ப் டி. விஜயன், சென்னை.

சென்ற குரு தசையில் மிகுந்த சிரமம் அனுபவித்துவிட்டேன். நடப்பு சனி தசையாவது எனக்கு நல்ல பலன்களைத் தருமா?

20-7-1968-ல் பிறந்தவர். துலா லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். நடப்பு சனி தசை, சனி புக்தி 2024, ஜூன்வரை. உங்களது ஜாதகத்தில் சனி யோகாதிபதியாகி நீசபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். தனது சுயபுக்தி முடிந்தவுடன் நல்ல பலன்களைத் தருவார். என்ன ஒன்று- எந்த விஷயமும் முதலில் தடை, தடங்கல் ஏற்பட்டு பின் சரியாக நடக்கும். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமைதோறும் சனீஸ்வரரை வழிபடுவது நல்லது.

Advertisment

aa

ப் மகேஸ்வரி, விழுப்புரம்.

கடந்த ஒரு வருடமாக உடம்பு சரியில்லை. கண்ணில் நீர் வந்துகொண்டும், கண் எரிச்சலுமாக இருக்கிறது. நிறைய வைத்தியம் செய்துவிட்டேன். மருந்தே இல்லையென்று கூறுகிறார்கள். பயமாக இருக்கிறது. பரிகாரம் ஏதாவது கூறுங்கள். எப்போது சரியாகும்?

12-3-1978-ல் பிறந்தவர். துலா லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். உங்களுக்கு ராகு தசை ஆரம்பித்து ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. எனவே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறீர்கள். 2024, ஜூன் மாதம், ராகு புக்தி முடியும்வரை, இதுபோல கண் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். வேறு வழியில்லை; பின் சரியாகும். பிரதோஷ காலத்தில் சிவனையும் அம்பாளை யும் வழிபடுங்கள். இவ்விதம் கண் பிரச்சினை உள்ளவர்கள். சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மதுரமங்கலம் சென்று வழிபட, நல்லவிதமாக கண் பாதிப்பு சுகமடையும்.

ப் மு. கணேஷ்குமார், செங்கமங்களம், தஞ்சை.

தற்போது சிறிய அளவில் பால்கடை நடத்திவருகிறேன். சுமாராகத்தான் இருக்கிறது. வேறெந்த தொழில் செய்யலாம்? திருமணம் எப்போது அமையும்.

15-7-1995-ல் பிறந்தவர். கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். உங்கள் 10-ஆம் அதிபதி செவ்வாய் அம்சத்தில் உச்சம். உங்களுக்கு பால் வியாபாரம் தெரிந்த தொழிலாக இருப்பதால் அதனையே தொடரவும். "தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்' என்பது முதுமொழி. இதனுடன் கூடவே காபி, டீக்கடை வைத்து நடத்தவும். 10-ல் இருக்கும் கேது மருத்துவ குணமுடைய பானங் களை விற்பனை செய்ய ஊக்குவிப்பார். எதையும் சற்று சூடாக விற்பனை நடக்கு மாறு பார்த்துக்கொள்ளவும். மேலும் அரசு விற்பனை முகவரவாகும் வாய்ப்பும் வரும். நடப்பு குரு தசையில் புதன் புக்தி 2024, ஜனவரி வரை. அதற்குள் உங்கள் சொந்தத்தில் சற்று நொடிந்துபோன அல்லது சண்டையிட்டு விலகிய குடும்பத்திலுள்ள பெண் அமைவார். இவ்விதம் தொழில் மேன்மையடைய விரும்புவோர், மதுரை- மேலூர் அருகே திருமோகூர் சக்கரத்தாழ்வாரை வழிபடவேண்டும். குலதெய்வ வழிபாடும் அவசியம்.

ப் ஆர். பாபு, குரோம்பேட்டை, சென்னை.

என் மகன் பிரதீப் ஜாதகம் இணைத்துள்ளேன். நிறைய வரன் பார்த்தும் திருமணம் காலதாமதம் ஆவதேன்? தகுந்த ஆலோசனை கூறவும்.

பிரதீப் 3-8-1990-ல் பிறந்தவர். தனுசு லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். லக்னாதிபதி குரு, அதன் 8-ஆம் அதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை. லக்னம், ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. எனவே நாக தோஷம் உள்ளது. நாகதோஷமுள்ள பெண்ணாகத்தான் பார்க்கவேண்டும். சனியின் பார்வையை 7-ஆமிடமும், அதிலுள்ள களஸ்திர காரகன் சுக்கிரனும் பெறுவதால் திருமணம் தாமதமாகிறது. சனி, சந்திரன் இணைவு. இருப்பினும், புனர்பூ யோகம் அனேகமாக வேலை செய்யாது. நடப்பு சந்திர தசையில் சனி புக்தி 2024, ஜனவரிவரை. அதற்குள், உங்கள் இனத்தில், சற்று வேறு பிரிவில் பெண் அமையும். இவ்விதம் திருமணத் தடையுள்ளவர்கள்- அதுவும் சந்திர தசை நடப்பவர்கள் திங்கட்கிழமை, காலை 6.00-7.00 மணிக்குள் சந்திர ஹோரையில், விநாயகருக்கு வலப்புறமுள்ள நாகருக்கு பாலாபிஷேகம் செய்து, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வணங்கி, கற்பூரம் ஏற்றி வழிபட, தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.

ப் வெ. உமா, உளுந்தூர்பேட்டை.

எனக்கு கடந்த மூன்று மாதங்களாக கண் பார்வை மங்கி வருகிறது. தசாபுக்திதான் காரணம் என்கிறார்கள். பரிகாரம் கூறவேண்டுகிறேன்.

23-11-1963-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகா ராசி, அவிட்ட நட்சத்திரம். நடப்பு சனி தசையில் குரு புக்தி. உங்களுக்கு சனி தசை 2023 டிசம்பரில் முடிகிறது. பின் புதன் தசை ஆரம்பிக்கும். ஒரு தசை முடிந்து, இன்னொரு தசை ஆரம்பிக்கும்போது சற்று குழப்பம் ஏற்படும். மேலும் உங்களுக்கு ஏழரைச்சனியின் தாக்கமும் உள்ளது. அனேகமாக உங்கள் கண்ணில் நீர் சேர்க்கை ஏற்பட்டு அதனால் கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குரிய மருத்துவத்தைப் பின்பற்றவும். இவ்விதம் கண் பாதிக்கப் பட்டவர்கள், மங்கலான பார்வையுடையவர்கள் போன்ற கண் குறையுடையவர்கள் கும்பகோணம்- பூம்புகார் சாலையில் துகிலி என்ற ஊர் அருகே, கீழ சூரியமூலை எனும் தலம் சென்று, அங்குள்ள சூரிய கோடீஸ்வரரை வழிபடவேண்டும். அருகிலுள்ள ஆலயத்தில் சூரிய பகவானை வழிபடுவதும், ஆதித்ய ஹ்ருதயம் கூறுவதும் நன்று.

ப் ஐ. ராமகிருஷ்ணன், கணேசபுரம், திருச்சி.

என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். இவனுக்கு மயான பரிகாரம் செய்தால்தான் திருமணம் நடக்குமென்று ஒரு ஜோதிடர் கூறுகிறார். எப்போது திருமணம் நடக்குமென்று கூறவும்.

ஆர். ராஜ்குமார் 12-1-1991-ல் பிறந்தவர். கும்ப லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். இவரது ஜாதகத்தில் 5, 7-ஆம் அதிபதிகள் சூரியனும், புதனும் இணைந்து பெருக்க ஸ்தானத்தில் உள்ளனர். களஸ்திர காரக கிரகம் சுக்கிரன் 12-ல் சனி மற்றும் ராகு வுடன் உள்ளனர். திருமண கிரக அமைப்பு சற்று குளறுபடியாக இருக்கிறதுதான். அதற்காக மயானத்துக்குப் போயெல்லாம் பரிகாரம் செய்யவேண்டிய அவசிய மில்லை. இந்த ஜாதகத்தில் பிதுர்தோஷம், சயன தோஷம் உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கநாதரை வழிபட, சயன தோஷம் நீங்கும். பிதுர் தோஷத் திற்கு ஆவூர் பஞ்ச பைரவர் பூஜையில், தேய்பிறை அஷ்டமியன்று கலந்துகொள்ள வேண்டும் கருடாழ்வாரையும் நன்கு வணங்க வேண்டும். நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி 2023, மார்ச்சில் ஆரம்பிக்கி றது. அதிலிருந்து திருமண யோகம் வந்து விடும். தாலி தானம் அவசியம். வெளியூர், வெளிநாட்டுப் பெண்ணாக அமைவாள். பையனையும் சற்று கட்டுப்பாடாக நடக்கச் சொல்லவும்.

செல்: 94449 61845