இஷ்ட திருமணம் செய்து, அதைவிட்டு விலகியும் இருப்பீர்கள். லக்னாதிபதிக்கும் 7-ஆம் அதிபதிக்கும் சம்பந்தமில்லை. எனவே திருமணம் என்ற ஒன்றில்லாமல், சும்மா ஒரு பெண்ணுடன் சேர்ந்துவாழ இயலும். நடப்பு புதன் தசையில் ராகு புக்தி 2023, அக்டோபர்வரை. இதில் பிற மதப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறி அவளுடன் காலம் தள்ள ஆரம்பித்துவிடுவீர்கள். அவ்வாறு நடக்கா விடில், காலம் முழுவதும் குடும்பம் என்ற ஒன்றில்லாமல் இருக்க நேரும். சினிமா உலகம் ஓரளவுதான் சரிப்படும். இவ்விதம் சந்திரன், கேது இணைவு உள்ளவர்கள், நரம்புத்தளர்ச்சியும், பணவசதி இன்றியும் சிரமப்படுவர். இவர்கள் செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவில்சென்று வழிபடவேண்டும். ப் எஸ். தெய்வானை, மறைமலைநகர். என் பெண் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்போது திருமணமாகும்? மகள் மீனாட்சி 21-11-2001-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். நடப்பு ஏழரைச்சனி. ராகு தசையில் கேது புக்தி 2024, ஜனவரிவரை. அடுத்துவரும் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். இவ்விதம் ராகு தசை நடப்பவர்கள் கருடனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
ப் சித்ராதேவி, கோலியனூர்.
நான் தற்போது +2 முடிக்கப் போகும் மாணவி. எந்த பாடப்பிரிவு படிக்கலாம்?
7-5-2006-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசை. இதில் பொருளாதாரம், தொழிற்சாலை சட்டம், நிதி, பங்கு வர்த்தகம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட கல்வி அமையும். இவ்விதம் கல்வித் தடையின்றி நன்கு படிக்க, கும்பகோணம்- திருப்புறம்பியம் சென்று வழிபடவேண்டும்.
ப் இரா. முருகேஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். நிறைய வரன் பார்த்தும் திருமணத் தடை ஏற்படுகிறது. என்ன பரிகாரம்?
மகன் இராமசாமி 18-11-1995-ல் பிறந்த வர். மேஷ லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். ராசியில் ராகு, 7-ல் கேது. நாகதோஷ ஜாதகம். லக்னத்துக்கு 8-ல் செவ்வாய் ஆட்சி. பரிகார செவ்வாய் தோஷம். இந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 8-ல் சூரியன், புதன், குரு, செவ்வாய், சுக்கிரன் என ஐந்து கிரகங்களும் கூடி நிற்கின்ற னர். இதுவொரு சன்யாச யோக ஜாதகம். ஆனால், செவ்வாய், சனி சம்பந்தமும், 5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தமும் திருமணம்- அதிலும் இஷ்ட திருமணமாகும் எனக்கூறுகிறது. தாய்மாமன் வகையறாவில், திருமண பாதிப்பு ஏற்பட்ட பெண்ணுடன் இஷ்ட திருமணம் நடக்கும். நடப்பு ராகு தசை, புதன் புக்தி 2024, ஏப்ரல்வரை. அதற்குள் கலாட்டா கல்யாணமாக ஒன்று நடக்கும். அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனில், சன்யாசிபோல காலம் தள்ளி விடுவார். திருமணத்தடை உள்ளவர்கள தென்காசி- குற்றாலம் சென்று, குற்றால நாதர் குழல்வாய் மொழியம்மையை வணங்கவும்.
ப் ரவி, ஆலந்தூர்.
என் நண்பரின் மகள்கள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். விஜயராணி திருமணம், சரண்யா உடல்நலம் பற்றிக் கூறவும்.
விஜயராணி 24-10-1993-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். 11-ஆமிடத்தில் சூரியன், புதன், செவ்வாய், குரு சேர்க்கை, 5, 7-ஆம் அதிபதிகள் இணைவு. எனவே விருப்பத் திருமணம் நடக்கும். நடப்பு குரு தசையில் கேது புக்தி 2023, ஏப்ரல் மாதம் ஆரம்பம். மிகவும் மனக் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவாள். தானும் குழம்பி, வீட்டினரையும் குழப்பத்தில் விடுவாள். அடுத்துவரும் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். திருச்செந்தூர் முருகரை வணங்கவும். சரண்யாவின் தசா இருப்பு சரியாக எழுதவில்லை. எனவே பதில்கூற இயல வில்லை.
செல்: 94449 61845