ப் சங்கர், சிவகாசி.
உறவுக்காரப் பெண்ணின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் தள்ளித்தள்ளிப் போகிறது. எப்போது திருமணமாகும்? பரிகாரம் செய்யவேண்டுமா?
கீர்த்திகா 24-11-1997-ல் பிறந்தவர். மீன லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்தி ரம். ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்வை. எனவே விருப்பத் திருமணமாக அமையும். சனி 7-ஆமிடத்தைப் பார்ப்ப தால், திருமணம் தாமதமாகிறது. நடப்பு ராகு தசை. இதில் 2026-ல் வரும் புதன் புக்தியில்தான் திருமணமாகும். மேலும் சனி, சந்திரன் பார்வை புனர் பூ யோகம் கொடுக்கிறது. திருமண தாமதத்திற்கு இந்த புனர்பூ யோகமும் ஒரு காரணமாகும். ராகு தசை நடப்ப தால், அருகிலுள்ள துர்க்கையை குங்கு மம் கொண்டு அர்ச்சனை செய்யவும். இவ்விதம் சந்திரன், சனி சம்பந்தம் கொண்டவர்கள் நாகை மாவட்டம், திருவேள்விக்குடி சென்று வணங்குவது சிறப்பு.
ப் சு. தேவி, கும்பகோணம்.
என் அண்ணன் மனைவி தாய் வீட்டுக்கே சென்றுவிட்டார். அதிலிருந்து அண்ணன் குடிகாரராக மாறி விட்டார். தொழிலையும் கவனிப்ப தில்லை. இறந்துவிடப் போகிறேன் என்கிறார். ஏதாவது செய்வினைக் குற்றம் உள்ளதா?
சு. செல்வம் 9-8-1974-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னாதிபதி புதன் இரு பாவியரிடையே உள்ளார். இவரது சந்திரன் லக்னத்துக்கு 8-ல் உள்ளார். கொஞ்சம் சந்தேகபுத்தி உண்டு. செய்வினைக் குற்றம் உள்ளதா எனக் கேட்டிருக்கிறீர்கள். ஒரு ஜாதகத்தில் பாதகாதிபதியும், 6-ஆமிட அதிபதியும் சம்பந்தம் பெறில், அங்கு வேண்டாத செயல் குற்றம் உண்டு என்றறிக. இந்த ஜாதகத்தில் குரு, சனியைப் பார்ப்பதால் குற்றமுள்ளது. நடப்பு செவ்வாய் தசை 8-ஆமிட தசை 12-ல் இருந்து நடத்துகிறார். இதில் ஆயுள் குற்றம் ஏற்படாது. ஏனெனில் குரு பார்வை செவ்வாய்க்குக் கிடைக்கிறது. எனினும் கவனம் தேவை. இந்த செவ்வாய் தசை 2024 ஜூலை வரை உள்ளது. சற்று பத்திரமாக இருக்கவும். இவ்விதம் வேண்டாத செயல் குற்றங்கள் உடையவர்கள், கொல்லிமலை- கொல்லிப் பாவை ஆலயத்தில் அமாவாசை, பௌர்ணமி யன்று வணங்குவது நல்லது. மேலும் உங்கள் ஊரிலுள்ள வாராஹி, பிரத்தியங்கரா தேவியை வழிபடுவது உங்களைப் பாதுகாக்கும்.
ப் பெயர் வெளியிட விரும்பாத வாசகர், புதுச்சேரி.
பித்ரு தோஷம், காலசர்பப தோஷம், புத்திர தோஷம், பிரம்மஹத்தி தோஷம் நீங்க என்ன பரிகாரம்? வேலை, சொந்த வீடு, வெளிநாடு யோகம் பற்றிக் கூறவும்.
9-2-1962-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னத்துக்கு 5-ஆமிடத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, கேது என ஏழு கிரகங்களும் ஒன்றுகூடி நிற்கின்றனர். காலசர்ப்ப தோஷம் கிடையாது. ராகு- கேதுவுக்கு வெளியே சந்திரன் விழுந்துவிட்டது. குரு, சனி சேர்க்கை பிரம்மஹத்தி தோஷம் கொடுக்கிறது. பித்ருதோஷம் உள்ளது. புத்திர தோஷமும் உள்ளது. நிரந்தர வேலை அமைவது கடினம் தான். சொந்த வீடு அமைவதும் சற்று சிரமம் தான். வெளிநாடு செல்வதில் தடை ஏற்படும். கடுமையான கிரக யுத்த ஜாதகம். எனவே எந்தச் செயல் செய்ய ஆரம்பித்தாலும், உடனே ஒரு தடைவந்து அதனைத் தடுத்து நிறுத்திவிடும். 5-ஆமிடத்தில் 8-ஆம் அதிபதி செவ்வாய் உச்சம். இதன்படி, போன ஜென்ம கொலைக்குற்ற பாவம் உள்ளது! இதனால் இந்த ஜென்மத்தில் எதுவும் நிறைவாக அமையாது. நடப்பு ராகு தசை ஓரளவு ஓடும். மேலும் 7-ஆவது ராகு தசையை விபத்தார தசை என்பர். 2025, ஜனவரியில், ராகு தசையில் கேது புக்தி ஆரம்பம். அதில் சற்று கவனமாக இருக்கவும். இவ்விதம் பூர்வஜென்ம கர்மவினை தோஷம் நீங்க, கரூர் பசுபதீஸ்வரர் ஆலய பஞ்ச -ங்க தரிசனம் செய்யவும். மேலும் ஏழை பிராமணருக்கு அரிசி தானம் செய்தால், பூர்வஜென்ம பாவங்கள் குறையும். விபத்தார தசை குற்றம் நீங்க, திருவாரூர்- ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடவேண்டும். இதுபோல நிறைய தோஷமுள்ள ஜாதகர் கள், கும்பகோணம் அருகே பாபநாசம் சென்று வழிபடவேண்டும். இந்த ஜாதகர், உள்ளதை உள்ளபடி கூறவும் என்று கேட்டிருந்தார். அதனால் விரிவாக எழுத வேண்டியதாகி விட்டது.
ப் ஒரு வாசகர்.
என் மனைவி அகிலாண்டேஸ்வரியின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவள் பெயரில் தொழில் செய்யலாமா? தர்ம கர்மாதிபதி யோகம் வேலை செய்யுமா?
26-1-1971-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். இவரின் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி சனி நீசம். இவரின் ஜாதகத்தைப் பொருத்தவரை தர்மகர்மாதிபதி யோகம் முழு யோகம் தராது. இவர் பெயரில் தொழில் ஆரம்பித்தால் விரயமாகிவிடும். நடப்பு குரு தசையில் செவ்வாய் புக்தி. குரு, செவ்வாய் இருவரும் ஒரே நட்சத்திரக் காலில் நிற்பது அவ்வளவு சிலாக்கியமில்லை. இவர் ஜாதகப்படி நீங்கள் தொழில் செய்யவேண்டுமெனில், அன்றன்று அழுகும், கெட்டுப்போகும் பொருட்களை வாங்கி விற்பது அல்லது தயார்செய்து விற்பது நன்று. அது சரியாக வரும். இவ்விதம் சனி பாதிப்பு நீங்க, தென்காசி- கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சனேயரை வணங்குவது நலம். அருகிலுள்ள சனிபகவானையும் ஆஞ்சனேயரையும் வணங்கவேண்டும்.
ப் டி. மூர்த்தி, உடுமலை.
தாயின் உடல்நிலை எப்படியிருக்கும்? திருமணத் தகவல் மையம் நடத்துகிறேன். சரியான தொழில் எது?
14-3-1979-ல் பிறந்தவர். கடக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். லக்னத்தில் குரு உச்ச வக்ரம். எனவே நீசம். மேலும் சனி, ராகுவுக்கு சூரியன், செவ்வாய், கேது பார்வை. எனவே கடுமையான தோஷம் உள்ளது. இதற்கு இராமேஸ்வரம் சென்று மகாளய அமாவாசையன்று சிரார்த்தம் கொடுத்து, சிவபெருமானை வழிபடவேண்டும். தேய் பிறை பரணியன்று முதியோருக்கு ஆடை தானம் செய்யவேண்டும். நடப்பு குரு தசை யில் கேது புக்தி. இதில் அதிகப் பிரச்சினைகளை சந்திக்க நேரும். 2023, பிப்ரவரியில் சுக்கிர புக்தி ஆரம்பம். 2023 ஜனவரியில் சனிப் பெயர்ச்சியானவுடன் உங்கள் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. நீங்கள் திருமணத் தகவல் மையம் நடத்துவதாக எழுதி யுள்ளீர்கள். இதில் குறிப்பாக மறுமணம், பிறமதம், ஊனமுற்றோர் திருமணங்களில் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். சற்று மேன்மையாக அமையும். ஜோதிட விஷயங் களை சற்று -மிட்டாக வைத்துக்கொள்ளவும். 6-ஆமிட குரு நீச நிலையிலிருந்து தசை நடத்துவதால் திருநெல்வேலி, தென்காசி சாலையில், கீழப்பாவூர் தலத்தில் எழுந்தருளி யுள்ள 16 திருக்கரங்களுடன்கூடிய நரசிம்மரை வணங்கவேண்டும். கடன் பிரச்சினைகள் தீர்வதோடு, பிற தோஷங்களும் நிவர்த்தி யாகும். குரு தசையின் பிற்பகுதி ஓரளவு நன்மை கள் தரும்
. ப் விஜயலட்சுமி, கடலூர்.
சமீபகாலமாக எங்கள் வீட்டில் திருட்டுப்போவதும், கீழே விழுந்து அடிபடு வதுமாக உள்ளது. திருட்டுப்போன பொருள் திரும்பக் கிடைக்குமா? உடல் நிலை எப்போது சரியாகும்?
28-5-1971-ல் பிறந்தவர். மேஷ லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் உச்சம். இதில் உச்ச சூரியனை, உச்ச செவ்வாய் பார்ப்பதால், சூரியன் பலமிழந்து, அவரின் 5-ஆமிட செயல்கள் பொலிவின்றிக் காணப் படும். சந்திரன் நீசம், குரு சம்பந்தம் பெற்றதால் நீசபங்கம் ஏற்பட்டுள்ளது. நடப்பு சூரிய தசை. அதனால் இனம்புரியாத சங்கடங்கள், ஆரோக்கியம் மற்றும் வாரிசுகள் விஷயமாகி பிரச்சினை உண்டாகியுள்ளது. மேலும் சூரிய தசையில், புதன் புக்தி. இதில் திருட்டு நடந்துள் ளது. காவல்துறையில் புகார் கொடுக்கவும். எனினும் 2023, ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தான் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவ்விதம் திருட்டுப்போன பொருள் கிடைக்க அரைக்காசு அம்மனை வணங்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் வேண்டாத செயல் குற்றம் உள்ளது. எனவே நரசிம்மரையும், சக்கரத்தாழ்வரையும் விளக்கேற்றி வணங்க வேண்டும்.
செல்: 94449 61845