உங்கள் கேள்வி ஆர்.மகாலட்சுமி பதில்கள்

/idhalgal/balajothidam/your-question-rmahalakshmi-answers-25

* ஆர். லதா, சென்னை.

என் மகன் கௌசிக் நாகராஜன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் எப்போது நடக்கும்?

உங்கள் மகன் 16-2-1987-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, உத்திர நட்சத்திரம். இந்த ஜாதகரின் 7-ஆம் அதிபதி சூரியன் லக்னத்தில். எனவே கண்டிப்பாகத் திருமணம் நடக்கும். எனினும் லக்னாதிபதி சனி 7-ஆம் அதிபதி யுடன் சம்பந்தம் பெறாமல், 11-ஆம் அதிபதி யுடன் சம்பந்தம் பெறுகிறார். லக்னத்துக்கு நாகதோஷம் உள்ளது. நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி. இதில் சனி ராசிக்கு 7-ல் கும்பத்துக்கு வந்தவுடன் திருமணம் நடக்கும். பெண்ணுக்கு இது மறுமணமாகவே இருக்கும். சனி, சந்திரன் இணைவு இவ்வித மறுமணத்தை மட்டுமே நடத்திவைக்கும். இவ்விதம் ராகு தசையும் நடந்து, திருமண மும் மிகவும் தள்ளிப்போகும் ஜாதகர்- ஜாதகி கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணியளவில் ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி 27 வாரங்கள் நெய்தீபமேற்றி வர திருமணம் நடக்கும்.

* பி. சிவராஜ பாண்டியன், மெய்யூர், உடன்குடி, தூத்துக்குடி.

எனது ஜாதகத்தையும், எனது குடும்பத்தில் உள்ளவர்கள் ஜாதகத்தையும் அனுப்பியுள்ளேன். என்னுடைய ஆயுள் பற்றியும், மற்றவர்களின் திருமணம், எதிர்காலம் பற்றியும் கூறவும்.

நீங்கள் 23-4-1955-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். தங்களது ஆயுள் ஸ்தானாதிபதி குரு 12-ஆமிடத்தில் உச்சம். ஆயுள் காரகன் சனி உச்சமாகி வக்ரம். எனவே நீசம். இது "இருக்கு, ஆ

* ஆர். லதா, சென்னை.

என் மகன் கௌசிக் நாகராஜன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் எப்போது நடக்கும்?

உங்கள் மகன் 16-2-1987-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, உத்திர நட்சத்திரம். இந்த ஜாதகரின் 7-ஆம் அதிபதி சூரியன் லக்னத்தில். எனவே கண்டிப்பாகத் திருமணம் நடக்கும். எனினும் லக்னாதிபதி சனி 7-ஆம் அதிபதி யுடன் சம்பந்தம் பெறாமல், 11-ஆம் அதிபதி யுடன் சம்பந்தம் பெறுகிறார். லக்னத்துக்கு நாகதோஷம் உள்ளது. நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி. இதில் சனி ராசிக்கு 7-ல் கும்பத்துக்கு வந்தவுடன் திருமணம் நடக்கும். பெண்ணுக்கு இது மறுமணமாகவே இருக்கும். சனி, சந்திரன் இணைவு இவ்வித மறுமணத்தை மட்டுமே நடத்திவைக்கும். இவ்விதம் ராகு தசையும் நடந்து, திருமண மும் மிகவும் தள்ளிப்போகும் ஜாதகர்- ஜாதகி கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணியளவில் ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி 27 வாரங்கள் நெய்தீபமேற்றி வர திருமணம் நடக்கும்.

* பி. சிவராஜ பாண்டியன், மெய்யூர், உடன்குடி, தூத்துக்குடி.

எனது ஜாதகத்தையும், எனது குடும்பத்தில் உள்ளவர்கள் ஜாதகத்தையும் அனுப்பியுள்ளேன். என்னுடைய ஆயுள் பற்றியும், மற்றவர்களின் திருமணம், எதிர்காலம் பற்றியும் கூறவும்.

நீங்கள் 23-4-1955-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். தங்களது ஆயுள் ஸ்தானாதிபதி குரு 12-ஆமிடத்தில் உச்சம். ஆயுள் காரகன் சனி உச்சமாகி வக்ரம். எனவே நீசம். இது "இருக்கு, ஆனா இல்லை' என்ற கதை யில், உங்கள் ஆயுள் பாவ அமைப்பு உள்ளது. நடப்பு குருதசை 2023, மார்ச் மாதத்துடன் பூர்த்தியாகிறது. பின் சனி தசை ஆரம்பம். இந்த சனி அம்சத்தில் நீசமாக உள்ளார். சனி வக்ரமாக உள்ளதால், உச்சமென்று எடுத்துக்கொள்ளலாம். இதனால் சனி தசையில் அவ்வப்போது உடம்பு சரியில்லாமலிருந்து பின் சுகமாகும். மேலும் எமதர்மராஜா அவ்வப்போது வந்து, "ஸாரிப்பா, தவறுதலா வந்துட்டேன்; பெறகு வர்றேன்' என்று குழப்பமாகித் திரும்பிப் போய் விடுவார். உங்கள் ஜாதக அமைப்பு எமனையே மண்டைகாய வைத்துவிடும். அப்புறமென்ன? நித்திய கண்டம், பூரண ஆயுசாக சனி தசையை ஒரே தாண்டாக தாண்டிவிடுவீர்கள். இதற்குக் காரணம். 8-ஆமிடத்தை குரு பார்ப்பதும், சனிபகவான், 8-ஆமிட அதிபதி குருவைப் பார்ப்பதுமாகும். இவ்விதம் ஆயுள்பற்றிய கேள்வியும், சிந்தனையும் இருப்பவர்கள் திருவாரூர்- நாகப்பட்டினம் வழி, காரையூர் சனீஸ்வர வாசல்சென்று சிவனையும், தேவி நாரயணி அம்பாளையும், சனீஸ்வரரையும், கால பைரவரையும் வணங்கவேண்டும். இது எமதர்மன் வழிபட்ட, அவரால் ஆயுள் நீட்டிப்பு கிடைக்குமென்று அருளிய தலம்.

* வெங்கடேஸ்வரன், தூத்துக்குடி.

என் திருமணம் மற்றும் வருங்காலம் எப்படியிருக்கும்?

18-10-1994-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. 5, 7-ஆம் அதிபதிகள் இணைவு. எனவே விருப்பத் திருமணமாக அமையும். நடப்பு சுக்கிர தசை. இதில் ராகு புக்தி 2024, ஜனவரிவரை. இதற்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளார். உங்களது யோசனைகள் ஓரளவு நல்லவிதமாக அமைந்தால் அதனை உடனே நிறைவேற்றிவிடவேணடும். மேற்கண்ட ஜாதகரைப்போல் 7-ஆமிடத்தில் நிறைய கிரகங்கள் அமையப் பெற்றவர்கள் பாண்டிநாட்டு நவதிருப்பதிகளையும் வணங்குவது நல்லது.

aa

* எஸ். விக்னேஸ்வரன், தூத்துக்குடி.

திருமணம் மற்றும் வருங்காலம் குறித்துக் கூறவும்.

29-3-1992-ல் பிறந்தவர். தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். ராசியில் கேது, 7-ல் ராகு. எனவே நாகதோஷம் உள்ளது. ராசிக்கு 2-ல் செவ்வாய், லக்னத்துக்கு 7-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷ முண்டு. இதன்படி நாகதோஷம், செவ்வாய் தோஷமுள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டும். நடப்பு குரு தசை. 2023, ஜனவரியில் சனி புக்தி ஆரம்பம். அதில் கண்டிப்பாக திருமணம் முடிந்துவிடும். பெண் உங்கள் இனத்தில், வெளியூர், வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணாக அமைவார். உங்களுக்கு 44 வயதுவரை குரு தசை நடக்கும். இதில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கப்பெறு வீர்கள். குலதெய்வத்துக்கு நன்கு வேண்டிக் கொண்டால், கொஞ்சமாக கோபப்படுகிற பெண் கிடைப்பார். இவரது ஜாதகத்தில் செவ்வாய் குருவைப் பார்க்கிறார். இவ்வித அமைப்புள்ளவர்கள் குருவும் செவ்வாயும் இணைந்திருக்கும் குருமங்களத் தலமான, தூத்துக்குடி கழுகு மலை, கழுகாசல மூர்த்தி கோவிலுக்குச் சென்று வணங்குவது நல்லது.

* நரேஷ்பாபு, தூத்துக்குடி.

திருமணம் மற்றும் வருங்காலம் எவ்வாறு அமையும்?

7-3-1991-ல் பிறந்தவர். கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னத்தில் கேது, 7-ல் ராகு. எனவே நாகதோஷம் உள்ளது. ராசிக்கு 7-ல் செவ்வாய். அதனால் செவ்வாய் தோஷ ஜாதகம். உங்களது 7-ஆம் வீடு எனும் களஸ்திர ஸ்தானத்தில் சனியும் ராகுவும் ஒரே நட்சத்திர பாதத்தில் உள்ளனர். சந்திரன் சனி சாரம் பெறுகிறார். எனவே திருமணம் என்பது சற்று தாமதம் மற்றும் கலப்பு மணத்திற்கு வழிவகுக்கும். தாலி தானம் அவசியம். மேற்கண்ட அமைப்புப்படி, களஸ்திர தோஷம் கடுமையாக உள்ளவர்கள், திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி சென்று பரிகாரம் செய்யவேண்டும். கருட வழிபாடு நல்லது. திருமணம் முடியும்வரையாவது சனிக்கிழமைதோறும். பைரவருக்கு மிளகு முடிச்சிட்ட இலுப்பை எண்ணெய் அகல் விளக்கில், திரிபோட்டு விளக்கேற்றவும். ஒரு முறை கும்பகோணம் ஆவூர் சென்றுவருவது நல்லது. இதுபோன்ற ஜாதகம் உள்ளவர்களுக்கு பார்க்கும் வரனின் ஆயுள் பாவத்தை நன்கு கவனித்துப் பின் சேர்க்கவேண்டும்.

* முத்துக்குமாரவேல்.

திருமணம் மற்றும் எதிர்காலம் குறித்துக் கூறவும்.

22-7-1997-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. உங்கள் ஜாதக அமைப்புப்படி, விருப்பத் திருமணம் அமை யும். ஏழரைச்சனி நடந்துகொண்டுள்ளது. நடப்பு குரு தசையில் சனி புக்தி. அடுத்துவரும் புதன் புக்தியில் திருமணம் நடக்கும். நடப்பு குரு தசை நீசபங்கம் பெற்று நடக்கிறது. இதில் எல்லா செயல்களும் முதலில் தடையுண்டாகி, பின் சுபமாக நடக்கும். இவ்விதம், திருமணத்திற்குக் காத்திருக்கும் ஜாதகர்களுக்கு குரு தசை நடந்துகொண்டி ருந்தால், இவர்கள் திருப்பனந்தாள் திருலோக்கி தலம் சென்று வழிபடுவது நல்லது. அருகிலுள்ள சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமைதோறும் வணங்கவேண்டும். திருச்செந்தூர் சென்று வழிபடுவது சிறப்பு.

* எம், மாரியப்பன், விருதுநகர்.

என் தம்பி மகள் கே. தேவியின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் மிக தாமதமாகிறது. திருமணம் விரைவில் கைகூடவும். திருமண வாழ்வு நன்கு அமையவும் வழிகாட்ட வேண்டுகிறோம்.

தம்பி மகள் 5-11-1986-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. சந்திரன், சனி இணைவு. எனவே திருமண தாமதமாகிறது. மேலும், களத்திரகாரகன் சுக்கிரன், சனி- கேது என்ற இரு பாவியரிடையே சிக்கி பாப கர்த்தாரி யோகம் பெறுகிறார். எனினும் குருபார்வை சுக்கிரனுக்கு இருப்பதால் தாமதமாகவேனும் திருமணம் நடந்துவிடும். நடப்பு சூரிய தசை. இதில் குருபுக்தி 2023, ஏப்ரல் வரை. இதற்குள் மணம் முடிய வாய்ப்புண்டு. இவ்விதம் சுக்கிரன் பலமின்றி இருப்பவர்கள் ராஜபாளையம்- சங்கரன் கோவில் வழியிலுள்ள கரிவலம்வந்த நல்லூர் சென்று வழிபடவும். திருவேள்விக்குடி சென்றும் வணங்கவும். அருகிலுள்ள கோவிலில் மகாலட்சுமித் தாயாருக்கு நெய் விளக்கேற்றவும்.

செல்: 94449 61845

bala060123
இதையும் படியுங்கள்
Subscribe